மேலும் அறிய

Mrunal Thakur: இயக்குநரை கட்டிப்பிடித்து அழுதது ஏன்..? : சீதா ராமம் ஹீரோயின் சொன்னது இதுதான்..

‘சீதாராமம்’ படத்தில் நடித்த தன்னை ஏற்றுக்கொண்ட ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நடிகை மிருணாள் தாகூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

 ‘சீதாராமம்’ படத்தில் நடித்த தன்னை ஏற்றுக்கொண்ட ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நடிகை மிருணாள் தாகூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். 

அவர் வெளியிட்டு இருக்கும் கடிதத்தில், “ சீதாராமம் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டபோதே, இந்தப்படம் மிகவும் ஸ்பெஷலான படமாக இருக்கும் என தெரியும். இந்தக்கதையை கேட்ட உடனே எந்த வித சந்தேகமும் இல்லாமல் நான் நடிக்க ஒத்துக்கொண்டேன். இன்னும் குறிப்பாக, சதீஸ்கரில் ஷூட்டிங்கில் இருக்கும் போது இயக்குநர் கதையை சொன்ன போது நான் அப்படியே உருகிவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். இன்று தெலுங்கு ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொண்டதால்தான் இதைச் சொல்கிறேன்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mrunal Thakur (@mrunalthakur)

படம் வெளியான அன்றைய நாளில் இருந்தே நேரடியாகவும், சமூகவலைதளங்கள் வாயிலாகவும் ரசிகர்கள் அன்பை பொழிந்து வருகின்றனர். அந்த அன்பில் நான் முழ்கிவிட்டேன் என்றே சொல்லலாம். தென்னிந்திய ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொண்டது என்னை உணர்ச்சிவசப்பட வைத்தது. அத்துடன் என்னை நன்றியுள்ளவளாகவும் உணரவைத்தது.

புதிய கதாபாத்திரங்கள் மற்றும் புதிய முயற்சிகளை நான் தேர்வு செய்து நடிக்கும் போது, அதை முழுமனதாக ஏற்றுக்கொள்ளும் ரசிகர்களுக்கு என்னுடைய மிகப்பெரிய நன்றி. சோனியா என்ற கதாபாத்திரத்தில்தான் இந்தப்பயணத்தை நான் ஆரம்பித்த போது, நீங்கள் கொடுத்த அன்பை நான் என்றுமே மறக்க மாட்டேன். இன்று சீதா உங்களுடையவளாகிவிட்டாள். இந்தப்படத்தை பார்த்த போது இயக்குநர் ஹனுசாரை கட்டிப்பிடித்து அழுதேன். ஏனென்றால் அவர் என்னை ஒரு புதிய இடத்தில் பார்க்கவும் ஏற்றுக்கொள்ளவும் செய்தார். தெலுங்கு ரசிகர்களும் என்னை அப்படியே உணரவைத்திருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டு இருக்கிறார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mrunal Thakur (@mrunalthakur)

இயக்குநர் ஹனு ராகவ்புடி இயக்கத்தில் பிரபல நடிகர் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா உள்ளிட்ட பலரது நடிப்பில உருவாகியிருக்கும் திரைப்படம் ‛சீதாராமம்’. தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக நேற்றைய தினம் (ஆகஸ்ட் 5) திரையரங்குகளில் வெளியான இந்தப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது சீதாராமம் திரைப்படம் குறித்தான வசூல் விபரம் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. அதன் படி சீதாராமம் திரைப்படம் உலக அளவில் வெளியான 3 நாட்களில் 25 கோடி வசூல் செய்துள்ளது. முன்னதாக சென்னையில் சீதாராமம் திரைப்படம் வெளியான அன்றைய தினம் 7 லட்சம் ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN School Leave: கனமழை எச்சரிக்கை.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 11 மாவட்டங்களில் கனமழை, சென்னைக்கான எச்சரிக்கை? சென்யார் புயல் நிலவரம், தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 11 மாவட்டங்களில் கனமழை, சென்னைக்கான எச்சரிக்கை? சென்யார் புயல் நிலவரம், தமிழக வானிலை அறிக்கை
நலம் விசாரிப்பது நல்லதல்ல.. சேரனை சந்தித்தும் பேசாமல் சென்றது ஏன்? - பார்த்திபன் விளக்கம்!
நலம் விசாரிப்பது நல்லதல்ல.. சேரனை சந்தித்தும் பேசாமல் சென்றது ஏன்? - பார்த்திபன் விளக்கம்!
Tata Sierra: இதெல்லாம் டாடா கார்களில் இதுவரை இருந்ததே இல்லை - சியாராவின் டாப் 5 டக்கரான அம்சங்கள்
Tata Sierra: இதெல்லாம் டாடா கார்களில் இதுவரை இருந்ததே இல்லை - சியாராவின் டாப் 5 டக்கரான அம்சங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Smriti Mandhana Marriage Postponed | தந்தைக்கு மாரடைப்பு!நின்றுபோன ஸ்மிருதி திருமணம்|Palash Muchchal
விஜய்க்கு NO CHANCE! ”திமுகவுடன் தான் கூட்டணி” ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல்
இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar
சென்னை மக்களே உஷார் அடுத்த இரண்டு நாட்கள்...வானிலை மையம் ALERT | Chennai rain

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 11 மாவட்டங்களில் கனமழை, சென்னைக்கான எச்சரிக்கை? சென்யார் புயல் நிலவரம், தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 11 மாவட்டங்களில் கனமழை, சென்னைக்கான எச்சரிக்கை? சென்யார் புயல் நிலவரம், தமிழக வானிலை அறிக்கை
நலம் விசாரிப்பது நல்லதல்ல.. சேரனை சந்தித்தும் பேசாமல் சென்றது ஏன்? - பார்த்திபன் விளக்கம்!
நலம் விசாரிப்பது நல்லதல்ல.. சேரனை சந்தித்தும் பேசாமல் சென்றது ஏன்? - பார்த்திபன் விளக்கம்!
Tata Sierra: இதெல்லாம் டாடா கார்களில் இதுவரை இருந்ததே இல்லை - சியாராவின் டாப் 5 டக்கரான அம்சங்கள்
Tata Sierra: இதெல்லாம் டாடா கார்களில் இதுவரை இருந்ததே இல்லை - சியாராவின் டாப் 5 டக்கரான அம்சங்கள்
60 வயதிலும் தீராத ஆசை.. வீட்டுக்கே சென்று டார்ச்சர்.. முதிய பெண்மணி கொலை!
60 வயதிலும் தீராத ஆசை.. வீட்டுக்கே சென்று டார்ச்சர்.. முதிய பெண்மணி கொலை!
TN Weather Update: தென் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை அறிக்கை
TN Weather Update: தென் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை அறிக்கை
"உனக்கு என்ன பிரச்சினை, போடா!" - சீமானின் ஆவேசப் பேச்சு: கொலை மிரட்டல் வழக்குப் பதிவு!
செங்கோட்டையன் கோட்டையிலும் நாங்க தான் கெத்து.! எடப்பாடி பழனிசாமி போட்ட செம பிளான்
செங்கோட்டையன் கோட்டையிலும் நாங்க தான் கெத்து.! எடப்பாடி பழனிசாமி போட்ட செம பிளான்
Embed widget