![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Rajini 169: 6 மணிக்கு மாஸ் அப்டேட்! ரஜினி 169 அறிவிப்பா? ட்விட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள்!!
'பீஸ்ட்' படத்தை அடுத்து, ரஜினியை வைத்து புதிய படத்தை நெல்சன் இயக்க இருப்பதாக செய்தி வெளியானது. இதனால், அதிகாரபூர்வ தகவலுக்காக ரஜினி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
![Rajini 169: 6 மணிக்கு மாஸ் அப்டேட்! ரஜினி 169 அறிவிப்பா? ட்விட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள்!! Rajini 169: sun pictures set to release an important announcement today at 6 pm Rajini 169: 6 மணிக்கு மாஸ் அப்டேட்! ரஜினி 169 அறிவிப்பா? ட்விட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள்!!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/10/4e7d8819d101e56026faeebbb9ce95b1_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ரஜினிகாந்தின் அடுத்தப்படம் தொடர்பான தகவல்கள் தினம் தினம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சிவா இயக்கத்தில் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படத்தை அடுத்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியானது. ரஜினி - நெல்சன் - அனிருத் கூட்டணியில் அமையும் இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வர இருப்பதாக சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறது. இது, நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாக இருக்கும் அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பு செய்தியாகதான் இருக்கும் என சினிமா வட்டாரம் யூகித்திருக்கிறது. கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கியது அடுத்து விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கி வருகிறார். அடுத்ததாக, ரஜினியை வைத்து அவர் இயக்க இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவலால் ரஜினி ரசிகர்கள் அதிகாரபூர்வ தகவலுக்காக காத்திருக்கின்றனர்.
Announcement alert 🚨
— Sun Pictures (@sunpictures) February 10, 2022
Today @ 6 PM pic.twitter.com/yijX9z36vI
இந்தப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் அல்லது மே மாத இறுதியில் தொடங்கும் என்றும், படம் வருகிற டிசம்பர் மாதம் அல்லது அடுத்து வருட ஜனவரி மாதம் திரைக்கு வரும் எதிர்பார்க்கப்படுவதாகவும் பல இணையதளங்கள் செய்தி வெளியிட்டன. அந்த தகவலின் அடுத்த அப்டேட் செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அதன்படி, இப்படத்தை பற்றிய அதிகாரபூர்வ தகவல் இன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் பெயரிடப்படாத இந்தப்படத்தை ரசிகர்கள் “தலைவர்169” என்று அவரது ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். கொரோனா சூழ்நிலைகளை பொறுத்து, 5 முதல் 6 மாதங்களில் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அவரது 170 வது படத்திற்காக இயக்குநர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். 169 ஆவது படத்தை முடிப்பதற்குள் ரஜினிகாந்த் 170 படத்தை தேர்வு செய்வதற்கான வேலைகளை முடித்துவிட திட்டமிட்டிருக்கிறாராம். இந்நிலையில், #Thalaivar169 ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)