![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
பிறப்புறுப்பில் பாட்டிலை திணித்து டார்ச்சர்! ஜானிடெப்பின் கொடுமை குறித்து பகீர் கிளப்பிய மனைவி! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானிடெப் தன்னுடைய பிறப்புறுப்பில் மதுபாட்டிலை நுழைத்து பாலியல் கொடுமை அளித்ததாக அவரது இரண்டாவது மனைவி குற்றம்சாட்டியுள்ளார்.
![பிறப்புறுப்பில் பாட்டிலை திணித்து டார்ச்சர்! ஜானிடெப்பின் கொடுமை குறித்து பகீர் கிளப்பிய மனைவி! அதிர்ச்சியில் ரசிகர்கள்..! johnny depp amber heard case amber heard complaint johny depp harrase with drinks bottles her private part பிறப்புறுப்பில் பாட்டிலை திணித்து டார்ச்சர்! ஜானிடெப்பின் கொடுமை குறித்து பகீர் கிளப்பிய மனைவி! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/16/4c051d0efe7e171cb67518ec02f7d934_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஹாலிவுட்டின் பிரபல நடிகர் ஜானி டெப். பல படங்களில் நடித்துள்ள ஜானி டெப் பைரட்ஸ் ஆப் தி கரிபீயன் படம் மூலமாக உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானார். அந்த படத்தில் அவரது கேப்டன் ஜாக் ஸ்பார்ரோ கதாபாத்திரம் உலகம் முழுவதும் அவரை மிகவும் பிரபலமாக்கியது. ஜானி டெப் முதல் மனைவியை விவாகரத்து செய்த நிலையில் இரண்டாவதாக ஆம்பர் ஹெர்ட்டை 2015ம் திருமணம் செய்து கொண்டார்.
ஆனால், சில காலம் மகிழ்ச்சியாக சென்ற இவர்களது வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து, இவர்கள் இருவருக்கும் இடையேயான 2017ம் ஆண்டு விவாகரத்து ஆனது. இந்த நிலையில், பிரபல நடிகையும், தனது இரண்டாவது மனைவியுமாகிய அம்பெர் ஹெர்ட் தன்னை மிகவும் துன்புறுத்தியதாகவும், அடித்து தன்னுடைய ஒரு விரலை துண்டித்ததாகவும், அவரால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூபாய் 350 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் ஜானி டெப் வழக்குத் தொடர்ந்து வழக்கை நடத்தி வருகிறார்.
மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கில், அம்பெர் ஹெர்ட் தற்போது ஜானி டெப் மீது மோசமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். ஜானி டெப் தன்னுடைய பெயரை சிறுநீரால் எழுதினார் என்று அம்பர் ஹெர்ட் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இந்த குற்றச்சாட்டு மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், அம்பெர் ஹெர்ட் மீண்டும் ஜானி டெப் மீது பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுலாவிற்கு சென்றிருந்தபோது ஜானிடெப் தன்னுடைய பிறப்புறுப்பில் மதுபான பாட்டிலை நுழைத்து தன்னை பாலியல் ரீதியாக மிகவும் கொடுமைப்படுத்தினார் என்று குற்றம்சாட்டியுள்ளார். இதனால், தனது பிறப்புறுப்பில் காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை பெற்றதாக கூறியுள்ளார். இதற்கான ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
ஜானி டெப் நல்லவர் என்று நம்பிதான் திருமணம் செய்துகொண்டதாகவும், ஆனால் அவர் குடிபோதையில் அளிக்கும் டார்ச்சர்களை தன்னால் தாங்கிக்கொள்ள முடியாமலே விவாகரத்து முடிவுக்கு வந்ததாக அம்பர் ஹெர்ட் கூறியுள்ளார். ஜானி டெப் மீதான அவரது இரண்டாவது மனைவியின் குற்றச்சாட்டால் ஜானி டெப்பிற்கு எதிராக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
ஜானி டெப் கடந்த அன்னி அல்லிசன் என்பவரை முதலில் திருமணம் செய்துகொண்டார். ஆனால், அந்த திருமண வாழ்க்கையில் முறிவு ஏற்பட்டதாலே ஆம்பர் ஹெர்ட்டை திருமணம் செய்தார். ஹாலிவுட் உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக வலம் வந்த ஜானிடெப் இதுபோன்ற நிகழ்வுகளால் தற்போது பல இன்னல்களை சந்தித்து வருகிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)