மேலும் அறிய

Rishab Shetty: 'எத்தனை கோடி கொடுத்தாலும் பிற மொழிகளில் நடிக்க மாட்டேன்' காந்தாரா நாயகன் திட்டவட்டம்!

Rishab shetty : எத்தனை கோடி கொடுத்தாலும் நான் பிற மொழி படங்களில் நடிக்க மாட்டேன் என்றும், கன்னட ரசிகர்களுக்கு நன்றி உள்ளவனாக இருப்பேன் என்றும் ரிஷப்ஷெட்டி பேசியுள்ளார்.

ஹோம்பாளே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த திரைப்படம் 'காந்தாரா'. 2022ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வரலாறு காணாத வெற்றியை பெற்றது. படத்தின் பாடல்களும் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்தது. 

 

Rishab Shetty: 'எத்தனை கோடி கொடுத்தாலும் பிற மொழிகளில் நடிக்க மாட்டேன்' காந்தாரா நாயகன் திட்டவட்டம்!
காந்தாரா சேப்டர் 1 :

குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் 300 கோடிக்கும் மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்தது. கர்நாடக மாநிலத்தின் மலைவாழ் மக்களின் வட்டார தெய்வத்தை அடிப்படையாக கொண்டு உருவான கதை. இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என ஏற்கனவே ரிஷப் ஷெட்டி அறிவித்த நிலையில் அப்படத்தில் மிரட்டலான அறிமுக டீஸர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. 

காந்தாரா படத்தில் காட்சிபடுத்தப்பட்ட கதைக்கு முன்னதாக நடந்த கதையை மையமாக வைத்து 'காந்தாரா 2' உருவாக உள்ளது. 'காந்தாரா சேப்டர் 1' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் பூஜையுடன் துவங்கியதாக கூறப்படுகிறது. சுமார் 100 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இப்படம் 7 மொழிகளில் உலக அளவில் வெளியாக உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

Rishab Shetty: 'எத்தனை கோடி கொடுத்தாலும் பிற மொழிகளில் நடிக்க மாட்டேன்' காந்தாரா நாயகன் திட்டவட்டம்!

ரிஷப் ஷெட்டியின் கருத்து :

அந்த வகையில் சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ரிஷப் ஷெட்டி "இதுவரையில் நான் எத்தனையோ படங்களில் நடித்துள்ளேன் ஆனால் காந்தாரா திரைப்படம் தான் என்னை கன்னட ரசிகர்களையும் தாண்டி பிற மொழி ரசிகர்களுக்கும் கொண்டு சேர்த்தது. நான் கன்னட படங்களில் மட்டுமே நடிப்பேன். கன்னட மக்கள் தான் எனக்கு வாழ்க்கை கொடுத்தனர். அதற்கு நான் என்றும் நன்றி உள்ளவனாக இருப்பேன். 

