மேலும் அறிய

Veerappan: வீரப்பனுக்கு இருந்த ஒரே பிரச்சனை.. இறந்த பின்பு நடந்தது என்ன? - முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார்

வீரப்பன் வாழ்க்கை வரலாறு மிக நீண்ட இடைவெளிக்குப் பின்  The Hunt For Veerappan, கூச முனுசாமி வீரப்பன் என்ற பெயரில் ஆவணப்படமாக இந்தாண்டு வெளியாகியிருந்தது.

வீரப்பன் இறந்த பிறகு அவரை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் சொன்ன தகவல் தன்னை ஆச்சரியப்படுத்தியதாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த வீரப்பன் 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி தமிழக காவல்துறையின் அதிரடி படையால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரின் வாழ்க்கை வரலாறு நெடுந்தொடராகவும், திரைப்படமாகவும் வெளியானது. இதனிடையே வீரப்பன் வாழ்க்கை வரலாறு மிக நீண்ட இடைவெளிக்குப் பின்  The Hunt For Veerappan, கூச முனுசாமி வீரப்பன் என்ற பெயரில் ஆவணப்படமாக இந்தாண்டு வெளியாகியிருந்தது. இது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இப்படியான நிலையில் வீரப்பனை சுட்ட அதிரடிப் படைக்கு தலைமை வகித்த ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார், வீரப்பன் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில், “ஆம்புலன்ஸில் இருக்கும் போது தான் வீரப்பன் மீது துப்பாக்கிச்சூடு நடந்தது என்பதே உண்மை. எங்களுடைய அதிரடிப்படை ஆபரேஷன் மிகச் சிறப்பாக இருந்ததாக சர்வதேச அளவில் இதுபோன்ற ஆபரேஷன்களை கையாள்பவர்கள் சொன்னது. மற்றவர்கள் சொல்வது மாதிரி விஷம் வைத்து எல்லாம் கொல்லவில்லை. வீரப்பன் காட்டை விட்டு வெளியே வர மாதிரி பிளான் பண்ணோம். அதனை வீரப்பனுக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டேன் என அவருக்கு வேண்டியவர்கள் தெரிவித்தார். ஆனால் இதுதான் என்னுடைய பணி, தொழில் தர்மம் என கூறினேன். 

தான் வெளியே வந்து சிகிச்சைப் பெற்றால் கண் பார்வை சரியாகும் என வீரப்பன் நம்பினார். அப்படிப்பட்ட ஒருவர் கண்பார்வை தெரியாமல் கைத்தடி வைத்து நடந்தால் என்ன ஆகும் என்பதை யோசித்து பாருங்கள். அங்கேயே வீரப்பன் கதை முடிந்துவிடும். அதனால் தான் பார்வையை சரி செய்ய அவர் நினைத்தார். அதேபோல் பணம் வாங்கிக்கொண்டு சிலர் வீரப்பனிடம் இருந்து ஓடி விட்டார்கள். அவர்களை இவரால் பிடிக்க முடியவில்லை. இதே பழைய வீரப்பனாக இருந்திருந்தால் மிகப்பெரிய தண்டனை கொடுத்திருப்பார். ஆனால் இவர்களுக்கு காட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் ஆட்கள் குறைவாகவே இருந்தனர். அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம் உள்ளிட்ட இடங்களில் தொடர்புகள் இருந்தாலும் அந்த நபர்களை தண்டிக்க முடியவில்லை. 

இந்த மாதிரி சமயத்தில் தான் நாங்கள் வீரப்பனை வெளியே வர வைக்க பிளான் கொடுத்தோம். அதை அப்படியே நம்பி விட்டார். இதுதான் நடந்தது. வீரப்பன் இறந்த போது அவரின் உடலில் இருந்த உறுப்புகள் எல்லாம் நல்ல நிலையில் தான் இருந்ததாக பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் வள்ளிநாயகம் கூறினார். எலும்புகள், தசைகள் எல்லாம் சரியாக இருந்த நிலையில் ஒரே ஒரு பிரச்சினை கண்ணில் புரை இருந்தது தான் பிரச்சினையாக இருந்தது. எதிரியாக இருந்தால் கூட அற்புதமான விஷயங்கள் நம்மை கவரும். அந்த மாதிரி வீரப்பன் தவறான பாதைக்கு சென்று விட்டாலும், அதற்கு கூட ஏன் அப்படி சென்றேன் என நியாயப்படுத்தலாம். காவல்துறையில் இருந்ததால் பிளஸ் பாயிண்டுகளை விட மைனஸ் பாயிண்டுகளை தான் நான் பார்க்க வேண்டும்” என விஜயகுமார் கூறியிருப்பார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

