மேலும் அறிய

சமூக நல்லிணக்கம் தேவை.. மத உணர்வுகளை சிறுமைப்படுத்தாதீங்க.. சீனுராமசாமி அட்வைஸ்!

"உலகம் படைக்கப்பட்டது" என்று நம்புபவர் ஆத்திகர்; "உலகம் உருவானது" என்று நம்புபவர் நாத்திகர். ​பெரும்பாலும் கம்யூனிஸ்டுகள் இந்த வழிமுறையைத்தான் கடைப்பிடிப்பார்கள் என சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

சமூக நல்லிணக்கத்தைப் பேண வேண்டும் என்று நினைத்தால் எந்த மத உணர்வையும் தாக்கிப் பேசவோ கூடாது என இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரு தினங்கள் முன்பு பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டில் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார். இதற்கு பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட இந்துத்துவா கொள்கை கொண்ட நபர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் தன்  கருத்தில் உறுதியாக இருந்த உதயநிதி, சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என சொன்னது ஏற்றதாழ்வுகள் இல்லாமல் சமூகத்தில் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று தான் என விளக்கமளித்தார். 

இந்த நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சிந்தித்துப் பார்க்கிறேன்... ​ஒருவரை நாத்திகராக உருவாக்க வேண்டும் என்றால் அல்லது அப்படி ஒருவர் உருவாக வேண்டும் என்றால், அது விஞ்ஞானபூர்வமான தனி உரையாடல்கள், கூட்டு உரையாடல்கள் மற்றும் தத்துவப் பகிர்வுகள் மூலமாகத்தான் சாத்தியமாகும். ​

நான் மிகச் சுருக்கமாகச் சொல்வேன்: "உலகம் படைக்கப்பட்டது" என்று நம்புபவர் ஆத்திகர்; "உலகம் உருவானது" என்று நம்புபவர் நாத்திகர். ​பெரும்பாலும் கம்யூனிஸ்டுகள் இந்த வழிமுறையைத்தான் கடைப்பிடிப்பார்கள். ஒற்றை செல் உயிரினமான அமீபாவிலிருந்து இந்த உலகம் எப்படிப் பரிணாம வளர்ச்சி அடைந்தது என்று தத்துவங்களின் அடிப்படையில் பேசத் தொடங்கி, 'டயலெக்டிக்கல் மெட்டீரியலிசம்' (Dialectical Materialism) என்கிற இயங்கியல் வாதத்திற்கு வருவார்கள். ​

உதாரணமாக, கார்ல் மார்க்ஸ் "மதம் ஒரு அபின், ஏழைகளின் ஏக்கப் பெருமூச்சு" என்று சொன்னால், அதற்கான காரணத்தை தத்துவத்தின் அடிப்படையில் மட்டுமே பேச வேண்டும். அதேபோல, சார்லஸ் டார்வின் தன் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை முன்வைத்தபோது, அவர் எந்த மத நம்பிக்கையையும் நேரடியாகக் கேலி செய்யவில்லை. மாறாக, இயற்கையின் தரவுகளையும் ஆதாரங்களையும் மட்டுமே தர்க்கப்பூர்வமாக முன்வைத்தார். அதுவே ஒரு மாபெரும் அறிவுப் புரட்சிக்கு வித்திட்டது. ​

இதை விடுத்து, வெறுமனே மத வழிபாடுகளையோ, சடங்குகளையோ அல்லது மக்களின் நம்பிக்கைகளையோ கேலி செய்வதன் மூலம் ஒருவரைப் பகுத்தறிவுவாதியாக மாற்றிவிட முடியாது. ஒருவருக்கு நோய் வரும்போது, அவர் செய்யும் பிரார்த்தனையைக் கிண்டல் செய்வதை விட, மருத்துவ அறிவியலின் அவசியத்தை அவரிடம் பொறுமையாக எடுத்துரைப்பதே உண்மையான விழிப்புணர்வாக மாறும். ​மாறாக, நம்பிக்கைகளைக் கேலி செய்வது கடுமையான எதிர்விளைவுகளையே உண்டாக்கும்.

கடவுள் மீது நம்பிக்கை உள்ள ஒருவரிடம் கடவுளை நிந்தித்துப் பேசும்போது, அவர் ஒரு மதவெறியராக மாறிவிடுகிற அபாயமே இங்கு அதிகம். ​சமூக நல்லிணக்கத்தைப் பேண வேண்டும் என்று நினைக்கிறவர்கள், அதை ஆதரிக்கிறவர்கள், பகுத்தறிவு என்ற பெயரில் எந்தவொரு தனி வழிபாடுகளையோ, சம்பிரதாயங்களையோ, மத உணர்வுகளையோ சிறுமையாகப் பேசவோ, சட்டென்று நேரடியாகத் தாக்கிப் பேசவோ கூடாது.

அப்படிப் புண்படுத்தினால், சமூக நல்லிணக்கம் உண்டாகாமல் மதப் பூசல்கள்தான் பெருகும். ​புரிதல்களையும் மாற்றங்களையும் தர்க்கபூர்வமான உரையாடல்கள் மூலமாகத்தான் கொண்டுவர முடியும். இதைத்தான் விஞ்ஞானக் கழகத்தாரும், கம்யூனிஸ்டுகளும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். அதனால்தான் கம்யூனிச நாடுகளில் கூட வழிபாட்டுத் தலங்கள் தனி மரியாதையுடன் இன்றும் பாதுகாக்கப்படுகின்றன” என தெரிவித்துள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

கிரிக்கெட் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும் மம்மட்டியான் ஸ்டார்ஸ்...விமர்சனம் இதோ
கிரிக்கெட் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும் மம்மட்டியான் ஸ்டார்ஸ்...விமர்சனம் இதோ
வந்துட்டே இருக்கேன்...வந்துட்டே இருக்கேன்...விசாரணை அலைச்சலில் கடுப்பான சூரி
வந்துட்டே இருக்கேன்...வந்துட்டே இருக்கேன்...விசாரணை அலைச்சலில் கடுப்பான சூரி
பாலச்சந்தர் முதல் பாக்யராஜ் வரை..முடிவுக்கு வரும் பா வரிசை இயக்குநர்களின் சகாப்தம்
பாலச்சந்தர் முதல் பாக்யராஜ் வரை..முடிவுக்கு வரும் பா வரிசை இயக்குநர்களின் சகாப்தம்
விஜய்க்கு எதிராக பேசியதாக மிரட்டும் தவெக குருப்...விஷ்ணு விஷால் விளக்கம்
விஜய்க்கு எதிராக பேசியதாக மிரட்டும் தவெக குருப்...விஷ்ணு விஷால் விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs SPV : பதவி கொடுத்தும் கண்டுக்காத எஸ்.பி.வேலுமணி டீம்.! காத்திருந்து ஏமாந்த இபிஎஸ்- அதிமுகவில் திடீர் ட்விஸ்ட்
பதவி கொடுத்தும் கண்டுக்காத எஸ்.பி.வேலுமணி டீம்.! காத்திருந்து ஏமாந்த இபிஎஸ்- அதிமுகவில் திடீர் ட்விஸ்ட்
TN Govt: தெலுங்கர்னா ஓகே வா..! என்னயா சப்பகட்டு இது? தவெக அரசின் முடிவால் கொதிக்கும் தமிழர்கள் - வாபஸ்?
தெலுங்கர்னா ஓகே வா..! என்னயா சப்பகட்டு இது? தவெக அரசின் முடிவால் கொதிக்கும் தமிழர்கள் - வாபஸ்?
PT Arasakumar: ரூ.100 கோடியை சுருட்டிய திமுக நிர்வாகி..! தனியார் பள்ளிகளுக்கு விபூதி - நடந்தது என்ன? சிக்கியது எப்படி?
ரூ.100 கோடியை சுருட்டிய திமுக நிர்வாகி..! தனியார் பள்ளிகளுக்கு விபூதி - நடந்தது என்ன? சிக்கியது எப்படி?
TN Weather Update: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
Vaiko: குதிரை பேரத்தில் ஈடுபட்டாரா முதலமைச்சர் விஜய்.? வைகோ சொன்ன அதிர்ச்சித் தகவல்
குதிரை பேரத்தில் ஈடுபட்டாரா முதலமைச்சர் விஜய்.? வைகோ சொன்ன அதிர்ச்சித் தகவல்
Manickam Tagore: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரானார் மாணிக்கம் தாகூர்; தேசிய தலைமை அறிவிப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரானார் மாணிக்கம் தாகூர்; தேசிய தலைமை அறிவிப்பு
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
விஜய் கொடுத்த ஐடியா.! ஓகே சொன்ன வைகோ- கடைசியில் டிமிக்கி கொடுத்த MLA-க்கள்- நடந்தது என்ன.?
விஜய்யை நம்பி மொத்தத்தையும் இழந்த வைகோ.! டிமிக்கி கொடுத்த எம்எல்ஏக்கள்- நடந்தது என்ன.?
Embed widget