James Vasanthan: தறுதலைகளா? தற்குறிகளா?.. கார் கண்ணாடி உடைப்பு.. கடுப்பான ஜேம்ஸ் வசந்தன்
ஜேம்ஸ் வசந்தனின் பதிவில் "தறுதலைகளின் வேலையா அல்லது தற்குறிகளின் வேலையா என்று தெரியவில்லை." கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் தவெக தலைவர் விஜய் மீது தொடர்ந்து விமர்சனங்களை எடுத்து வைத்து வரும் நிலையில் மர்ம நபர்கள் சிலர் அவரது கார் கண்ணாடியை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது
ஜேம்ஸ் வசந்தன்
தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பலராலும் அறியப்பட்டவர் ஜேம்ஸ் வசந்தன்இவர் இசையமைத்த 'சுப்ரமணியபுரம்' திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது
இதற்கிடையே இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அண்மைக்காலமாக நடிகர் விஜய்யின் அரசியல் வருகையை விமர்சித்து வருகிறார். சமீபத்தில் கூட தவெக தொண்டர்கள் மத்தியில் அவர் ஆற்றிய உரையாடல் எக்ஸ் உள்ளிட்ட பக்கங்களில் வைரலாக பரவி வருகிறது.
கார் கண்ணாடி உடைப்பு:
இந்த நிலையில் தான் ஈசிஆரில் உள்ள உணவாகத்தில் காரை நிறுத்திவிட்டு உணவருந்த சென்ற போது அவரது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
View this post on Instagram
உடைக்கப்பட்ட தனது காரின் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்த ஜேம்ஸ் வசந்தன் அதில், "தறுதலைகளின் வேலையா அல்லது தற்குறிகளின் வேலையா என்று தெரியவில்லை." என்று குறிப்பிட்டு கொட்டிவாக்கத்தில் மதியம் ஒரு உணவகத்தில் சாப்பிடச் சென்றபோது கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருப்பதாக பதிவிட்டுள்ளார்.
விஜய் மீது தொடர் விமர்சனம்:
ஒரு நேர்காணலில் பேசிய ஜேம்ஸ் வசந்தனிடம் ஏன், விஜய் அரசியலுக்கு வரக்கூடாது என நினைக்கிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஒரு திரைப்படத்தில் அவர் புது நடிகராக வருகிறார் என்றால் வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என்பது தயாரிப்பாளரின் தலையெழுத்து. மக்கள் பார்த்தால் லாபம் அல்லது இழப்பு இருக்கும். ஆனால் தேர்தலில் நான் வாய்ப்பு கொடுக்கும்போது முன்னேறி கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடுத்த 5 ஆண்டுகளில் தடை ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு?
விஜய்க்கு சினிமாவில் அறிவு இருக்கு. அரசியலில் என்ன அறிவு இருக்கிறது? எப்படி அவர் அதற்கு சாத்தியப்படுவார்?. விஜய் முன்அனுபவம் இல்லாத ஒருவருக்கு சினிமாவில் கூட படம் இயக்க வாய்ப்பு கொடுக்க மாட்டார். அவருக்கு ஒன்னும் தெரியாது. 5 அல்லது 10 ஆண்டுகள் அரசியல் செய்து அதன்பின்னர் செயல்பாடு பார்த்து கூட ஆட்சி செய்ய வாய்ப்பு வழங்கலாம்.
இன்று வரை விஜயால் எப்படி மேடையில் நின்று தைரியமாக கரூர் சம்பவம் பற்றி பேச முடிகிறது என்றால் அவரின் பெயர் எஃப்ஐஆர் அறிக்கையில் இல்லாததும் மற்றும் கைது செய்யப்படாததும் தான். ஜெயலலிதா இருந்திருந்தால் விஜய் அரசியலுக்கு முடிவு எட்டப்பட்டிருக்கும். விஜய் செய்ய வேண்டியதை கரூர் சம்பவம் நடந்த அன்று முதலமைச்சர் ஸ்டாலின் செய்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















