மேலும் அறிய

Sivakarthikeyan Vs Suriya: சிவகார்த்திகேயன் பாவம் சும்மா விடுமா? கங்குவாவை காவு வாங்கிய அமரனின் சுவாரஸ்ய பின்னணி!

சிவகார்த்திகேயனுக்கு செய்த பாவம் தான், கங்குவா தோல்விக்கு காரணமா? அதன் பின்னணி என்ன வாருங்கள் பார்ப்போம்.

ஸ்டூடியோ கிரீன் அக்ரிமெண்ட் :

கேடிபில்லா கில்லாடி ரங்கா பட வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயனுக்கு அட்வான்ஸ் கொடுத்து புக் செய்கிறது ஸ்டூடியோ கிரீன் நிறுவனம். ஆனால் படத்தை தொடங்கவில்லை.  அக்ரிமெண்ட் இருப்பதால் ஒவ்வொரு படம் முடியும் போதும் சிவகார்த்திகேயனும் படத்தை துவங்க கேட்டும் அந்நிறுவனம் அசைந்து கொடுக்கவில்லை. 

சிவகார்த்திகேயன் மார்க்கெட்:

இதற்கிடையே சிவகார்த்திகேயனின் மார்கெட்டும் வளர்ந்து வருகிறது. ஆண்டுகள் கடந்த பின்னும் ஸ்டூடியோ கிரீன் நிறுவன தரப்பு படத்தை துவங்குவதாக இல்லை. சிவகார்த்திகேயனும் அடுத்தடுத்து பிசியாக படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். அவர் படங்கள் நன்றாக ஹிட்டாகி, பீக்கில் இருந்த சமயத்தில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் அவரை அணுகிறது. அடுத்த படத்தை தங்களுக்கு செய்து தரும் படி கேட்கிறது. 

ஞானவேல் ராஜா பிளான் :

ஆனால் கேடி பில்லா பட சமயத்தில் என்ன சம்பளமோ அது தான் சம்பளம் என்று கண்டிஷன் போட, அதிர்ந்து போகிறார் சிவகார்த்திகேயன். அப்புறம் தான் தெரிகிறது தயாரிப்பு நிறுவனத்தின் திட்டமே அதுதான் என்று. சிவாவின் மார்கெட் உயரும் வரை காத்திருந்து, அதன் பிறகு குறைந்த சம்பளத்தில் அவரை வைத்து படம் எடுத்து பெரிய லாபம் பார்ப்பது. அதே சமயம் சிவாவின் மார்க்கெட்டையும் சரிப்பது. 


Sivakarthikeyan Vs Suriya: சிவகார்த்திகேயன் பாவம் சும்மா விடுமா? கங்குவாவை காவு வாங்கிய அமரனின் சுவாரஸ்ய பின்னணி!

சினிமாவைப் பொறுத்தவரை முந்தைய படத்தின் சம்பளத்தை வைத்து தான் அடுத்தடுத்த படத்திற்கு சம்பளம் வழங்கப்படும்.  ஆனால் சிவா இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. வேறு படங்களில் நடிக்கிறார். அதற்கு ஸ்டூடியோ கிரீன் அக்ரிமெண்டை காட்டி அதற்கும் முட்டுக்கட்டை போடுகிறது. என்னிடம் என்ஓசி வாங்காமல் சிவாவை வைத்து படம் எடுக்கக் கூடாது என மிரட்டுகிறார். 

ரெமோ திரைப்படம்:

வேறுவழியில்லாமல் சிவா தனது நண்பர் ஆர்.டி.ராஜாவை தயாரிப்பாளராக்கி ரெமோ படத்தை துவங்குகிறார். அந்தப் பட படப்பிடிப்பு, பட வெளியீடுகளில் கடுமையான பிரச்சினைகளை சந்தித்தது. அதற்கு காரணமும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தான். அப்போது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சைலண்டாக இருந்த காலக்கட்டம் என்பதால் திரைக்குடும்பத்தைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் கை தான்  ஓங்கியிருந்தது. தயாரிப்பு, வினியோகம் என ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் அந்தக் குடும்பம் கையில் வைத்திருந்த காலம். 

கண்ணீர் விட்ட சிவகார்த்திகேயன்:

பல சிக்கலகளை சந்தித்த ரெமோ பட ஆடியோ லாஞ்சில் சிவா அழுதே விட்டார். சீமராஜா படத்திற்கு பிறகு சிவாவின் சம்பளத்தை ஏற்றித் தருவதாக சொல்ல உடன்பாடு ஏற்படுகிறது. ஆனாலும் அன்றைய மார்கெட் சம்பளத்தை விடவும் குறைவான சம்பளம் தான் பேசப்படுகிறது. ஆனாலும் சிவா ஒத்துக் கொள்கிறார். எப்படியாவது இதிலிருந்து வெளிவந்தால் போதும் என்று நினைத்து குறுகிய காலத்தில், ஸ்கிரிப்ட் பற்றி எந்த கவலையும் இல்லாமல் ஆரம்பிக்கப்பட்ட படம் தான் மிஸ்டர் லோக்கல். 

சிவகார்த்திகேயனுக்கு வந்த பிரச்சனை:

நயன், ராஜேஷ் அனைவருமே அக்ரிமெண்ட் மூலம் லாக் செய்யப்பட்டவர்கள் தான் எனக்கூறப்படுகிறது. படத்திற்காக 15 கோடி சம்பளம் பேசப்பட்ட நிலையில், அதையும் முழுதாக கொடுக்கவில்லை. ஆனால் வருமான வரி தாக்கலில், சிவாவிற்கு 15 கோடி கொடுத்ததாக கணக்கு காட்ட, ஐடி டிபார்ட்மெண்டில் இருந்து சிவாவிற்கு நோட்டீஸ் வந்தது. 

காலி செய்யும் முயற்சி:

வேறுவழியில்லாமல் சிவா கோர்ட்டில் கேஸ் போட, பணத்தை செட்டில் செய்துவிட்டு படங்களை ரிலீஸ் செய்து கொள் என்று சொல்லிவிட்டது கோர்ட். அதன் பிறகும் அந்நிறுவனமும், அதன் பின்னால் உள்ள நட்சத்திர குடும்பத்தைச் சேர்ந்த ஹீரோக்களும்  சிவாவை வளர விடாமல் மார்கெட்டை காலி செய்ய முயற்சி  நடந்திருக்கிறது. ஆனாலும் எவ்வளவு முயற்சித்தும் சிவாவின் வளர்ச்சியை தடுக்க முடியவில்லை. 

கங்குவா அமரன் முன் மண்ணை கவ்வியது:

தற்போது தன்னை சரிக்க நினைத்த அந்நிறுவனம் முன்பே சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்துள்ளது. அடுத்தவரை கெடுக்க நினைத்த அந்த நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட கங்குவா திரைப்படம் மண்ணைக் கவ்வியுள்ளது. அத்தோடு, அதை தயாரித்த கலைக்குடும்பமும் பணத்தை இழந்ததோடு மட்டுமின்றி கடும் விமர்சனத்திற்கு ஆளாகி வருகின்றனர். அமரன் கெத்தாக ஓடிக்கொண்டிருக்க... கங்குவா காவு வாங்கப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Embed widget