ஷாருக் கான் மாதிரி நடிகனாக ஆசைப்பட்டேன் ஆனால் ஜவுளிகடை பொறுப்பு..ஃபிளாஷ்பேக் சொன்ன லெஜண்ட் சரவணன்
சின்ன வயதில் தனது வீட்டு பிரிட்ஜில் ஷாருக் கான் மற்றும் சல்மான் கான் மாதிரி ஒரு நடிகனாக ஆசைப்பட்டதாக லெஜண்ட் சரவணன் தெரிவித்துள்ளார்

நடிகனாக வேண்டும் என்கிற ஆசை இருந்தாலும் தனது தந்தையின் மீது வைத்திருந்த மரியாதையால் தனது கடையை பார்த்துக்கொள்ள்ளும் பொறுப்பை ஏறுக்கொண்டதாக லீடர் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய லெஜண்ட் சரவணன் தெரிவித்துள்ளார்
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரின் மகனான சரவணன் லெஜண்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். தற்போது துரை செந்தில்குமார் நடிப்பில் அவர் நடித்துள்ள லீடர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. லெஜண்ட் சரவணன், ஷாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், பாயல் ராஜ்புத், லால், பிரபாகரன், அமிர்த ஐயர், VTV கணேஷ், இயல், ஐஸ்வர்யா, மரியம் ஜார்ஜ், நிஷா, “ஆதித்யா” கதிர் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். லெஜண்ட் சரவணா ப்ரோடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.
ஒரே படத்தில் மூன்று நாயகிகள் , ஆக்ஷன் என நாயகனாக அறிமுகமான லெஜண்ட் சரவணன் ரசிகர்கள் மத்தியில் ட்ரோல் மெட்டிரியலாக மாறினார். ஆனால் விமர்சனங்களைப் பற்றி கவலைப்படாமல் தற்போது லீடர் படத்தில் முழுக்க முழுக்க ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ளார். தந்தை மகள் உறவை மைக்கதையாக கொண்டு உருவாகியுள்ளது லீடர். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகனாக வேண்டும் என்பது சிறு வயது ஆசை என்றும் ஆனால் தனது தந்தையின் மீதிருந்த மரியாதையால் கடை பொறுப்புகளை ஏற்றுக்கொண்டது குறித்து அவர் பேசியுள்ளார்.
ஷாருக் கான் , சல்மான் கான் போல் நடிகனாக ஆசை
" சின்ன வயதில் இருந்தே சினிமா மீது எனக்கு பெரும் ஆசை இருந்து வருகிறது. என்னுடைய வீட்டில் பிரிட்ஜில் ஷாருக் கான் மற்றும் சல்மான் புகைப்படங்களை ஒட்டி வைத்திருப்பேன் . அவர்களைப் போல் ஒரு நாள் நானும் பெரிய நடிகனாவேன் என்று என் அம்மாவிடம் சொல்வேன். என் அம்மா சிரிப்பார். என்னுடைய தந்தையார் மேல் மிகப்பெரிய பக்தியும் மரியாதையும் நான் வைத்திருக்கிறேன். அதனால் எங்கள் குடும்ப தொழிலை ஏற்றுக்கொண்டேன். இந்த தொழிலுக்கு என்னுடைய முழு உழைப்பையும் கொடுத்தேன். கடை திறக்கும் போது முதல் ஆளாக கடைக்கு போவேன் , கடைசி ஆளாக வெளியே வருவேன். இன்று சினிமாவில் அப்படிதான் படப்பிடிப்பிற்கு முதல் ஆளாக சென்று கடைசி ஆளாக வருவேன். நான் எதில் இறங்குகிறேனோ அதில் முழு உழைப்பையும் செலுத்துவேன். அது தான் என்னுடைய கேரக்டர் " என்று லெஜண்ட் சரவணன் பேசியுள்ளார்.






















