Entertainment Headlines: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நடிகர்கள்.. சந்தோஷ் நாராயணன் கோபம்.. சினிமா ரவுண்ட்-அப்!
Entertainment Headlines Dec 06: இன்றைய நாளில் சினிமா வட்டாரத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.
“2015 வெள்ளம் கூட இப்படி இல்லை” - விஷாலை தொடர்ந்து புகாரை அடுக்கிய கீர்த்தி பாண்டியன்..!
தான் இருக்கும் பகுதியில் உள்ள வெள்ளநீரை வெளியேற்ற யாரும் வரவில்லை என எக்ஸ் வலைத்தளத்தில் நடிகை கீர்த்தி பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் தனது தாக்குதலை தொடுத்து விட்டு சென்றது. இதில் சூறைக்காற்றுடன் கிட்டதட்ட 24 மணி நேரத்துக்கும் அதிகமாக மழை பெய்ததால் நகரின் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். மேலும் படிக்க
‘விமர்சனங்களை விட்டு தள்ளவும்’.. நிவாரண பணிக்கு உதவுமாறு சூர்யா, கார்த்தி ரசிகர்களுக்கு அழைப்பு..!
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மழை நீர் வடிய ஆரம்பித்தவுடன், அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கும் பணி தொடங்கும் என நடிகர் சூர்யாவின் அகில இந்திய தலைமை நற்பணி இயக்கம் தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் கடந்த 2 தினங்களாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் தனது தாக்குதலை தொடுத்து விட்டு சென்றது. மேலும் படிக்க
கைகோர்ப்போம்... மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஹரிஷ் கல்யாண் நிதியுதவி!
மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 4ஆம் தேதி தமிழகத்தில், சென்னை, திருவளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தொடர் கன மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாண் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு லட்ச ரூபாய் நிதி வழங்கியுள்ளதாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் படிக்க
நமக்கு ஹீரோயின் ரோலா குடுப்பாங்க.. காவேரி பகிர்ந்த சினிமா சீக்ரெட்ஸ்
1990 ஆம் ஆண்டு பிரஷாந்த் நடித்த வைகாசி பொறந்தாச்சு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை காவேரி. ஆங்கிலோ இந்திய பின்புலத்தைக் கொண்ட இவர் திரைப்படங்கள் தவிர்த்து மெட்டி ஒலி , வம்சம் போன்ற பிரபல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். வெள்ளித்திரையில் இருந்து விலகியபின் தொடர்ச்சியாக சின்னத்திரையில் தோன்றி வந்த காவேரி அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த எதிர்பாராத திருப்பங்கள் அவரது திரைப்பயண்த்தை எப்படி தீர்மானித்தன என்பதை நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார். மேலும் படிக்க
'வெள்ளத்துக்கு அலட்சியம், தவறான நிர்வாகம், பேராசைதான் காரணம்' - கொந்தளித்த சந்தோஷ் நாராயணன்
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் தனது தாக்குதலை தொடுத்து விட்டு சென்றது. தாழ்வான பகுதிகளில் சூழ்ந்த வெள்ளநீருக்கு பிரபலங்களும் தப்பவில்லை. தங்கள் வீடுகளை சுற்றி தண்ணீர் சூழ்ந்ததாக நடிகர் விஷால், நடிகை கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இப்படியான நிலையில் சந்தோஷ் நாராயணன் கடுமையாக புகார் ஒன்றை எக்ஸ் தளத்தில் வாயிலாக முன்வைத்துள்ளார். மேலும் படிக்க
மிக்ஜாம் புயல் எதிரொலி! இந்த வாரம் எலிமினேஷன் இல்லை...பிக்பாஸ் எடுத்த அதிரடி முடிவு!
இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் நிக்சன், அர்ச்சணா, விசித்ரா, மணி, தினேஷ் ஆகியோர் உள்ள நிலையில், இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மிக்ஜாம் புயல் காரணமாக இந்த பெரும்பான்மையான மக்கள் வாக்களிக்க இயலாததால், இந்த வார எலிமினேஷன் ரத்து செய்யப்படுகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க