பிற மொழி படங்களில் பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. அவை அனைத்தையும் நான் நிராகரித்து விட்டேன். எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் பிறமொழி படங்களில் நடிக்க மாட்டேன். கன்னட மொழி படங்களில் மட்டுமே நடிப்பேன்" என வெளிப்படையாகவே பேசி இருந்தார். அவரின் இந்த மொழி பற்று கன்னட ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
646
Active
28426
Recovered
157
Deaths
Last Updated: Sat 12 July, 2025 at 10:55 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Gingee Fort: ”இதுக்கு பேர் தான் திருட்டு” வாழ்த்து சொல்றதுலாம் நியாயமா மோடி சார்? செஞ்சிக்கோட்டை யாருக்கு சொந்தம்?
Gingee Fort: ”இதுக்கு பேர் தான் திருட்டு” வாழ்த்து சொல்றதுலாம் நியாயமா மோடி சார்? செஞ்சிக்கோட்டை யாருக்கு சொந்தம்?
Ramadoss vs Anbumani: மகனுக்கு எதிராக மகளை இறக்கும் ராமதாஸ்! கட்சியை கன்ட்ரோல் எடுக்க ஐயாவின் புது ரூட்டு!
Ramadoss vs Anbumani: மகனுக்கு எதிராக மகளை இறக்கும் ராமதாஸ்! கட்சியை கன்ட்ரோல் எடுக்க ஐயாவின் புது ரூட்டு!
Gingee Fort: வேலைன்னா இப்படி இருக்கணும் - செஞ்சிக் கோட்டைக்கு UNESCO அங்கீகாரம், வாவ் சொன்ன சிவாஜி
Gingee Fort: வேலைன்னா இப்படி இருக்கணும் - செஞ்சிக் கோட்டைக்கு UNESCO அங்கீகாரம், வாவ் சொன்ன சிவாஜி
Tamilnadu Roundup: தமிழ்நாடு முழுவதும் குரூப் 4 தேர்வு.. டிஜிபியிடம் ராமதாஸ் புகார் - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: தமிழ்நாடு முழுவதும் குரூப் 4 தேர்வு.. டிஜிபியிடம் ராமதாஸ் புகார் - தமிழகத்தில் இதுவரை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gingee Fort: ”இதுக்கு பேர் தான் திருட்டு” வாழ்த்து சொல்றதுலாம் நியாயமா மோடி சார்? செஞ்சிக்கோட்டை யாருக்கு சொந்தம்?
Gingee Fort: ”இதுக்கு பேர் தான் திருட்டு” வாழ்த்து சொல்றதுலாம் நியாயமா மோடி சார்? செஞ்சிக்கோட்டை யாருக்கு சொந்தம்?
Ramadoss vs Anbumani: மகனுக்கு எதிராக மகளை இறக்கும் ராமதாஸ்! கட்சியை கன்ட்ரோல் எடுக்க ஐயாவின் புது ரூட்டு!
Ramadoss vs Anbumani: மகனுக்கு எதிராக மகளை இறக்கும் ராமதாஸ்! கட்சியை கன்ட்ரோல் எடுக்க ஐயாவின் புது ரூட்டு!
Gingee Fort: வேலைன்னா இப்படி இருக்கணும் - செஞ்சிக் கோட்டைக்கு UNESCO அங்கீகாரம், வாவ் சொன்ன சிவாஜி
Gingee Fort: வேலைன்னா இப்படி இருக்கணும் - செஞ்சிக் கோட்டைக்கு UNESCO அங்கீகாரம், வாவ் சொன்ன சிவாஜி
Tamilnadu Roundup: தமிழ்நாடு முழுவதும் குரூப் 4 தேர்வு.. டிஜிபியிடம் ராமதாஸ் புகார் - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: தமிழ்நாடு முழுவதும் குரூப் 4 தேர்வு.. டிஜிபியிடம் ராமதாஸ் புகார் - தமிழகத்தில் இதுவரை
புதுச்சேரியில் அதிர்ச்சி! டெல்லி போலீஸ் போல் நடித்து பேராசிரியரிடம் ரூ.9.69 லட்சம் மோசடி!
புதுச்சேரியில் அதிர்ச்சி! டெல்லி போலீஸ் போல் நடித்து பேராசிரியரிடம் ரூ.9.69 லட்சம் மோசடி!
PM Modi: ”செஞ்ச வரைக்கும் போதும், நீங்க கிளம்புங்க” பிரதமர் மோடிக்கு செண்ட் ஆஃப் கொடுக்க RSS தீவிரம்?
PM Modi: ”செஞ்ச வரைக்கும் போதும், நீங்க கிளம்புங்க” பிரதமர் மோடிக்கு செண்ட் ஆஃப் கொடுக்க RSS தீவிரம்?
Diabetes: சர்க்கரை வியாதியா? யூகலிப்டஸ் எண்ணெய் மசாஜே போதும் - சென்னை மருத்துவர்கள் கண்டுபிடிப்பு
Diabetes: சர்க்கரை வியாதியா? யூகலிப்டஸ் எண்ணெய் மசாஜே போதும் - சென்னை மருத்துவர்கள் கண்டுபிடிப்பு
Air Flight Crash Report: 270 பேரை காவு வாங்கிய ஏர் இந்தியா விமான விபத்து -  ”32 விநாடிகளில்..” காரணம் இதுதான் - அறிக்கை
Air Flight Crash Report: 270 பேரை காவு வாங்கிய ஏர் இந்தியா விமான விபத்து - ”32 விநாடிகளில்..” காரணம் இதுதான் - அறிக்கை
Embed widget