மேலும் அறிய

Wayanad Landslide: வயநாடு நிலச்சரிவு - கேரள பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் வழங்கிய கமல்ஹாசன்

பிரபலங்கள் வரிசையில் நடிகர் விக்ரம் ரூ.20 லட்சமும், சூர்யா, ஜோதிகா, கார்த்தி சார்பில் ரூ. 50 லட்சமும் கேரளாவுக்கு நிதியுதவி அளித்துள்ளனர். 

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக கேரள முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். 

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவினால் அப்பகுதியே இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகியுள்ளது. இதுவரை நிலச்சரிவினால் அங்கு 316 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காணவில்லை. மீட்புப்பணிகளில் மீட்பு படையினர் 4வது நாளாக ஈடுபட்டுள்ளனர். முண்டக்கை பகுதியில் தெர்மல் ஸ்கேனரை கொண்டு நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை தேடி வருகின்றனர்.  

கேரளா பகுதியே சின்னாப்பின்னமாகியுள்ளதால் நிதியுதவி அளிக்குமாறு அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி கேரளாவுக்கு நிதியுதவியாக வழங்கப்பட்டது. அதேபோல், அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. 

பிரபலங்கள் வரிசையில் நடிகர் விக்ரம் ரூ.20 லட்சமும், சூர்யா, ஜோதிகா, கார்த்தி சார்பில் ரூ. 50 லட்சமும் கேரளாவுக்கு நிதியுதவி அளித்துள்ளனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கேரளா பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் அளித்துள்ளார். 

முன்னதாக, கமல்ஹாசன் வயநாடு நிலச்சரிவு செய்தியை கேட்டு தனது எக்ஸ் தளத்தில் “கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும், வால்பாறையிலும்  நிலச்சரிவினால் ஏற்பட்ட பேரழிவுகள் என் நெஞ்சைப் பதற வைக்கின்றன. தங்களது அன்புக்குரியவர்களையும், வீடு வாசல், உடைமைகளையும் இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். 

பருவநிலை மாற்றத்தின் காரணமாக இயற்கைப் பேரிடர்கள் வழக்கமான நிகழ்வாகிவிட்டன. இதன் தாக்கத்தைப் புரிந்துகொண்டு நாம் அனைவருமே கூட்டாகச் செயலாற்ற வேண்டியது மிக அவசியம். 

ஆபத்துகள் நிறைந்த கடினமான சூழ்நிலையில் தங்களது உயிரைப் பணயம் வைத்து மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினருக்கும், அர்ப்பணிப்புடன் செயலாற்றும் மாநில அரசுகளின் ஊழியர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தும்படி மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Kota Srinivasa Rao Death: காலையிலே சோகம்.. நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார் - கண்ணீரில் திரையுலகம்
Kota Srinivasa Rao Death: காலையிலே சோகம்.. நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார் - கண்ணீரில் திரையுலகம்
Thiruvallur Train Fire: திருவள்ளூரில் ட்ராக்கில் கொழுந்து விட்டு எரிந்த ரயில் - சேவை ஸ்தம்பித்தது, பயணிகள் அவதி
Thiruvallur Train Fire: திருவள்ளூரில் ட்ராக்கில் கொழுந்து விட்டு எரிந்த ரயில் - சேவை ஸ்தம்பித்தது, பயணிகள் அவதி
Hosur Airport: இனி ஓசூரிலிருந்து பறக்கலாம் - சர்வே ஓவர், ரெண்டு ஸ்பாட்டும் ஓகே - தமிழக அரசு எதை டிக் செய்யும்?
Hosur Airport: இனி ஓசூரிலிருந்து பறக்கலாம் - சர்வே ஓவர், ரெண்டு ஸ்பாட்டும் ஓகே - தமிழக அரசு எதை டிக் செய்யும்?
IND Vs ENG 3rd TEST: டிராவில் முடிந்த முதல் இன்னிங்ஸ்.. நான்காவது நாளில் மிரட்டுமா இந்தியா? இங்கி., வீழ்த்துமா?
IND Vs ENG 3rd TEST: டிராவில் முடிந்த முதல் இன்னிங்ஸ்.. நான்காவது நாளில் மிரட்டுமா இந்தியா? இங்கி., வீழ்த்துமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மயிலாடுதுறை சுற்றுலா மாளிகை அவசரகதியில் திறந்த அமைச்சர்! பொதுமக்கள் ஆத்திரம்
தவெக உடன் கூட்டணி.. காங்கிரஸ் பக்கா ஸ்கெட்ச்! ஓகே சொல்வாரா ராகுல்?
800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kota Srinivasa Rao Death: காலையிலே சோகம்.. நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார் - கண்ணீரில் திரையுலகம்
Kota Srinivasa Rao Death: காலையிலே சோகம்.. நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார் - கண்ணீரில் திரையுலகம்
Thiruvallur Train Fire: திருவள்ளூரில் ட்ராக்கில் கொழுந்து விட்டு எரிந்த ரயில் - சேவை ஸ்தம்பித்தது, பயணிகள் அவதி
Thiruvallur Train Fire: திருவள்ளூரில் ட்ராக்கில் கொழுந்து விட்டு எரிந்த ரயில் - சேவை ஸ்தம்பித்தது, பயணிகள் அவதி
Hosur Airport: இனி ஓசூரிலிருந்து பறக்கலாம் - சர்வே ஓவர், ரெண்டு ஸ்பாட்டும் ஓகே - தமிழக அரசு எதை டிக் செய்யும்?
Hosur Airport: இனி ஓசூரிலிருந்து பறக்கலாம் - சர்வே ஓவர், ரெண்டு ஸ்பாட்டும் ஓகே - தமிழக அரசு எதை டிக் செய்யும்?
IND Vs ENG 3rd TEST: டிராவில் முடிந்த முதல் இன்னிங்ஸ்.. நான்காவது நாளில் மிரட்டுமா இந்தியா? இங்கி., வீழ்த்துமா?
IND Vs ENG 3rd TEST: டிராவில் முடிந்த முதல் இன்னிங்ஸ்.. நான்காவது நாளில் மிரட்டுமா இந்தியா? இங்கி., வீழ்த்துமா?
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
Embed widget