மேலும் அறிய
Rajinikanth : 45 சவரன் நகையை திருப்பி கொடுத்த துப்புரவு பணியாளருக்கு தங்க சங்கிலி கொடுத்த ரஜினி
துப்புரவு பணியின் போது குப்பையில் கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை உரியவரிடம் சேர்ப்பித்த பெண்ணுக்கு நடிகர் ரஜினிகாந்த் தங்க சங்கிலி பரிசளித்துள்ளார்

ரஜினிகாந்த்
Source : X
துப்புரவு பணியின் போது குப்பையில் கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை உரியவரிடம் சேர்ப்பிக்கச் செய்த திருமதி பத்மா அவர்களை வீட்டிற்கு அழைத்து பாராட்டி தங்க சங்கிலி அணிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த் .
சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறவர் பத்மா. இவர் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி தி நகர் வண்டிக்காரன் சாலையில் தனது வழக்கமான பணிக்கு சென்றபோது பை ஒன்றை கண்டெடுத்தார். அதில் ஐஸ்கிரீம் டப்பாவிற்கு ரூ 45 லட்சம் மதிப்பிலான 45 சவரன் தங்கை நகை இருந்துள்ளது. தனது மேலாளர் மூலம் இந்த நகைகளை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் பத்மா. இதனை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் பத்மாவை நேரில் சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து கெளரவித்தார். மேலும் தமிழ்நாடு அரசு சார்பாக ஒரு லட்சம் மதிப்பிலான காசோலை பத்மாவுக்கு வழங்கப்பட்டது.
மேலும் தமிழக அஞ்சல் துறையின் மதிய கோட்டம் பத்மாவின் புகைப்படத்துடன் கூடிய சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டு அவரை கெளரவித்தது. இவர்களைத் தொடர்ந்து தற்போது நடிகர் ரஜினிகாந்த் தூய்மை பணியாளர் பத்மாவை தனது வீட்டிற்கு அழைத்து அவருக்கு பட்டுப்புடவை மற்றும் தங்க சங்கிலி அணிவித்து கெளரவித்துள்ளார்.
ரஜினியை சந்தித்து பற்றி பத்மா
ரஜினிகாந்தை சந்தித்து குறித்து பத்மா கூறுகையில் " ரஜினியை நான் சினிமாவில் தான் பார்த்திருக்கிறேன். அவரை பார்க்கவே முடியாது என்று நினைத்தபோது அவரை நேரில் பார்த்தது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. எனக்கு என்ன சொல்ல வேண்டும் என்பதே தெரியவில்லை. எங்கள் மொத்த குடும்பமும் ரஜினி ரசிகர்கள் தான்" என்று கூறினார்.
In a heartwarming gesture, #SuperstarRajinikanth honours frontline worker #Padma with a gold chain, recognising her as a true good Samaritan. 🌟#ThalaivarNirantharam #ThalaivarForLife @rajinikanth @ash_rajinikanth @soundaryaarajni @ParasRiazAhmed1 @V4umedia_ pic.twitter.com/OzXa1Pn2Sg
— RIAZ K AHMED (@RIAZtheboss) February 3, 2026
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement























