![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Kajal Aggarwal Son: ‘எல்லாம் ஒரே இரவில் நடந்தமாதிரி இருக்கு..’ குழந்தையின் முகத்தை காட்டிய காஜல்.. இன்ஸ்டாவில் நெகிழ்ச்சி..!
நடிகை காஜல் அகர்வால் முதன்முறையாக தனது குழந்தையின் முகத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்
![Kajal Aggarwal Son: ‘எல்லாம் ஒரே இரவில் நடந்தமாதிரி இருக்கு..’ குழந்தையின் முகத்தை காட்டிய காஜல்.. இன்ஸ்டாவில் நெகிழ்ச்சி..! Kajal Aggarwal opens up about her life-changing and extremely challenging motherhood journey Kajal Aggarwal Son: ‘எல்லாம் ஒரே இரவில் நடந்தமாதிரி இருக்கு..’ குழந்தையின் முகத்தை காட்டிய காஜல்.. இன்ஸ்டாவில் நெகிழ்ச்சி..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/20/904f9b4b176ccbe831d17ea93055dde81666235006020570_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடிகை காஜல் அகர்வால் முதன்முறையாக தனது குழந்தையின் முகத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் காஜல் அகர்வால் கடந்த 2020 அக்டோபர் 30 அன்று தொழிலதிபர் கௌதம் கிட்ச்லுவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அதனைத்தொடர்ந்து கொரோனா ஆட்டிப்படைத்த காரணத்தால் படப்பிடிப்புகள் அனைத்தும் சுணக்கம் கண்டன. அந்த வேளையில் அவர் கர்ப்பமும் தரித்தார்.
இதனையடுத்து அவருக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக்குழந்தைக்கு நீல் கிச்சுலு என்று பெயர் சூட்டினர். ஒரு பக்கம் குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்தி வந்த போதிலும், இன்னொருபக்கம் மீண்டும் தொடங்கப்பட்ட இந்தியன் 2 படத்தில் கமிட் ஆகி அந்தப்படம் சார்ந்த வேலைகளையும் கவனித்து வருகிறார் காஜல் அகர்வால்.
View this post on Instagram
அதே போல, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் காஜல் அகர்வால் அவ்வப்போது தனது குழந்தை தொடர்பான புகைப்பட பதிவுகளை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போதும் அவர் ஒரு பதிவை பதிவிட்டு இருக்கிறார். அந்தப்பதிவில், “ குழந்தை பிறந்து 6 மாதங்கள் ஓடிவிட்டது என்பதை நம்பவே முடியவில்லை. இது என்னுடைய வாழ்கையில் ஏற்பட்ட ஆழமான மாற்றம். ஒரு பயந்த இளம்பெண்ணாக எப்படி எப்படி குழந்தையை கொள்ளப்போகிறேன் என்று நான் யோசித்தது உண்டு. ஆனால் இப்போது அம்மாவாக கடமைகளை நிறைவேற்றுவது மற்றும் அதில் ஒவ்வொன்றாக கற்றுக்கொள்வது என சென்று கொண்டிருக்கிறேன். நிச்சயமாக, முழுநேர வேலையை சமநிலையாக வைத்துக்கொள்வது மற்றும் எனது நேரம், கவனம், அன்பு மற்றும் உனக்கான கவனிப்பு ஆகியவற்றில் நான் ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டேன் என்பதை உறுதிப்படுத்துவது என்பது மிகவும் சவாலானதே. ஆனால் வேறு வழியில்லை.
View this post on Instagram
இப்போது வீட்டில் நீ உருண்டு கொண்டிருக்கிறாய், இடது வலது என ஆடுகிறாய் இவையெல்லாம் ஒரே இரவில் நடந்து போல இருக்கிறது. உனக்கு முதன்முறையாக சலதோஷம் பிடித்தது, தலையில் வீக்கம் ஏற்பட்டது, முதன்முறையாக உணவுகளின் ருசியை சுவைத்தது அனைத்தும் நல்ல தருணங்கள். உங்கள் அப்பாவும் நானும் அடுத்த வாரம் நீ கல்லூரிக்கு செல்வாய் என்று கேலி செய்கிறோம், ஏனென்றால் நேரம் அவ்வளவு விரைவாக முன்னேறிக்கொண்டிருக்கிறது.
வாழ்க்கையின் ஒவ்வொரு சிறிய தருணத்தையும் நீ எப்படி எடுத்துக்கொள்கிறாய் என்பதையும், உன் தாயாக கடவுள் என்னை ஆசீர்வதித்திருக்கும் பெரிய பொறுப்பில் அடிக்கடி மூழ்கியிருப்பதையும் கண்டு நான் வியப்படைகிறேன். அவர்கள் சொல்வது போல், இது எனக்கு மிகவும் சவாலான மற்றும் பலனளிக்கும் வேலை. என் அன்பே, என் குழந்தை நீல்” என்று பதிவிட்டு இருக்கிறார்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)