மேலும் அறிய

Pa.Ranjith: தனித்து செயல்படுவது, குரல் எழுப்புவது சூழ்ச்சியா? - இயக்குநர் பா.ரஞ்சித் அடுக்கும் கேள்விகள்..

அம்பேத்கர், பெரியார், கம்யூனிஸ்டுகளின் தத்துவங்கள் என்பது வெவ்வேறானதுதான் என்றாலும் அதன் நோக்கம் ஒன்று தான் என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

ஒரு விஷயத்தை புரிந்து கொள்வதில் தான் நியாயம் இருக்கிறது என இயக்குநர் பா.ரஞ்சித் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். 

பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதம் தலித் வரலாற்று மாதமாக இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம்  “வானம் கலைத்திருவிழா” என்ற நிகழ்ச்சியாக கொண்டாடி வருகிறது. கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வேர்ச்சொல் தலித் இலக்கியக் கூடுகை என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், “நான் இலக்கியம் வாசிக்க தொடங்கியபோது முதன்முதலில் தோட்டியின் மகன் என்ற புத்தகத்தில் தலித் மக்களின் வாழ்க்கை வரலாறை படித்தேன். அதை படிக்கும்போது ரொம்ப கஷ்டமாக இருந்தது. சில எழுத்தாளர்கள் தலித் மக்களின் வாழ்க்கையை எழுதிய புத்தகங்களை படிக்கும்போது கோபமும் வந்தது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Neelam Social (@neelam.social)

அம்பேத்கர் மாடர்ன் இந்தியாவை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர். இந்தியா முழுமையும் சுதந்திரத்துக்காக பாடுபட்டு கொண்டிருந்தபோது ஒரு மனிதன் பொது சமூகம் காணாத தனித்த கனவு ஒன்றை கண்டுகொண்டிருந்தான். அன்றைக்கு அந்த கனவை நனவாக்க யாரும் அவருடன் கைகோர்க்கவில்லை. அம்பேத்கரின் குரல் அன்று தனித்து தான் ஒலித்தது. இங்கிருந்த ஒட்டுமொத்த அமைப்புகள், கட்சிகள் அவரை ஆங்கிலேயரின் கைக்கூலி என சொன்னார்கள். 

தனித்து செயல்படுவதே ஒரு சூழ்ச்சியா? தனித்த குரல் இருப்பது சூழ்ச்சியா? எனக்கு அம்பேத்கரை பிடிக்கும், நான் அதைப் பற்றி பேசுகிறேன். இது என்னோட மொழி. உனக்கு என்னோட உரையாட வேண்டுமென்றால் என்னை நீ சரியாக புரிந்துகொள் என்றுதான் சொல்கிறேன். அதில் சிக்கல் இருக்கிறது என்றால் யார் மீது பிரச்னை? நான் பேசுவது சரியல்ல. இவர்களுக்கு பின்னால் சூழ்ச்சி இருக்கிறது என குற்றங்களை சுமத்தி தப்பான ஆளாக மாற்றுகிறார்கள்.

அம்பேத்கர் இந்த கூப்பாடுகளை பற்றி எந்த கவலையும் படாதவர்.  நட்பு, பகை எது என்பது எங்களுக்கு தெரியும். விமர்சனம் என்பது இருக்கத்தான் செய்யும். அதை சரிசெய்வதற்காக தான் இருக்கிறோம். அம்பேத்கர், பெரியார், கம்யூனிஸ்டுகளின் தத்துவங்கள் என்பது வெவ்வேறானதுதான் என்றாலும் அதன் நோக்கம் ஒன்றுதான். நாங்கள் ஒன்றை விட ஒன்று மேலானது என சொல்லவில்லை. புரிந்து கொள்வதில்தான் நியாயம் இருக்கிறது” என்றார்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
Vinfast VF5: டியாகோ, பஞ்ச் மின்சார கார்களுக்கு முடிவுரை? VF5 மாடலை இறக்கும் வின்ஃபாஸ்ட் - ரேஞ்ச், விலை விவரங்கள்
Vinfast VF5: டியாகோ, பஞ்ச் மின்சார கார்களுக்கு முடிவுரை? VF5 மாடலை இறக்கும் வின்ஃபாஸ்ட் - ரேஞ்ச், விலை விவரங்கள்
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
Vinfast VF5: டியாகோ, பஞ்ச் மின்சார கார்களுக்கு முடிவுரை? VF5 மாடலை இறக்கும் வின்ஃபாஸ்ட் - ரேஞ்ச், விலை விவரங்கள்
Vinfast VF5: டியாகோ, பஞ்ச் மின்சார கார்களுக்கு முடிவுரை? VF5 மாடலை இறக்கும் வின்ஃபாஸ்ட் - ரேஞ்ச், விலை விவரங்கள்
IND Vs NZ ODI: இந்த ஃபர்னீட்சராச்சும் மிஞ்சுமா? இந்தியாவில் ஒருநாள் தொடரை வென்றிடாத நியூ., கில் தொடர்வாரா?
IND Vs NZ ODI: இந்த ஃபர்னீட்சராச்சும் மிஞ்சுமா? இந்தியாவில் ஒருநாள் தொடரை வென்றிடாத நியூ., கில் தொடர்வாரா?
ADMK: இன்றே கடைசி..! யாருக்கு எத்தனை தொகுதிகள்? ராமதாஸ் எங்கே? பாஜகவின் வேகம், எடப்பாடியின் முடிவு?
ADMK: இன்றே கடைசி..! யாருக்கு எத்தனை தொகுதிகள்? ராமதாஸ் எங்கே? பாஜகவின் வேகம், எடப்பாடியின் முடிவு?
IND Vs NZ 3rd ODI: தொடரை வெல்லப்போவது யார்? இந்தியா Vs நியூசி., கடைசி ஒருநாள் போட்டி - இன்று ரோகித் சாதிப்பாரா?
IND Vs NZ 3rd ODI: தொடரை வெல்லப்போவது யார்? இந்தியா Vs நியூசி., கடைசி ஒருநாள் போட்டி - இன்று ரோகித் சாதிப்பாரா?
Volkswagen: நம்பி மோசம் போயிட்டோம்..! செல்லுபடியாகாத இரண்டு கார்கள்- விற்பனையை நிறுத்திய ஃபோக்ஸ்வாகன்
Volkswagen: நம்பி மோசம் போயிட்டோம்..! செல்லுபடியாகாத இரண்டு கார்கள்- விற்பனையை நிறுத்திய ஃபோக்ஸ்வாகன்
Embed widget