மேலும் அறிய

Veerappan: வீரப்பனுக்கு இருந்த ஒரே பிரச்சனை.. இறந்த பின்பு நடந்தது என்ன? - முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார்

வீரப்பன் வாழ்க்கை வரலாறு மிக நீண்ட இடைவெளிக்குப் பின்  The Hunt For Veerappan, கூச முனுசாமி வீரப்பன் என்ற பெயரில் ஆவணப்படமாக இந்தாண்டு வெளியாகியிருந்தது.

வீரப்பன் இறந்த பிறகு அவரை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் சொன்ன தகவல் தன்னை ஆச்சரியப்படுத்தியதாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த வீரப்பன் 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி தமிழக காவல்துறையின் அதிரடி படையால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரின் வாழ்க்கை வரலாறு நெடுந்தொடராகவும், திரைப்படமாகவும் வெளியானது. இதனிடையே வீரப்பன் வாழ்க்கை வரலாறு மிக நீண்ட இடைவெளிக்குப் பின்  The Hunt For Veerappan, கூச முனுசாமி வீரப்பன் என்ற பெயரில் ஆவணப்படமாக இந்தாண்டு வெளியாகியிருந்தது. இது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இப்படியான நிலையில் வீரப்பனை சுட்ட அதிரடிப் படைக்கு தலைமை வகித்த ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார், வீரப்பன் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில், “ஆம்புலன்ஸில் இருக்கும் போது தான் வீரப்பன் மீது துப்பாக்கிச்சூடு நடந்தது என்பதே உண்மை. எங்களுடைய அதிரடிப்படை ஆபரேஷன் மிகச் சிறப்பாக இருந்ததாக சர்வதேச அளவில் இதுபோன்ற ஆபரேஷன்களை கையாள்பவர்கள் சொன்னது. மற்றவர்கள் சொல்வது மாதிரி விஷம் வைத்து எல்லாம் கொல்லவில்லை. வீரப்பன் காட்டை விட்டு வெளியே வர மாதிரி பிளான் பண்ணோம். அதனை வீரப்பனுக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டேன் என அவருக்கு வேண்டியவர்கள் தெரிவித்தார். ஆனால் இதுதான் என்னுடைய பணி, தொழில் தர்மம் என கூறினேன். 

தான் வெளியே வந்து சிகிச்சைப் பெற்றால் கண் பார்வை சரியாகும் என வீரப்பன் நம்பினார். அப்படிப்பட்ட ஒருவர் கண்பார்வை தெரியாமல் கைத்தடி வைத்து நடந்தால் என்ன ஆகும் என்பதை யோசித்து பாருங்கள். அங்கேயே வீரப்பன் கதை முடிந்துவிடும். அதனால் தான் பார்வையை சரி செய்ய அவர் நினைத்தார். அதேபோல் பணம் வாங்கிக்கொண்டு சிலர் வீரப்பனிடம் இருந்து ஓடி விட்டார்கள். அவர்களை இவரால் பிடிக்க முடியவில்லை. இதே பழைய வீரப்பனாக இருந்திருந்தால் மிகப்பெரிய தண்டனை கொடுத்திருப்பார். ஆனால் இவர்களுக்கு காட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் ஆட்கள் குறைவாகவே இருந்தனர். அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம் உள்ளிட்ட இடங்களில் தொடர்புகள் இருந்தாலும் அந்த நபர்களை தண்டிக்க முடியவில்லை. 

இந்த மாதிரி சமயத்தில் தான் நாங்கள் வீரப்பனை வெளியே வர வைக்க பிளான் கொடுத்தோம். அதை அப்படியே நம்பி விட்டார். இதுதான் நடந்தது. வீரப்பன் இறந்த போது அவரின் உடலில் இருந்த உறுப்புகள் எல்லாம் நல்ல நிலையில் தான் இருந்ததாக பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் வள்ளிநாயகம் கூறினார். எலும்புகள், தசைகள் எல்லாம் சரியாக இருந்த நிலையில் ஒரே ஒரு பிரச்சினை கண்ணில் புரை இருந்தது தான் பிரச்சினையாக இருந்தது. எதிரியாக இருந்தால் கூட அற்புதமான விஷயங்கள் நம்மை கவரும். அந்த மாதிரி வீரப்பன் தவறான பாதைக்கு சென்று விட்டாலும், அதற்கு கூட ஏன் அப்படி சென்றேன் என நியாயப்படுத்தலாம். காவல்துறையில் இருந்ததால் பிளஸ் பாயிண்டுகளை விட மைனஸ் பாயிண்டுகளை தான் நான் பார்க்க வேண்டும்” என விஜயகுமார் கூறியிருப்பார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மயிலாடுதுறை சுற்றுலா மாளிகை அவசரகதியில் திறந்த அமைச்சர்! பொதுமக்கள் ஆத்திரம்
தவெக உடன் கூட்டணி.. காங்கிரஸ் பக்கா ஸ்கெட்ச்! ஓகே சொல்வாரா ராகுல்?
800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
TNPSC Group 4: தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; தனியார் பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்ட வினாத்தாள்- கசிந்ததா? 
TNPSC Group 4: தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; தனியார் பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்ட வினாத்தாள்- கசிந்ததா? 
Compact Suvs: காம்பேக்ட் எஸ்யுவிக்களுக்கு இனி பஞ்சமில்லை -  மாருதி Vs டாடா, பட்ஜெட்டா? வசதிகளா? கார் லிஸ்ட்
Compact Suvs: காம்பேக்ட் எஸ்யுவிக்களுக்கு இனி பஞ்சமில்லை - மாருதி Vs டாடா, பட்ஜெட்டா? வசதிகளா? கார் லிஸ்ட்
Embed widget