மேலும் அறிய

Divya Spandhana : வன்முறை ஒரு தீர்வல்ல.. எல்லாரும் சட்டத்திற்கு உட்பட்டவர்கள்... வெளிப்படையாக பேசிய திவ்யா ஸ்பந்தனா

Divya Spandhana : சட்டத்தை நாமாக கையில் எடுக்காமல் போலீஸ் உதவியோடு எதிர்கொள்வது குறித்து தர்ஷன் வழக்கில் தன்னுடைய கண்டனத்தை முன்வைத்துள்ளார் திவ்யா ஸ்பந்தனா.

பிரபல கன்னட நடிகர் தர்ஷன் அவரின் காதலி பவித்ரா கவுடாவை பற்றி ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய தர்ஷன் ரசிகர் மன்ற உறுப்பினரான ரேணுகா சுவாமி என்பவரை ஆள் வைத்து அடித்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் குறித்த விவகாரங்கள், விமர்சனங்கள் தான் தற்போது சோசியல் மீடியாவில் பேசுபொருளாக இருந்து வருகிறது. 

Divya Spandhana : வன்முறை ஒரு தீர்வல்ல.. எல்லாரும் சட்டத்திற்கு உட்பட்டவர்கள்... வெளிப்படையாக பேசிய திவ்யா ஸ்பந்தனா


காதலிக்கு மெசேஜ் அனுப்பிய ரசிகரை கொலை செய்த வழக்கில் நடிகர் தர்ஷன் மற்றும் பவித்ரா கவுடா சிறை காவலில் வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளபட்டு வருகிறது. ஏற்கனவே தர்ஷன் அவரின் மனைவி மீது தாக்குதல் நடத்தியதாக ஒரு வழக்கும் தயாரிப்பாளர் ஒருவரை மிரட்டியதாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பப்பில் விதிகளை மீறிய வழக்கு, பறவைகளை கொன்ற வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் தர்ஷன் மீது ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தர்ஷினின் செய்த இந்த செயலை கண்டித்து பிரபலங்கள் பலரும் அவர் சட்ட ரீதியாக இந்த பிரச்சனையை அணுகி இருக்க வேண்டும் என கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் நடிகையும் அரசியல்வாதியுமான திவ்யா ஸ்பந்தனா தன்னுடைய அழுத்தமான கருத்தை முன்வைத்துள்ளார். 

"நியாயம் கிடைக்கவில்லை என்பதற்காக ஒருவரை ஒருவர் அடித்து கொல்வது சரியானதல்ல. காவல் நிலையத்தில் இது குறித்து ஒரு புகார் அளிப்பதால் இந்த பிரச்னைக்கு ஒரு முடிவு வர வாய்ப்பு இருந்து இருக்கும். காவல் துறையும் தன்னால் ஆன முயற்சிகளை செய்து இருப்பார்கள். ஒருவர் ட்ரோல் செய்யப்படுகிறார் என்றால் அதில் இருந்து விடுபட வன்முறை சரியான தீர்வல்ல.

Divya Spandhana : வன்முறை ஒரு தீர்வல்ல.. எல்லாரும் சட்டத்திற்கு உட்பட்டவர்கள்... வெளிப்படையாக பேசிய திவ்யா ஸ்பந்தனா

நாம் அனைவரும் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் தான். அதை அவர்களாகவே கையில் எடுப்பது ஆபத்தானது. வன்முறையில் ஈடுபடுவது, கொலை செய்வது உள்ளிட்ட செயல்கள் கண்டிக்கத்தக்கவை. எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும் அதை சட்டரீதியாகத்தான் அணுக வேண்டும். இந்த விவகாரத்தை பொறுத்தவரையில் காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

  மக்கள் சட்டத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை எந்த இடத்திலும் விட்டு கொடுக்காமல், அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் அரசும், நீதித்துறையும் உரிய  நடவடிக்கை எடுக்கும் என முழுமனதாக நம்புகிறேன், நாமாக சட்டத்தை கையில் எடுத்து கொள்ள கூடாது" என தெரிவித்து இருந்தார் திவ்யா ஸ்பந்தனா. 

