மேலும் அறிய

‛கம்பீரக் குரலா... கந்தர்வக் குரலா..’ சிலிர்க்க வைக்கும் சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் பிறந்தநாள் இன்று!

சீர்காழி கோவிந்தராஜன் என்ற அந்தப் பெயருடனே ஒட்டிக்கொள்வது தான் கம்பீரம் என்ற வார்த்தைக்கான சிறப்பு.

எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்
கண்ணன் எங்கிருந்தோ வந்தான்

இந்த கம்பீரக் குரலைக் கேட்டு கரையாதோர் உண்டோ!

திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்..

இந்தக் கந்தர்வக் குரலைக் கேட்டு பக்தியில் உருகாதோரும் உண்டோ?

ஆம், சீர்காழி கோவிந்தராஜன் என்ற அந்தப் பெயருடனே ஒட்டிக்கொள்வது தான் கம்பீரம் என்ற வார்த்தைக்கான சிறப்பு.

பிறப்பு: சீர்காழி தான் கோவிந்தராஜனின் சொந்த ஊர். 1988ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி சிவசிதம்பரம், அவையம்மாள் தம்பதிக்குப் பிறந்தார். சீர்காழி வாணிவிலாஸ் பாடசாலையில் கல்வி பயின்றார். சிறுவயதிலிருந்தே வாய்ப்பாட்டில் நாட்டம் ஏற்பட அதில் தனது திறமையை வளர்த்துக் கொண்டார். இசைக்கல்வியை சென்னை இசைக்கல்லூரியில் பயின்றார். இளம் வயதில் தேவி நாடக சபா மற்றும் பாய்ஸ் கம்பெனியில் நடிகராகப் பணியாற்றினார். ஆனால் பாட்டு தான் அவர் வேட்கை. இசை தான் அவர் மூச்சி என்றிருந்தால் திரையிசை வாய்ப்பை நாடினார். 1953 இல் பொன்வயல் என்ற படத்துக்காக சிரிப்புத் தான் வருகுதைய்யா எனத்தொடங்கும் பாடல் தான் அவரின் முதல் பாடல். அதன் பின்னர் திரைவானில் அவர் ஒரு நட்சித்தரமாக மின்னத் தொடங்கினார்.

எம்.வேணு, கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி, ஜி.ராமநாதன் எனப் பல இசையமைப்பாளர்களின் இசையில் அற்புதமான பாடல்களைப் பாடினார். 

அமுதும் தேனும் எதற்கு, மாட்டுக்கார வேலா, ஓடம் நதியினிலே, கண்ணன் வந்தான், தேவன் கோயில் மணியோசை போன்ற பாடல்களைப் பாடினார். இன்றும் அத்தனையும் கேட்பதற்கு அமுதும் தேனும் ரகம் தான்.

நடிகர்களைத் தாண்டி நிற்கும் முகம்:

சீர்காழி கோவிந்தராஜனின் குரல் தனித்துவமானது. அது எத்தனை தனித்துவமானது என்றால் எந்த நடிகருக்காக அவர் பாடினாலும் அந்த நடிகரின் முகத்தைத் தாண்டியும் தனது முகத்தை மேலோங்கச் செய்யும் கவித்துவமானது. சீர்காழியின் பாடல்களுக்காகவே ஹிட்டான படங்களும் உண்டு. சீர்காழியின் பாடல் இடம்பெறுவதும் படத்திற்கான சந்தை மதிப்பின் அடையாளமாக மாறியது. 

சீர்காழியின் குரலில் தமிழ் அவ்வளவு இனிமையாக இருக்கும். ழ,ல,ள வேறுபாடும் ந,ண,ன வேறுபாடும் அத்தனைச் சிறப்பாய் இருக்கும். மொழியை பிறழாமல் உச்சரிப்பதும் கூட தெய்வாம்சம் தான். 

அதைவிடவும், ஒரு பெரிய கூட்டத்தில் ஒலிப்பெருக்கி இல்லாமலும் கூட அவரால் பாடி அசத்த முடியும். தத்துவப் பாடல்களும், தெய்வீக ராகங்களும் சீர்காழியின் குரலில் இன்றும் இனிக்கிறது.

திருக்கோயில்களில் சீர்காழியின் பாடலைக் கேட்கும்போதெல்லாம் பக்தியுணர்வு கூடிவிடும்.

நகைச்சுவைக்கு ‘காதலிக்க நேரமில்லை’, தேசபக்திக்கு ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே, சோகத்திற்கு ‘ஆடி அடங்கும் வாழ்க்கையாடா’, சவாலுக்கு ‘வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா’ மற்றும் ‘சங்கே முழங்கு’, பக்திக்கு ‘அறுபடை வீடுகொண்ட திருமுருகா’, தத்துவத்திற்கு ‘காசிக்குப் போகும் சன்யாசி’ ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ போன்ற பாடல்கள் அவரது குரலில் காலத்தால் அழிக்க முடியாத காவியங்கள்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
சத்தமே இல்லாமல் தொடங்கிய ரஜினிகாந்த் பட ஷுட்டிங்! தலைவர் 173 ஆட்டம் ஆரம்பம்!
சத்தமே இல்லாமல் தொடங்கிய ரஜினிகாந்த் பட ஷுட்டிங்! தலைவர் 173 ஆட்டம் ஆரம்பம்!
முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த மறைந்த இயக்குநர் பாரதிராஜா மகள்!
முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த மறைந்த இயக்குநர் பாரதிராஜா மகள்!
குடை பிடிக்கும் நபர் பாவம்..அரசியல் பேசுனா மட்டும் போதுமா..வைரல் வீடியோவால் சர்ச்சையில் எச் வினோத்
குடை பிடிக்கும் நபர் பாவம்..அரசியல் பேசுனா மட்டும் போதுமா..வைரல் வீடியோவால் சர்ச்சையில் எச் வினோத்

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: மீண்டும் சென்னையில் மழையா? 5 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - இன்றைய தமிழக வானிலை
மீண்டும் சென்னையில் மழையா? 5 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - இன்றைய தமிழக வானிலை
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
Embed widget