மேலும் அறிய

Pa Ranjith: அம்பேத்கர் கனவை ஒரு சீடனாக நிறைவேற்றுவேன் - இயக்குநர் பா.ரஞ்சித்!

எந்த நோக்கத்திற்காக மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை தொடங்கினோமோ அது விரைவில் நனவாகும். கலை மக்களுக்கானது. அதை அவர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை நீலம் பண்பாட்டு மையம் தொடர்ந்து செய்யும் என பா.ரஞ்சித் கூறியுள்ளார்.

சமூக மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அம்பேத்கரின் கனவை நிறைவேற்றும் சீடனாக என்றும் இருப்பேன் என இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார். 

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ஒவ்வொரு ஆண்டு மார்கழி மாதம், ‘மார்கழியில் மக்களிசை’ என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. மார்கழி மாதம் கர்நாடக சங்கீதம் தான் என்ற நிலை மாறி அனைத்து விதமான இசைகளும் இசைக்கப்படும் நிகழ்ச்சியாக இது உள்ளது. இந்த மேடை கவனிக்கப்படாத பல கலைஞர்களுக்கும் மேடையாக உள்ளது. இந்த 2025ம் ஆண்டுக்கான மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி சென்னை அமைந்தகரையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் தொடங்கியது. டிசம்பர் 28ம் தேதி வரை இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை கனிமொழி எம்.பி., இயக்குநர்கள் வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பா.ரஞ்சித், “கடந்த 5 ஆண்டுகளாக நீங்கள் கொடுத்த ஆதரவு ரொம்ப ரொம்ப முக்கியமானது. அதேபோல் இந்த வருடமும் மிகப்பெரிய ஆதரவு கிடைத்துள்ளது. குறுகிய காலத்தில் நம்முடைய அழைப்பை ஏற்று இங்கு வந்திருக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் வெற்றிமாறன் என்னுடைய வளர்ச்சியிலும், தனிப்பட்ட முறையிலும் மிகப்பெரிய அக்கறைக் கொண்டவர். அதேபோல் கனிமொழி எம்.பி.,யை அவர் கவிதை எழுதும் காலத்தில் இருந்தே நல்ல பழக்கம் உள்ளது. 

சென்னை சங்கமம் நிகழ்ச்சி தான் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை நடத்த எனக்கு மிகப்பெரிய தூண்டுதலாக அமைந்தது. சமீபத்தில் எனக்கு மிகப்பெரிய அளவில் நெருங்கிய நண்பராக ஜி.வி.பிரகாஷ்குமார் மாறியுள்ளார். அவரின் அன்பு வார்த்தைகளால் விவரிக்க முடியாது. தொடர்ச்சியாக இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கிறார். 

அதேபோல மாநகரம் திரைப்படம் ஆரம்பிக்கும்போது என்னுடன் பேசிய லோகேஷ் கனகராஜ், இப்போது அதே அளவு அன்புடன், என்னை கவனித்துக் கொண்டே, எப்போது துணை நிற்பதாகவும் தெரிவித்துள்ளார். இன்னும் நிறைய பேர் நமக்காக ஆதரவுக்கரம் நீட்டுகிறார்கள்.இது சாதாரண விஷயம் அல்ல. ஏதோ ஒரு அளவு நேர்மையாக இருப்பதால் தான் இந்த ஆதரவு கிடைப்பதாக நினைக்கிறேன். நிச்சயம் அது தொடரும். அதற்காக தீவிரமாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். 

எந்த நோக்கத்திற்காக மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை தொடங்கினோமோ அது விரைவில் நனவாகும். இங்கிருக்கும் நலிவடைந்த கலைஞர்கள், கவனிக்கப்படாதவர்கள்,இன்டிபென்டெண்ட் கலைஞர்கள் ஆகியோருக்கு இந்நிகழ்ச்சி ஏதோ ஒரு வகையில் ஊக்கமாக இருக்கும். கலை மக்களுக்கானது. அதை அவர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை நீலம் பண்பாட்டு மையம் தொடர்ந்து செய்யும். பாபா சாகேப் அம்பேத்கர் வழியில் நின்று செய்யும். அவர் அரசியல் மாற்றம், சமூக மாற்றம் ஆகிய இரண்டு விஷயங்களை குறிப்பிட்டு சொன்னார். இதில் சமூக மாற்றம் பண்பாட்டின் மூலம் கொண்டு வர முடியும் என அவர் தீவிரமாக நம்பினார். அப்படியாக அம்பேத்கரின் கனவை நனவாக்கும் சீடனாக நான் என்றைக்கும் இருப்பேன்" என  தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
Pongal Gift 2026: 8ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு.! ரொக்கப்பணம் இருக்கா.? இல்லையா.? அரசின் முடிவு என்ன.?
8ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு.! ரொக்கப்பணம் இருக்கா.? இல்லையா.? அரசின் முடிவு என்ன.?
Nissan Kait SUV: இதோ, நாங்களும் வர்றோம்.! க்ரெட்டா, சியாராவிற்கு போட்டியாக நிசான் கெய்ட்; First Look
இதோ, நாங்களும் வர்றோம்.! க்ரெட்டா, சியாராவிற்கு போட்டியாக நிசான் கெய்ட்; First Look
Embed widget