இந்த வழக்கை விசாரித்த எஸ்.கிரிஷ், ஏசிபி சந்தன் குமார் மற்றும் அவர்களின் குழு அனைவரும் சேர்ந்து எந்த ஒரு அச்சுறுத்தலுக்கும்  அடிபணியாமல் விசாரணை செய்து குற்றம் செய்தவர்களை கைது செய்துள்ளது பாராட்டுக்குரியது என்றார் திவ்யா ஸ்பந்தனா.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

T20 World Cup ENG vs RSA: சூப்பர் 8 சுற்று.. கடைசிவரை போராடிய இங்கிலாந்து.. தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி!
T20 World Cup ENG vs RSA: சூப்பர் 8 சுற்று.. கடைசிவரை போராடிய இங்கிலாந்து.. தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி!
Tasmac Income: டாஸ்மாக் வருமானம்: கடந்த ஆண்டைவிட ரூ. 1, 734 கோடி அதிகரிப்பு
Tasmac Income: டாஸ்மாக் வருமானம்: கடந்த ஆண்டைவிட ரூ. 1, 734 கோடி அதிகரிப்பு
kallakurichi Illicit Liquor Death issue: மோசமான அரசியலை எடப்பாடி பழனிசாமி கையில் எடுத்துள்ளார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மோசமான அரசியலை எடப்பாடி பழனிசாமி கையில் எடுத்துள்ளார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
The GOAT Second Single: விஜய்யின் தி கோட் 2வது பாடலில் மறைந்த பவதாரணியின் குரல்.. க்ளிம்ஸ் வீடியோ!
The GOAT Second Single: விஜய்யின் தி கோட் 2வது பாடலில் மறைந்த பவதாரணியின் குரல்.. க்ளிம்ஸ் வீடியோ!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்Saattai Duraimurugan Kallakurichi : சாட்டை மீது தாக்குதல்! கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!நடந்தது என்ன?Kallakurichi kalla sarayam  : Suriya on Kallakurichi Kallasarayam: ”தமிழக அரசுக்கு கண்டனம்! 20 ஆண்டுகளாக அவலம்” கொந்தளித்த சூர்யா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
T20 World Cup ENG vs RSA: சூப்பர் 8 சுற்று.. கடைசிவரை போராடிய இங்கிலாந்து.. தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி!
T20 World Cup ENG vs RSA: சூப்பர் 8 சுற்று.. கடைசிவரை போராடிய இங்கிலாந்து.. தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி!
Tasmac Income: டாஸ்மாக் வருமானம்: கடந்த ஆண்டைவிட ரூ. 1, 734 கோடி அதிகரிப்பு
Tasmac Income: டாஸ்மாக் வருமானம்: கடந்த ஆண்டைவிட ரூ. 1, 734 கோடி அதிகரிப்பு
kallakurichi Illicit Liquor Death issue: மோசமான அரசியலை எடப்பாடி பழனிசாமி கையில் எடுத்துள்ளார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மோசமான அரசியலை எடப்பாடி பழனிசாமி கையில் எடுத்துள்ளார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
The GOAT Second Single: விஜய்யின் தி கோட் 2வது பாடலில் மறைந்த பவதாரணியின் குரல்.. க்ளிம்ஸ் வீடியோ!
The GOAT Second Single: விஜய்யின் தி கோட் 2வது பாடலில் மறைந்த பவதாரணியின் குரல்.. க்ளிம்ஸ் வீடியோ!
Breaking News LIVE: துப்பாக்கிச்சுடுதல் : முன்னணி வீராங்கனை ஷ்ரேயாசி சிங் பாரீஸ் ஒலிம்பிக்குக்கு தகுதி
Breaking News LIVE: துப்பாக்கிச்சுடுதல் : முன்னணி வீராங்கனை ஷ்ரேயாசி சிங் பாரீஸ் ஒலிம்பிக்குக்கு தகுதி
கள்ளச்சாராய கோரம்! உயிரிழப்புகள் அதிகரிக்க காரணம் என்ன? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
கள்ளச்சாராய கோரம்! உயிரிழப்புகள் அதிகரிக்க காரணம் என்ன? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
கெஜ்ரிவால் சிறையிலிருந்து வெளிவர சில நிமிடம்: திடீரென ஜாமீன் உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம்: நடந்தது என்ன?
கெஜ்ரிவால் சிறையிலிருந்து வெளிவர சில நிமிடம்: திடீரென ஜாமீன் உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம்: நடந்தது என்ன?
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உயிரிழப்பு எதிரொலி - மயிலாடுதுறையில் அதிரடி நடவடிக்கை எடுத்த ஆட்சியர்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உயிரிழப்பு எதிரொலி - மயிலாடுதுறையில் அதிரடி நடவடிக்கை எடுத்த ஆட்சியர்
Embed widget