CM Joseph Vijay: லஞ்சம் கொடுக்காதீங்கன்னு சொன்ன விஜய்.. இதான்யா வேணும் என பாராட்டிய சீனு ராமசாமி!
கரூரில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். அப்போது, “உங்ககிட்ட யாராவது லஞ்சம் ஏதாவது கேட்டாங்கன்னா, கொடுக்க முடியாதுன்னு சொல்லுங்க என வெளிப்படையாகவே கூறியது பாராட்டைப் பெற்றுள்ளது.

எதற்கும் லஞ்சம் கொடுக்க வேண்டாம் என சொல்லும் முதலமைச்சர் விஜயின் பேச்சு எளிய மக்களின் நம்பிக்கையை தட்டி எழுப்புவதாக இயக்குநர் சீனு ராமசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.
தவெக ஆட்சியில் வந்த மாற்றம்
2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்து செயல்பட்டு வருகிறது. முதலமைச்சராக ஜோசப் விஜய் பணியாற்றி வருகிறார். தவெக ஆட்சி வந்ததில் இருந்து அனைத்து துறைகளில் பல மாற்றங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிகாரிகள் சரியான நேரத்திற்கு அலுவலகம் வர வேண்டும், மக்களை மதிக்க வேண்டும், மக்கள் அளிக்கும் மனுக்கள் மீதான நடைமுறைகளை விளக்கி புரிதலை ஏற்படுத்த வேண்டும், லஞ்சம் வாங்கக்கூடாது, தேவையில்லாமல் அதிகாரிகள் பணி செய்வதை சொந்த கட்சியினராகவே இருந்தாலும் தடுக்கக்கூடாது என முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி அமைச்சர்களும், அதிகாரிகளும் செயல்பட்டு வருகின்றனர். 100 சதவிகிதம் ஊழல், லஞ்சம் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உருவாகும் என முதலமைச்சர் விஜய் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மக்களும் மாற்றம் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.
லஞ்சம் கொடுக்காதீர்கள்.. என் பேரை சொல்லுங்கள்
இந்த நிலையில் கரூரில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். அப்போது, “உங்ககிட்ட யாராவது லஞ்சம் ஏதாவது கேட்டாங்கன்னா, கொடுக்க முடியாதுன்னு சொல்லுங்க, உங்களோட நான் இருக்கேன். அப்படியே யாராவது கட்டாயப்படுத்தினார்கள் என்றால், "இது எங்க மகன், எங்க பிள்ளை, எங்க அண்ணன், எங்க தம்பி, எங்க விஜய், எங்க விஜியோட ஆட்சின்னு ஸ்ட்ராங்கா சொல்லுங்க” என அதிரடியாக பேசினார்.
மேலும், “லஞ்சம் எல்லாம் ஒழிக்க முடியாது, ஊழல் எல்லாம் ஒழிக்க முடியாது, அதெல்லாம் ரத்தத்தில் ஊறிப்போனது என சொன்னவர்கள் எல்லாரும் இன்றைக்கு அரசு அலுவலகங்களுக்கு சென்று பாருங்கள். ஒரு பைசா லஞ்சம் இல்லாமல் எல்லா வேலையும் உடனடியாக நடக்கிறது. அதைவிட எங்களுக்கு மரியாதை எல்லாம் கொடுக்கிறார்கள் என மக்கள் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள்” எனவும் முதலமைச்சர் விஜய் பேசினார்.
Also Read: TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
சீனுராமசாமி பாராட்டு
இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் கரூரில் பேசிய சில கருத்துகளை இயக்குநர் சீனு ராமசாமி வரவேற்று பாராட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், "லஞ்சம் கொடுக்காதே நான் இருக்கிறேன்". எளியோர்களின் பெருமூச்சையும் நம்பிக்கையையும் தட்டி எழுப்புகிறது மாண்புமிகு முதல்வரின் இந்த வாக்கு. ஒரு அதிகாரம் தன் குடிமக்களுக்குத் தரும் மிகச்சிறந்த பாதுகாப்பு இதுதான். ஆனால், இந்த வெளிச்சம் நிலைக்க வேண்டுமானால் நாம் மாற வேண்டும். லஞ்சம் என்பது நம் சமூகத்தின் நோய். கொடுப்பதும் வாங்குவதும் ஒன்றுதான். இதை உணர்ந்தாலே நேர்மையான பாதை தெளிந்துவிடும். ஒளி பிறக்கட்டும்” என தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