காரைக்காலில் ரெட் அலர்ட்: மிரட்டும் புயல் - பாதுகாப்பாக இருக்க ஆட்சியரின் 15 முக்கிய அறிவுரைகள்!
காரைக்காலில் ரெட் அலர்ட்: மிரட்டும் புயல் - பாதுகாப்பாக இருக்க ஆட்சியரின் 15 முக்கிய அறிவுரைகள்!
Pakistan Afghanistan War?: எல்லையில் படைகள் குவிப்பு; பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே போரா.? உற்று நோக்கும் உலக நாடுகள்
எல்லையில் படைகள் குவிப்பு; பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே போரா.? உற்று நோக்கும் உலக நாடுகள்
Sri Lanka Flood: இலங்கையை புரட்டிப் போடும் கனமழை; வெள்ளம், நிலச்சரிவில் 33 பேர் பலி; ஏராளமானோர் மாயம்
இலங்கையை புரட்டிப் போடும் கனமழை; வெள்ளம், நிலச்சரிவில் 33 பேர் பலி; ஏராளமானோர் மாயம்
Sengottaiyan: செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி? விஜய் பரபரப்பு அறிவிப்பு
Sengottaiyan: செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி? விஜய் பரபரப்பு அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report
செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva
ஒரே நொடியில் பறிபோன உயிர் இந்திய வீரர் உயிரிழப்பு பரபரப்பு CCTV காட்சி | Volley Ball Player Hardik Death
தவெகவில் செங்கோட்டையன் பாஜகவின் SLEEPER CELL விஜய்யை காலி செய்ய திட்டமா? | Sengottaiyan Vs TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காரைக்காலில் ரெட் அலர்ட்: மிரட்டும் புயல் - பாதுகாப்பாக இருக்க ஆட்சியரின் 15 முக்கிய அறிவுரைகள்!
காரைக்காலில் ரெட் அலர்ட்: மிரட்டும் புயல் - பாதுகாப்பாக இருக்க ஆட்சியரின் 15 முக்கிய அறிவுரைகள்!
Pakistan Afghanistan War?: எல்லையில் படைகள் குவிப்பு; பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே போரா.? உற்று நோக்கும் உலக நாடுகள்
எல்லையில் படைகள் குவிப்பு; பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே போரா.? உற்று நோக்கும் உலக நாடுகள்
Sri Lanka Flood: இலங்கையை புரட்டிப் போடும் கனமழை; வெள்ளம், நிலச்சரிவில் 33 பேர் பலி; ஏராளமானோர் மாயம்
இலங்கையை புரட்டிப் போடும் கனமழை; வெள்ளம், நிலச்சரிவில் 33 பேர் பலி; ஏராளமானோர் மாயம்
Sengottaiyan: செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி? விஜய் பரபரப்பு அறிவிப்பு
Sengottaiyan: செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி? விஜய் பரபரப்பு அறிவிப்பு
சபரிமலையில் தொடரும் சோகம் 9 நாட்களில் 9 பக்தர்கள் உயிரிழப்பு ! மாரடைப்பு மரணங்கள் அதிகரிக்க காரணம் என்ன? சுகாதாரத்துறை எச்சரிக்கை!
சபரிமலையில் தொடரும் சோகம் 9 நாட்களில் 9 பக்தர்கள் உயிரிழப்பு ! மாரடைப்பு மரணங்கள் அதிகரிக்க காரணம் என்ன? சுகாதாரத்துறை எச்சரிக்கை!
Siddaramaiah Vs DKS: கர்நாடக காங்கிரஸ் தலைவர்களின் ‘வார்த்தை‘ ஜாலம்; பதிலுக்கு பதில்; சித்தராமையா, சிவகுமாரின் பதிவுகள்
கர்நாடக காங்கிரஸ் தலைவர்களின் ‘வார்த்தை‘ ஜாலம்; பதிலுக்கு பதில்; சித்தராமையா, சிவகுமாரின் பதிவுகள்
Sheikh Hasina: வெந்த புண்ணில் பாய்ந்த வேல்; ஊழல் வழக்கு; வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை
வெந்த புண்ணில் பாய்ந்த வேல்; ஊழல் வழக்கு; வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை
TN Weather Red Alert: டிட்வா புயலால் சென்னையில் வெளுக்கப் போகும் மழை; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
டிட்வா புயலால் சென்னையில் வெளுக்கப் போகும் மழை; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
Embed widget