Meenakshi Ponnunga Aug 21: ஷக்திக்கு அதிர்ச்சி கொடுத்த ஜோசியர்.. கல்யாணத்தில் நடக்க போவது என்ன?மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட்
Meenakshi Ponnunga Aug 21:

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.
இந்த சீரியலில் கடந்த சனிக்கிழமை எபிசோடில் பூஜாவுக்கு உண்மைகள் தெரிய வந்த நிலையில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, சக்தியிடம் வெற்றி கல்யாணம் நெருங்குவதால் பயத்துடன் பேச சக்தி சமாதானம் செய்கிறாள். கோயிலில் சக்தி ஒரு ஜோசியரை பார்க்க சென்றார். அதாவது வெற்றிக்கு இரண்டு கல்யாண யோகம் என்று சொன்னதும் சக்தி வருத்தமடைகிறாள்.
சரளாவும் ஜோதிடரை பார்க்க செல்கிறார். அங்கு பூஜாவுக்கு கல்யாணம் நடக்கும் என்று சொன்னதும் சரளாவும் பூஜாவும் சந்தோஷம் அடைகிறார்கள். வெற்றி, கிரி, திடியன் என மூவரும் கல்யாணத்தில் பிரச்சனை ஏற்பட்டால் வேறு என்ன செய்யலாம் என்று திட்டமிட யோசிக்கின்றனர்.
அடுத்ததாக ரங்கநாயகி வீட்டிலிருந்து அனைவரும் கல்யாணத்திற்கு கிளம்புகின்றனர். செல்வ முருகன் வர மாட்டேன் என்று சொல்ல ரங்கநாயகி சமாதானப்படுத்தி அழைத்துச் செல்கிறாள்.
அடுத்ததாக மீனாட்சி சமையல் அனைத்தையும் ரெடி செய்து சாமியின் முன் வைத்து மாப்பிள்ளை வெற்றி நினைத்தபடி அனைத்து திட்டமும் நன்றாக நடக்க வேண்டும் என்று சாமி கும்பிடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது நாளை தெரிய வரும்.
Before You Go
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















