மேலும் அறிய

சமூக நல்லிணக்கம் தேவை.. மத உணர்வுகளை சிறுமைப்படுத்தாதீங்க.. சீனுராமசாமி அட்வைஸ்!

"உலகம் படைக்கப்பட்டது" என்று நம்புபவர் ஆத்திகர்; "உலகம் உருவானது" என்று நம்புபவர் நாத்திகர். ​பெரும்பாலும் கம்யூனிஸ்டுகள் இந்த வழிமுறையைத்தான் கடைப்பிடிப்பார்கள் என சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

சமூக நல்லிணக்கத்தைப் பேண வேண்டும் என்று நினைத்தால் எந்த மத உணர்வையும் தாக்கிப் பேசவோ கூடாது என இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரு தினங்கள் முன்பு பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டில் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார். இதற்கு பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட இந்துத்துவா கொள்கை கொண்ட நபர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் தன்  கருத்தில் உறுதியாக இருந்த உதயநிதி, சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என சொன்னது ஏற்றதாழ்வுகள் இல்லாமல் சமூகத்தில் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று தான் என விளக்கமளித்தார். 

இந்த நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சிந்தித்துப் பார்க்கிறேன்... ​ஒருவரை நாத்திகராக உருவாக்க வேண்டும் என்றால் அல்லது அப்படி ஒருவர் உருவாக வேண்டும் என்றால், அது விஞ்ஞானபூர்வமான தனி உரையாடல்கள், கூட்டு உரையாடல்கள் மற்றும் தத்துவப் பகிர்வுகள் மூலமாகத்தான் சாத்தியமாகும். ​

நான் மிகச் சுருக்கமாகச் சொல்வேன்: "உலகம் படைக்கப்பட்டது" என்று நம்புபவர் ஆத்திகர்; "உலகம் உருவானது" என்று நம்புபவர் நாத்திகர். ​பெரும்பாலும் கம்யூனிஸ்டுகள் இந்த வழிமுறையைத்தான் கடைப்பிடிப்பார்கள். ஒற்றை செல் உயிரினமான அமீபாவிலிருந்து இந்த உலகம் எப்படிப் பரிணாம வளர்ச்சி அடைந்தது என்று தத்துவங்களின் அடிப்படையில் பேசத் தொடங்கி, 'டயலெக்டிக்கல் மெட்டீரியலிசம்' (Dialectical Materialism) என்கிற இயங்கியல் வாதத்திற்கு வருவார்கள். ​

உதாரணமாக, கார்ல் மார்க்ஸ் "மதம் ஒரு அபின், ஏழைகளின் ஏக்கப் பெருமூச்சு" என்று சொன்னால், அதற்கான காரணத்தை தத்துவத்தின் அடிப்படையில் மட்டுமே பேச வேண்டும். அதேபோல, சார்லஸ் டார்வின் தன் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை முன்வைத்தபோது, அவர் எந்த மத நம்பிக்கையையும் நேரடியாகக் கேலி செய்யவில்லை. மாறாக, இயற்கையின் தரவுகளையும் ஆதாரங்களையும் மட்டுமே தர்க்கப்பூர்வமாக முன்வைத்தார். அதுவே ஒரு மாபெரும் அறிவுப் புரட்சிக்கு வித்திட்டது. ​

இதை விடுத்து, வெறுமனே மத வழிபாடுகளையோ, சடங்குகளையோ அல்லது மக்களின் நம்பிக்கைகளையோ கேலி செய்வதன் மூலம் ஒருவரைப் பகுத்தறிவுவாதியாக மாற்றிவிட முடியாது. ஒருவருக்கு நோய் வரும்போது, அவர் செய்யும் பிரார்த்தனையைக் கிண்டல் செய்வதை விட, மருத்துவ அறிவியலின் அவசியத்தை அவரிடம் பொறுமையாக எடுத்துரைப்பதே உண்மையான விழிப்புணர்வாக மாறும். ​மாறாக, நம்பிக்கைகளைக் கேலி செய்வது கடுமையான எதிர்விளைவுகளையே உண்டாக்கும்.

கடவுள் மீது நம்பிக்கை உள்ள ஒருவரிடம் கடவுளை நிந்தித்துப் பேசும்போது, அவர் ஒரு மதவெறியராக மாறிவிடுகிற அபாயமே இங்கு அதிகம். ​சமூக நல்லிணக்கத்தைப் பேண வேண்டும் என்று நினைக்கிறவர்கள், அதை ஆதரிக்கிறவர்கள், பகுத்தறிவு என்ற பெயரில் எந்தவொரு தனி வழிபாடுகளையோ, சம்பிரதாயங்களையோ, மத உணர்வுகளையோ சிறுமையாகப் பேசவோ, சட்டென்று நேரடியாகத் தாக்கிப் பேசவோ கூடாது.

