மேலும் அறிய

S.J. Suryah: 5 ஆண்டுகால போராட்டம்... குழந்தையைப் போல அழுது புரண்ட எஸ்.ஜே.சூர்யா..என்ன காரணம்?

அமிதாப் பச்சன் சாருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்பை ருசிப்பதற்கு முன்னரே அது கை நழுவிவிட்டது. அந்த சமயத்தில் சிறு குழந்தையை போல தரையில் உருண்டு அழுதேன்.

தமிழ் சினிமா இயக்குநர்களில் மிகவும் பிரபலமானவராக பல ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா. விரும்பப்பட்ட ஒரு இயக்குநராக இருந்தவர் திடீரென சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டு பின்னர் நடிகராக என்ட்ரி கொடுத்தார். தற்போது ஒரு நடிகராக பல விதமான கதாபாத்திரங்களில் நிரூபித்து வருகிறார். 

அமிதாப் தமிழ் சினிமாவில் அறிமுகம் :

அந்த வகையில் எஸ்.ஜே. சூர்யாவிற்கு நடிகர் அமிதாப் பச்சனுடன் 'தேரா யார் ஹூன் மைன்' என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் தமிழ்வண்ணன் இயக்கத்தில் தமிழ் மற்றும் ஹிந்தி என இரு மொழி படமாக 2018ம் ஆண்டு தொடங்கிய படப்பிடிப்பு ஒரு சில பிரச்சனைகளால் கிடப்பில் போடப்பட்டது. தமிழில் 'உயர்ந்த மனிதன்' என்ற பெயரில் உருவான இப்படத்தின் மூலம் நடிகர் அமிதாப் பச்சன் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருந்தார். பத்து நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்ற பின்னர் அது கிடப்பில் போடப்பட்டது குறித்த தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். 

 

S.J. Suryah: 5 ஆண்டுகால போராட்டம்... குழந்தையைப் போல அழுது புரண்ட எஸ்.ஜே.சூர்யா..என்ன காரணம்?

தாங்க முடியாத துக்கம் :

அமிதாப் பச்சன் சாருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்பை ருசிப்பதற்கு முன்னரே அது கை நழுவிவிட்டது. அப்படத்தை தொடர்வதற்கான அனைத்து முயற்சிகளை முடிந்த வரையில் எடுத்தும் பலனில்லாமல் போனது. அதற்காக நான் ஐந்து ஆண்டுகளாக கடுமையாக போராடினேன். அந்த சமயத்தில் சிறு குழந்தையை போல நான் தரையில் உருண்டு உருண்டு அழுதேன். என்னால் அதை தாங்கி கொள்ளவே முடியவில்லை. 

கடவுள் கொடுத்த வலி :

ஏன் கடவுள் நமக்கு இவ்வளவு வலி கொடுக்கிறான், வேலையை தானே செய்தோம் என சொல்லி உடைந்து போனதாக தெரிவித்து இருந்தார். மேலும் கடவுள் ஒரு கதவை மூடினாலும் மற்றுமொரு கதவை திறந்து பல நல்ல நல்ல படங்களை தந்தார். கடவுள் என்னை இயக்குநராக உயர்ந்த நிலையில் கொண்டு சென்றார் ஆனால் ஒரு நடிகராக நான் சினிமா துறையில் உச்சத்தை தொட ஆசைப்பட்டேன். அதற்கு நான் கடுமையாக உழைத்து கீழே விழுந்து அடிபட்டேன். ரத்தம் கசிந்த பிறகு அதற்கு கட்டு போட்டு கொண்டு மீண்டும் ஓட துவங்கிவிட்டேன்.  
 
கோமாளி போல நடந்து கொள்கிறார்  :

நியூ மற்றும் அன்பே ஆருயிரே திரைப்படங்கள் எஸ்.ஜே. சூர்யாவை ஒரு  நடிகராக நிலைநிறுத்தியது. அவரே அதை இயக்கியிருந்தார். ரசிகர்களும் அப்படங்களுக்கு நல்ல வரவேற்பை கொடுத்தனர். ஆனால் திரையுலகில் இருக்கும் பெரிய ஜாம்பவான்கள் 'அவர் ஏன் நடிக்கிறார்? கோமாளி போல் கேலிக்கூத்தாக நடந்து கொள்கிறார்.' என விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். 

நன்றாக நடிக்க பயிற்சி :

மற்ற இயக்குநர்களின் படங்களில் நடிக்கையில் நான் ஒரு பயிற்சி பெற்ற நடிகர் அல்ல என்பதை உணர்ந்தேன். ஒரு பயிற்சியாளராக இருப்பதற்கும், ஒரு விளையாட்டு வீரராக இருப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன என்பதை அப்போது நான் தெளிவாக புரிந்து கொண்டேன். எனவே ஒரு நடிகருக்கு தேவையான அனைத்து அம்சங்களை பயிற்சி எடுத்து கொண்டு 'இசை' மற்றும் 'இறைவி' படத்தின் நடித்தேன். அதனை தொடர்ந்து என்னுடைய நடிப்பை அங்கீகரித்த பிறகு எனக்கு பட வாய்ப்புகள் வர துவங்கியதால் தொடர்ந்து நடித்து வருகிறேன் என எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
ABP Premium

வீடியோ

’’உங்க இஷ்டத்துக்கு தீர்ப்பு வழங்க முடியுமா?’’ஜனநாயகன் vs நீதிபதிகள் COURT-ல் நடந்தது என்ன? | Jana Nayagan Judgement
Aarti Ravi vs Ravi Mohan | ”சுயமரியாதை பத்தி நீ பேசலாமா?”ஒரு உண்மையை சொல்றேன்”ரவி மோகன் Vs ஆர்த்தி
Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
"ரூ.3000 பணத்துக்கு ஏமாறாதீர்கள்; உண்மையான ஹீரோ அன்புமணி தான்!" - சௌமியா அன்புமணி அதிரடி பேச்சு...!
TN RAIN ALERT: இன்று 5 மாவட்டங்களுக்கு டார்கெட்.! நாளை சென்னைக்கு ஸ்கெட்ச் போட்ட புயல் சின்னம்- வானிலை மையம் அலர்ட்
இன்று 5 மாவட்டங்களுக்கு டார்கெட்.! நாளை சென்னைக்கு ஸ்கெட்ச் போட்ட புயல் சின்னம்- வானிலை மையம் அலர்ட்
Pulsar NS160: இளசுகளை கவரும் Pulsar NS160.. விலையும், மைலேஜும் எப்படி?
Pulsar NS160: இளசுகளை கவரும் Pulsar NS160.. விலையும், மைலேஜும் எப்படி?
சென்னை 28 படத்திற்கு வெங்கட்பிரபு வைத்த உண்மையான பெயர் என்ன?
சென்னை 28 படத்திற்கு வெங்கட்பிரபு வைத்த உண்மையான பெயர் என்ன?
Embed widget