மேலும் அறிய

”விலங்குகளை விட மனுஷங்களுக்கு அன்பு குறைஞ்சுபோச்சா? காரணம் இதுதான்“ - இயக்குநர் ராம்

"அன்பு மனிதனுக்கு இயல்பாக , இயற்கையாக இருக்கிறது. ஆனால் அந்த அன்பை வெளிக்காட்ட முடியாத சூழல் நிறைய உருவாகியிருக்கிறது."

சொல்லப்படாத சமுதாய பிரச்சனைகள் , மாறுபட்ட கண்ணோட்டம் என சினிமாவில் ஆழமான கருத்துகளை பதிய வைக்கும் வித்தை தெரிந்தவர் இயக்குநர் ராம். கற்றது தமிழ், தங்க மீன்கள் , பேரன்பு , தரமணி என இவர் எடுத்த ஒவ்வொரு படங்களும் அந்த படத்தில் இடம்பெறும் வசனங்களும் மிக ஆழமானவை . இயக்குநர் ராம் படங்களில் மட்டும் சமுதாய பிரச்சனைகளை , குடும்பங்களின் மாறுபட்ட நிலையை பேசக்கூடியவர் அல்ல. கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் , சிக்குண்டு கிடக்கும் சமுதாய பின்னல்களின் அவலநிலையையும் , அதற்கு பின்னால் இருக்கும் அரசியல் வர்த்தகத்தையும் வெளிப்படையாக பேசக்கூடியவர். அப்படித்தான் அவர் கூட்டுக்குடும்பத்தில் இருந்து தனிக்குடும்பமாக வாழ்பவர்கள் , தங்களுக்கு தெரியாமலேயே  அரசியல் வணிகத்தில் சிக்கியிருக்கிறார்கள் என  நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.


”விலங்குகளை விட மனுஷங்களுக்கு அன்பு குறைஞ்சுபோச்சா? காரணம் இதுதான்“ - இயக்குநர் ராம்


அதில் ”மனிதனின் அழகான கண்டுபிடிப்புகளில்  ஒன்று குடும்பம். இன்று அது வெவ்வேறு பரிணாமங்களை எடுத்திருக்கிறது.அன்பு மனிதனுக்கு இயல்பாக , இயற்கையாக இருக்கிறது. ஆனால் அந்த அன்பை வெளிக்காட்ட முடியாத சூழல் நிறைய உருவாகியிருக்கிறது. காரணம் மனிதனுக்கு  தன்னை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய சூழல்ல இருக்காங்க. முன்பெல்லாம் கூட்டுக்குடும்பத்தில் இருந்தோம் . அப்போது நாம இல்லாவிட்டாலும் நமது குழந்தையை நம் குடும்பத்தில் இருக்கும் வேறு ஒருவர் பாத்துக்கொள்வார் என்றிருந்தோம். ஆனால் இப்போது  சுதந்திரமாக , தனித்தனி வீடுகளாக  மாறிய சூழலில் ,  தனித்தனியா இயங்குறாங்க.

அப்போதான் இன்செக்கியூரிட்டி உருவாகுது. குறிப்பா நான் யார் தோள்ல சாய்ந்து அழுவது அப்படிங்குற கேள்வி இருக்கு , அப்படியே தோள் இருந்தாலும் அதற்கான நேரம் இருக்கா என்பதுதான்  கேள்வி. குழந்தைகளுடன் அமர்ந்து படம் பார்ப்பதோ அல்லது சினிமாவிற்கு அழைத்து செல்வது மட்டுமல்ல . குழந்தைகளுடன் அமர்ந்து பேசணும் .

மற்றவர்களுடன் குடும்பத்தில் அமர்ந்து பேசனும் அதுதான் குவாலிட்டி டைம்னு சொல்லுறாங்க. அப்படி பேசாவிட்டால் அவங்க மன அழுத்ததுற்கு அறியாமலேயே தள்ளப்படுறாங்க. தனித்தனியாக வாழ்வதற்கு பின்னால் நம்மை அறியாமலேயே  அரசியல் இருக்கிறது. கூட்டுக்குடும்பகா இருந்து தனியாக  வந்து விட்ட பிறகு நிறைய தேவைகள் , பொருட்கள் வாங்கும் வீதம் அதிகமாயிடும். மனிதன்  தன்னுடைய வாழ்க்கையையே போராட்டமாக மாற்றிவிட்டான் என்றால் , அரசை நோக்கி வரமாட்டான்.

அரசு தனக்கு செய்ய வேண்டிய கடமைகளையோ எதித்து கேள்வி கேட்க மாட்டார். தனக்கு உண்டான மன உளைச்சலை போக்க டாஸ்மார்க்கில் சரக்கடித்துவிட்டு தூங்கிவிடுவான் . அரசு எந்த கேள்வியும் கேட்காமல் இருக்க தனியாக வாழ வியாபார நிறுவனங்கள் , அரசு உங்களை நிர்பந்திக்குது” என சமுதாயத்தின் மீதான தனது பார்வையை முன் வைத்திருக்கிறார் இயக்குநர் ராம்.

தலைப்பு செய்திகள்

ஐஸ்வர்யா லக்‌ஷ்மியை ஓரம்கட்டிய கட்டா குஸ்தி 2 படக்குழு..பாராட்டுக்களை சுருட்டிய விஷ்ணு விஷால்
ஐஸ்வர்யா லக்‌ஷ்மியை ஓரம்கட்டிய கட்டா குஸ்தி 2 படக்குழு..பாராட்டுக்களை சுருட்டிய விஷ்ணு விஷால்
Actress Uma: மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட பிரபல நடிகை.. சிகிச்சையின்போது வெளியான புகைப்படம்!
Actress Uma: மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட பிரபல நடிகை.. சிகிச்சையின்போது வெளியான புகைப்படம்!
அஜித் படத்தின் தயாரிப்பாளராகும் ஷாலினி !
அஜித் படத்தின் தயாரிப்பாளராகும் ஷாலினி !
CM Vijay: பாலையா, சிரஞ்சீவி பேச்சு கேவலமா இருக்கும்.. விஜய் அரசியல் சூப்பர்.. நடிகை ரோஜா புகழாரம்!
CM Vijay: பாலையா, சிரஞ்சீவி பேச்சு கேவலமா இருக்கும்.. விஜய் அரசியல் சூப்பர்.. நடிகை ரோஜா புகழாரம்!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
TTV Dhinakaran :
"தொட்டால் விடமாட்டேன்" சொன்ன விஜய்.! சொந்தக் கட்சி ஊழல்வாதிய என்ன செய்யப்போறீங்க.? டிடிவி கேள்வி
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Embed widget