மேலும் அறிய

டிராமா போடுகிறார் கங்கனா ரனாவத் - ஜாவித் அக்தர் குற்றச்சாட்டு

வழக்கு விசாரணையை தள்ளிப்போடுவதற்காவும், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் நழுவிச் செல்வதற்காகவும் கங்கனா ரனாவத் தன்னை துன்புறுத்தும் வகையில் மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக ஜாவித் அக்தர் கூறியுள்ளார்

தற்கொலை செய்துகொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தொடர்பான தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் தலைவி, தாம் தூம் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவாத் தனது பெயரை பயன்படுத்தி அவதூறு பரப்பியதாக பிரபல எழுத்தாளர் ஜாவித் அக்தர் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

அந்தேரி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராக பல முறை சம்மன் அனுப்பியும் கங்கனா ரனாவத் காலம் தாழ்த்தி வந்தார். கடந்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜராகக் கோரி மாஜிஸ்திரேட் சம்மன் அனுப்பினார். நீதிமன்றத்தில் ஆஜராகாவிட்டால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என எச்சரித்தார் மாஜிஸ்திரேட். ஆனால், தனக்கு கொரொனா அறிகுறி இருப்பதால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது எனா அவர் தெரிவித்தார். இதனை அடுத்து கடந்த 14 ம் தேதி நடந்த வழக்கு விசாரணையின் போது கங்கனா ரனாவத் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு பெற்றார்.

இந்த நிலையில், தன் மீது அவதூறு வழக்கு தொடர்ந்த எழுத்தாளர் ஜாவித் அக்தர் மீது எதிர் வழக்கு தொடர்ந்த கங்கனா ரனாவத், ஜாவின் அக்தர் பணம் பறிக்கும் நோக்கத்தில் தன்னிடம் மிரட்டியதாக தெரிவித்திருந்தார். அந்த மனு குறித்து கங்கனாவின் வழக்கறிஞர் அளித்த விளக்கமாவது, ”ஜாவித் அக்தர் மீது கங்கனா அளித்துள்ள புகார் புதிது அல்ல. 3 அல்லது 4 ஆண்டுகள் முன் கங்கனா ரனாவத் மற்றும் அவரது சகோதரி ஆகியோர் ஜாவித் அக்தர் இல்லத்துக்கு அழைக்கப்பட்டனர். அங்கு இருவரையும் ஜாவித் அக்தர் மிரட்டியுள்ளார். இதை பல முறை அவர் தெரிவித்து இருக்கிறார். இருந்தாலும் ஜாவித் அக்தரின் வயதை கருத்தில் கொண்டு புகாரளிக்கவில்லை. ஆனால், இப்போது இந்த வழக்கில் அவர் தீவிரமாக இறங்கி இருக்கிறார். அவருக்கு குடும்பத்தினரும் உறுதுணையாக உள்ளனர்.” என்றார்.

டிராமா போடுகிறார் கங்கனா ரனாவத் - ஜாவித் அக்தர் குற்றச்சாட்டு

ஜாவித் அக்தரின் வழக்கை விசாரித்து வரும் மாஜிஸ்திரேட் மீது தனக்கு நம்பிக்கை இல்லாததால் அவரையும் மாற்ற வேண்டும் எனவும், அல்லது வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கங்கனா தனது மனுவில் கோரினார். இந்த வழக்கு கடந்த 10 நாட்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பு வாதங்களை கேட்ட மும்பை நீதிபதி, மாஜிஸ்திரேட்டின் வழக்கு விசாரணையில் எந்த தவறும் நடைபெறவில்லை எனக்கூறி கங்கனாவின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார்.

இந்த நிலையில், கங்கனா ரனாவத்தின் அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என எழுத்தாளர் ஜாவித் அக்தர் மும்பை நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். வழக்கு விசாரணையை தள்ளிப்போடுவதற்காவும், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் நழுவிச் செல்வதற்காகவும் கங்கனா ரனாவத் தன்னை துன்புறுத்தும் வகையில் மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக ஜாவித் அக்தர் கூறியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget