சுஹாசினிக்கு திமிர் அதிகம் என்ற பார்த்திபன்...உங்க பார்வையில் கோளாறு என்ற சுஹாசினி..என்ன நடந்தது?
தி வெர்டிக்ட் படத்தின் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் பார்த்திபன் மற்றும் நடிகை சுஹாசினியின் பேசு ரசிகர்களை கவர்ந்துள்ளது

தி வெர்டிக்ட்
அறிமுக இயக்குநரான கிருஷ்ணா சங்கர் இயக்கியிருக்கும் படம் தி வெர்டிக்ட். இத்திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுஹாசினி, வித்யுலேகா ராமன் மற்றும் பிரகாஷ் மோகன் தாஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க அமெரிக்காவில் தயாராகியுள்ளது இந்த படம்.
என் இளமையின் ரகசியம் என்ன? நடிகை சுஹாசினி பதில்!
"இங்கே என்னைப் பலரும் புகழ்ந்து பாராட்டினார்கள். அதில் இரண்டு விஷயம் உணர்ந்தேன். ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றாலும் இன்னொரு பக்கம் நாம் சரியாகச் செய்ய வேண்டுமே, நாம் ஏதாவது சாதித்திருக்கிறோமா சாதிக்க வேண்டுமே என்ற ஒரு குற்ற உணர்ச்சியும் வரும். இங்கே பெரிய பெரிய நட்சத்திரங்களுடன் என்னை ஒப்பிட்டார்கள். ஆனால் நான் நினைப்பது அடக்கமாக இருக்க வேண்டும், மேலும் அடக்கமாக இருக்க வேண்டும் என்பதுதான்.
இப்போதெல்லாம் ஒரு நடிகர் 12 பேர் இல்லாமல் படப்பிடிப்பு கிளம்புவதில்லையே. நான் தனி ஒருவராகத்தான் சென்று நடித்தேன். அதனால் பலருக்கும் தொந்தரவு குறைவு. பப்பிடிப்பில் மற்றவர் நடித்த காட்சிகளை நான் வேடிக்கை பார்த்தேன். என்னுடன் நடித்த சுருதி ஹரிஹரன் ஒத்திகை என்று என்னை தொந்தரவு செய்து கொண்டிருந்தார் .இதில் நாங்கள் ஜாலியாக இருந்தோம் .
உங்கள் இளமையின் ரகசியம் என்ன ?"என்று கேட்டபோது, "நீங்கள் கண்ணாடி போடாமல் என்னைப் பார்ப்பது தான் காரணம்" என்றார்.
சுஹாசினி அழகை புகழ்ந்த ஆர் பார்த்திபன்
"இங்கே சுஹாசினி அவர்களைப் பார்க்கும்போது, அவரது அழகின் திமிர் தெரிந்தது. அந்தத் திமிர் அவருக்கு அதிகம். எனக்கு 50 வயது என்று அவர் சொன்ன போது அந்தத் திமிர் தெரிந்தது. 28 வயதுக்கு மேல் பெண்கள் வயதை மறந்து விட்டால் திமிர் போல் ஒரு அழகு இருக்கும். அது பேரழகு. எனக்கு மணிரத்னம் மீது காதல் ,மணிரத்தினத்திற்கு சுஹாசினி மீது காதல்." என்று சொன்னார் பார்த்திபன் பேசிக் கொண்டிருந்தபோது , சுஹாசினி குறிப்பிட்டு தனக்கு 63 வயது என்றார்.
ஒரு பெண்ணின் அழகு 30 வயதுக்கு மேல் அறிவாக மாறும் போது அழகு. அதை 30 வயதுக்கு மேல் அறிவாக மாற்றலாம், அந்த அறிவையே அமைதியாக மாற்றலாம். அறிவாக மாறியதற்கு சுஹாசினி உதாரணம். அமைதியாக மாற்றியதற்கு அன்னை தெரசா உதாரணம். இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்" என்றார்.





