அப்படிப் புண்படுத்தினால், சமூக நல்லிணக்கம் உண்டாகாமல் மதப் பூசல்கள்தான் பெருகும். ​புரிதல்களையும் மாற்றங்களையும் தர்க்கபூர்வமான உரையாடல்கள் மூலமாகத்தான் கொண்டுவர முடியும். இதைத்தான் விஞ்ஞானக் கழகத்தாரும், கம்யூனிஸ்டுகளும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். அதனால்தான் கம்யூனிச நாடுகளில் கூட வழிபாட்டுத் தலங்கள் தனி மரியாதையுடன் இன்றும் பாதுகாக்கப்படுகின்றன” என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

சமூக நல்லிணக்கம் தேவை.. மத உணர்வுகளை சிறுமைப்படுத்தாதீங்க.. சீனுராமசாமி அட்வைஸ்!
சமூக நல்லிணக்கம் தேவை.. மத உணர்வுகளை சிறுமைப்படுத்தாதீங்க.. சீனுராமசாமி அட்வைஸ்!
Karuppu Release: தீர்ந்தது பிரச்னை.. ரிலீசுக்கு தயாரான கருப்பு படம்.. சூர்யா போட்ட ட்வீட்!
Karuppu Release: தீர்ந்தது பிரச்னை.. ரிலீசுக்கு தயாரான கருப்பு படம்.. சூர்யா போட்ட ட்வீட்!
உளவாளி வைத்து என்னை கண்காணிக்கிறார்கள்...கெனிஷா பிரான்சிஸ் அதிர்ச்சி வீடியோ
உளவாளி வைத்து என்னை கண்காணிக்கிறார்கள்...கெனிஷா பிரான்சிஸ் அதிர்ச்சி வீடியோ
Karuppu Movie: ஜனநாயகனை தொடர்ந்து இணையத்தில் பரவும் கருப்பு படம்.. சூர்யா ரசிகர்கள் அதிர்ச்சி!
Karuppu Movie: ஜனநாயகனை தொடர்ந்து இணையத்தில் பரவும் கருப்பு படம்.. சூர்யா ரசிகர்கள் அதிர்ச்சி!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

Delhi Bus Gang Rape|டெல்லியில் மீண்டும் நிர்பயா! பேருந்தில் நேர்ந்த கொடூரம் கூட்டு பாலியல் வன்கொடுமை
வெள்ளை அறிக்கை விரைவில்!ஆட்டத்தை தொடங்கிய விஜய்பதற்றத்தில் திமுக
சுக்குநூறான அதிமுக? EPS vs SP வேலுமணி! முற்றும் மோதல்
MA Siddique IAS | நிதித்துறை 'சிங்கம்'விஜய்யின் LIFESAVER..யார் இந்த சித்திக் IAS?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET UG: அடுத்தாண்டு முதல் ஆன்லைனில் நீட் தேர்வு; இனி முறைகேடு இருக்காது- மத்திய அமைச்சர் உறுதி!
NEET UG: அடுத்தாண்டு முதல் ஆன்லைனில் நீட் தேர்வு; இனி முறைகேடு இருக்காது- மத்திய அமைச்சர் உறுதி!
NEET Re-exam Date: ரத்து செய்யப்பட்ட நீட்.. மறுதேர்வு தேதி அறிவிப்பு.. நோட் பண்ணுங்க!
NEET Re-exam Date: ரத்து செய்யப்பட்ட நீட்.. மறுதேர்வு தேதி அறிவிப்பு.. நோட் பண்ணுங்க!
Gold and silver rate today : ரூ. 10,000 சரிந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு குஷி.! இன்றைய விலை நிலவரம் இதோ...
ரூ. 10,000 சரிந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு குஷி.! இன்றைய விலை நிலவரம் இதோ...
Magalir Urimai Thogai: கால அவகாசம் கேட்ட விஜய்.. திடீரென அக்கவுண்டுக்கு வந்த மகளிர் உரிமைத் தொகை.. நடந்தது என்ன?
Magalir Urimai Thogai: கால அவகாசம் கேட்ட விஜய்.. திடீரென அக்கவுண்டுக்கு வந்த மகளிர் உரிமைத் தொகை.. நடந்தது என்ன?
Fuel Price Hike: புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு - லிட்டருக்கு ரூ.3 வரை அதிகரிப்பு!
Fuel Price Hike: புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு - லிட்டருக்கு ரூ.3 வரை அதிகரிப்பு!
EPS vs SPV: இபிஎஸ் அழைத்தால் பேச தயார்.! சரண்டர் ஆன எஸ்.பி.வேலுமணி- வெளியான முக்கிய அறிக்கை
இபிஎஸ் அழைத்தால் பேச தயார்.! சரண்டர் ஆன எஸ்.பி.வேலுமணி- வெளியான முக்கிய அறிக்கை
அம்மா இருந்தால் இதெல்லாம் நடக்குமா? - கட்சியை விட்டு நீக்கிய இபிஎஸ்.. கதறி அழுத பெஞ்சமின்!
அம்மா இருந்தால் இதெல்லாம் நடக்குமா? - கட்சியை விட்டு நீக்கிய இபிஎஸ்.. கதறி அழுத பெஞ்சமின்!
Premalatha vs Vijay : முகத்தை மூடிக்கொண்டு முதல்வர் வீட்டிற்கு வந்தவர் யார்.? விஜய்யை விடாமல் மீண்டும் துரத்தும் பிரேமலதா
முகத்தை மூடிக்கொண்டு முதல்வர் வீட்டிற்கு வந்தவர் யார்.? விஜய்யை விடாமல் மீண்டும் துரத்தும் பிரேமலதா
Embed widget