மேலும் அறிய

Election Movie: பா.ரஞ்சித் மட்டும் இல்லைன்னா அவ்வளவுதான்.. பட விழாவில் நெகிழ்ந்து பேசிய இயக்குநர் தமிழ்!

என்னுடைய சேத்துமான் கதையை தமிழ் சினிமாவில் யாரும் படம் பண்ண  மாட்டார்கள். மலையாள சினிமா என்றால் பண்ணுவார்கள்.

எலக்சன் பட பத்திரிக்கையாளர் சந்திப்பில் அப்படத்தின் இயக்குநர் தமிழ், இயக்குநர் பா. ரஞ்சித்துக்கு நெகிழ்ச்சி பொங்க நன்றி தெரிவித்துள்ளார். 

இயக்குநர், நடிகர், வசனம் எழுதுபவர் என பன்முக தன்மை கொண்ட விஜயகுமார் உறியடி, உறியடி 2, ஃபைட் கிளப் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இவர் தற்போது எலக்சன் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை தமிழ் இயக்கியுள்ளார். கோவிந்த் வசந்தா இயக்கியுள்ள இப்படம் மே 17 ஆம் தேதி வெளியாகிறது. நேற்று எலக்சன் படத்தின் ட்ரெய்லர் வெளியான நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் பேசிய எலக்சன் படத்தின் இயக்குநர் தமிழ், ஒருத்தரை அழிக்க வேண்டும் என்றால் போர் வாள் எல்லாம் தேவை இல்லை. 4 வார்த்தை புகழ்ந்து சொன்னால் போதும். புகழ், போதை, பெண், பெயர் என இதுக்காக சினிமாவுக்கு வரவில்லை. என்னை அழ வைத்தது, சிரிக்க வைத்தது. சிந்திக்க வைத்ததற்காக மட்டும் தான் வந்தேன். 

என்னுடைய ஒரு படத்தில் நடித்தவர்கள் அடுத்த படத்தில் இடம்பெற கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். சேத்துமான் படம் முடிந்த ஒரு மாதம் கழித்து எலக்‌ஷன் படத்தின் கதையை எழுத ஆரம்பித்தேன். அப்போது கொரோனா எல்லாம் வந்து விட்டது. அந்த நேரத்தில் சூரரைப்போற்று படம் வெளியாகி இருந்தது. அந்த படத்துக்கு விஜயகுமார் தான் வசனம் எழுதியிருந்தார். நான் நீலம் புரொடக்‌ஷன்ஸ் கம்பெனியில் படம் பண்ணிட்டு இருந்ததால் பெரிய கம்பெனியில் படம் பண்ண வேண்டுமென நினைத்திருந்தேன். 

நம்மை விட அரசியல் அறிவு கொண்ட ஒருவர் வேண்டுமென்பதால் விஜயகுமாரை தேர்வு செய்தேன். கதை அனுப்பியதும் 2 நாட்கள் கழித்து போன் பண்ணி படம் பண்ணலாம் என சொன்னேன். கொரோனா காலக்கட்டங்களில் நிறைய பேசினோம். இந்த படம் உருவானதுக்கு ஒட்டுமொத்த காரணம் விஜயகுமார் தான்.  என்னுடைய சேத்துமான் கதையை தமிழ் சினிமாவில் யாரும் படம் பண்ண  மாட்டார்கள். மலையாள சினிமா என்றால் பண்ணுவார்கள். ஆனால் இயக்குநர் பா.ரஞ்சித் ஒரு படைப்பாளராக இருப்பதால் தான் அவர் அந்த படத்தை தயாரித்தார். இந்த நேரத்தில் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என தமிழ் பேசினார். 

சேத்துமான் படம்

 கடந்த 2022ம் ஆண்டு சோனி லைவ் ஓடிடி தளத்தில் சோத்துமான் படம் வெளியானது. பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு பெருமாள் முருகன் கதை எழுதிய நிலையில் தமிழ் இயக்கியிருந்தார் விமர்சன ரீதியாக இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
Embed widget