மேலும் அறிய

Director Sundar C: நடிகனாக ரொம்பவே கஷ்டப்பட்டேன்.. நொந்துபோன சுந்தர்.சி.. என்ன காரணம்?

தமிழ் சினிமாவின் பல வெற்றிப்படங்களை இயக்கிய சுந்தர்.சி கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘தலைநகரம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

தலைநகரம் 2 படம் உருவாக, நான் நடித்த ‘இருட்டு’ படம் தான் காரணம் என இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி கூறியுள்ளார். 

தமிழ் சினிமாவின் பல வெற்றிப்படங்களை இயக்கிய சுந்தர்.சி கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘தலைநகரம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்த படத்தை சுந்தர் சியிடம் உதவி இயக்குநராக இருந்த சுராஜ் இயக்கியிருந்தார். தலைநகரம் படத்தில் வடிவேலு, ஜோதிர்மயி, பிரகாஷ்ராஜ், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இமான் இசையமைத்திருந்தார். படம் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்தது. குறிப்பாக வடிவேலுவின் நாய் சேகர் காமெடி எவர்க்ரீன் காமெடிகளில் ஒன்றாக அமைந்தது. 

இதனிடையே 17 ஆண்டுகள் கழித்து தலைநகரம் படத்தின் 2ஆம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்தை ‘முகவரி’, ’தொட்டி ஜெயா’, ‘நேபாளி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய வி.இசட்.துரை இயக்கியுள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் சில நாட்களுக்கு முன் வெளியானது. இதுதொடர்பான நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சுந்தர்.சி, “தலைநகரம் 2 படம் பண்ணலாமா என துரை கேட்டவுடன் படத்தின் தலைப்பு பற்றி தயாரிப்பாளரிடம் கேட்க வேண்டும் என சொன்னேன்.

தலைநகரம் படத்தின் எந்த தடையுமின்றி அனுமதி கொடுத்தார்கள். துரை இந்த படம் பற்றி கேட்டவுடன் வேறு யாராவது இருந்தால் எனக்கு சந்தேகம் வந்திருக்கும். ஆனால் நாங்கள் இருவரும் இருட்டு படத்தில் இணைந்திருக்கிறோம். அதனால் எந்த சந்தேகமும் எழவில்லை. இருட்டு படம் உருவானதே விடிவி கணேஷால் வந்தது தான். தினமும் அவர் என்னிடம் ஒரு படம் வேண்டும் என கேட்டுக் கொண்டே இருந்தார். 

நான் அவரை எப்படியாவது தவிர்க்க வேண்டும் என நினைத்து நல்ல இயக்குநர் வேண்டும் என சொன்னேன். விடிவி கணேஷ் தான் எனக்கு துரையை அறிமுகப்படுத்தினார். நாங்கள் இருவரும் பேசி பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு ஹாரர் படம் பண்ணலாம் என முடிவெடுத்தோம். ஆனால் இருட்டு படத்தின் கதை சூப்பராக இருந்தது. எனக்கு அந்த படம் ரொம்ப பிடித்திருந்தது. அந்த படத்தின் வெற்றி தான் தலைநகரம் 2 படம் பண்ணலாமா என கேட்டவுடன் ஓகே சொல்ல வைத்தது. 

இந்த படத்தில் அவ்வளவு ஆக்‌ஷன் காட்சிகள் உள்ளது. நான் நிறைய படம் இயக்கியிருக்கேன், நடிச்சிருக்கேன், தயாரிச்சிருக்கேன். ஷூட்டிங் முடிச்சி வீட்டுக்கு போனால் நன்றாக தூங்குவேன். ஆனால் இந்த படம் ஷூட்டிங் முடிச்சிட்டு போனா என் மனைவி குஷ்பூவிடம் கை, கால் எல்லாம் அமுக்கி விட சொல்வேன். அவ்வளவு பிரஷ்ஷர். இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியும் துரை செதுக்குனது என்று சொல்லலாம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

TN weather Reoprt: இன்று 2 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், 4 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை நிலவரம்
TN weather Reoprt: இன்று 2 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், 4 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை நிலவரம்
ஜெயலலிதா கூடாரத்தில் கருணாநிதியின் மகன்.! மு.க.முத்து வாழ்கைக் கதை
ஜெயலலிதா கூடாரத்தில் கருணாநிதியின் மகன்.! மு.க.முத்து வாழ்கைக் கதை
இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டிகள்.. அமித் ஷா சொன்ன முக்கிய தகவல்
இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டிகள்.. அமித் ஷா சொன்ன முக்கிய தகவல்
என்னை கொல்ல சதி.. மதுரை ஆதீனம் தொடர்பான வழக்கில் முன் ஜாமின் உத்தரவில் என்ன உள்ளது ?
என்னை கொல்ல சதி.. மதுரை ஆதீனம் தொடர்பான வழக்கில் முன் ஜாமின் உத்தரவில் என்ன உள்ளது ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs EPS |
Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்
NDA Alliance | வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா! வெளுத்து வாங்கிய புகழேந்தி
PMK ADMK Alliance | கூட்டணிக்கு அழைத்த EPS ”ஆட்சியில் பங்கு வேண்டும்” செக் வைத்த அன்புமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN weather Reoprt: இன்று 2 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், 4 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை நிலவரம்
TN weather Reoprt: இன்று 2 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், 4 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை நிலவரம்
ஜெயலலிதா கூடாரத்தில் கருணாநிதியின் மகன்.! மு.க.முத்து வாழ்கைக் கதை
ஜெயலலிதா கூடாரத்தில் கருணாநிதியின் மகன்.! மு.க.முத்து வாழ்கைக் கதை
இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டிகள்.. அமித் ஷா சொன்ன முக்கிய தகவல்
இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டிகள்.. அமித் ஷா சொன்ன முக்கிய தகவல்
என்னை கொல்ல சதி.. மதுரை ஆதீனம் தொடர்பான வழக்கில் முன் ஜாமின் உத்தரவில் என்ன உள்ளது ?
என்னை கொல்ல சதி.. மதுரை ஆதீனம் தொடர்பான வழக்கில் முன் ஜாமின் உத்தரவில் என்ன உள்ளது ?
எங்கப்பாவும், நானும் தோத்துட்டோம்.. கருணாநிதி பற்றி மு.க.முத்து கூறியது இதுதான்!
எங்கப்பாவும், நானும் தோத்துட்டோம்.. கருணாநிதி பற்றி மு.க.முத்து கூறியது இதுதான்!
பக்தர்களுக்கு ஷாக்... திருவண்ணாமலை கோவில் தரிசன கட்டணம் உயர்வு! முழு விவரம்
பக்தர்களுக்கு ஷாக்... திருவண்ணாமலை கோவில் தரிசன கட்டணம் உயர்வு! முழு விவரம்
மதுரை வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமறைவாக இருந்த காவலர் பூபாலன் கைது!
மதுரை வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமறைவாக இருந்த காவலர் பூபாலன் கைது!
Railway Board Approval: 4-வது முனையம்; பெரம்பூர் to அம்பத்தூர் 2 புதிய ரயில் பாதைகள்; சூப்பரான ரயில்வே வாரிய அறிவிப்பு
4-வது முனையம்; பெரம்பூர் to அம்பத்தூர் 2 புதிய ரயில் பாதைகள்; சூப்பரான ரயில்வே வாரிய அறிவிப்பு
Embed widget