மேலும் அறிய

‛90களுக்குப் பின் வந்த படங்களால் தான் குற்றங்கள் அதிகரித்துள்ளது’ -போட்டுத் தாக்கிய இயக்குனர் முத்தையா!

‛சிட்டி கதையை எடுக்க நிறைய பேர் இருக்காங்க. மண் சார்ந்து, மரபு சார்ந்த படங்கள் மிக குறைவாக வருகிறது’

விருமன் இசை வெளியீட்டு விழாவில், இயக்குனர் முத்தையா பேசும் போது, பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்தார். இதோ அவை...


‛90களுக்குப் பின் வந்த படங்களால் தான் குற்றங்கள் அதிகரித்துள்ளது’ -போட்டுத் தாக்கிய இயக்குனர் முத்தையா!

‛‛எனக்கு மேடையில் பேச வாராது. இந்த ஆடியோ ரீலீஸ் எனக்கு ரொம்ப முக்கியமானது. என்னோட குட்டிப்புலி, கொம்பன், மருது, தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி எதுக்குமே ஆடியோ ரிலீஸ் நடக்கல. ப்ரஸ் மீட் தான் நடந்தது. என்னடா, இத்தனை படம் பண்ணிருக்கோம், ஒரு ஆடியோ நிகழ்ச்சிக்கு அம்மா, அப்பா கூட்டிட்டு போய், அவங்களுக்கு நாம கவுரவம்  கொடுக்கலையேனு எனக்கு ஒரு கவலை இருந்துச்சு. 

அது இன்று தீர்ந்துவிட்டது. நான் சார்ந்த மண்ணில், என் மக்கள் முன், நான் படித்த ஊரில், நான் பிறந்த மண்ணில் இந்த நிகழ்ச்சி நடப்பது மகிழ்ச்சியா இருக்கு. என்னோட ஏகலைவன் பாரதிராஜா சார் தான். என் மண்ணையும், மக்களையும் சினிமாவுக்கு பயன்படுத்தலாம் என எனக்கு தூண்டுதலாக இருந்தவர் அவர். அவர் முன்னிலையில், சங்கர் சார் முன்னிலையில் எனது பட ஆடியோ வெளியீடு நடப்பது பெரிய விசயம். 

சந்தோசத்தில் எனக்கு பேச்சு வரவில்லை. எல்லோரும் கடமை பட்டிருக்கேன். இந்த மேடை சிறப்பா இருக்க காரணம், யுவன் சார். இந்த படத்தில் நிறைய ப்ளஸ் எனக்கு இருக்கு .அதிதி அறிமுகம் ஆனது ஒரு ஸ்பெஷல். கார்த்தி சார், இரண்டாவது படம் நாம பண்ணுவோம்ய்யா என சொன்னார். அது ரொம்ப சந்தோசம். அவரது குருநாதர் மணிரத்தினம் சார் கூட தான் 3 படம் பண்ணிருக்காரு. அதுக்கு அப்புறம், இரண்டு படம் என் கூட தான் பண்ணிருக்காரு. ரொம்ப நன்றி கார்த்தி சார். 

டீ கடை வெச்சு தான் எங்கப்பா எங்களை வளர்த்தார். எங்கம்மா பழனி, ரொம்ப வெள்ளந்தி. 20 வயதிலும், 12 வயதிலும் திருமணம் ஆனவர்கள். ஸ்ரீவில்லிபுத்தூரில் எங்களை சிரமப்பட்டு வளர்த்தார்கள். சாப்பிட்டு நாங்கள் தூங்கிய பிறகு, எங்கள் வயிற்றை தடவி பார்த்து, காலியா இருக்கா என்று பார்க்கும் ஒரு வெள்ளந்தி தாய். அப்படி ஒரு சூழலில் கூட்டுக்குடும்பத்தில் வாழ்ந்ததால், அது மாதிரியான படத்தை எடுக்கிறேன். 


‛90களுக்குப் பின் வந்த படங்களால் தான் குற்றங்கள் அதிகரித்துள்ளது’ -போட்டுத் தாக்கிய இயக்குனர் முத்தையா!

சிட்டி கதையை எடுக்க நிறைய பேர் இருக்காங்க. மண் சார்ந்து, மரபு சார்ந்த படங்கள் மிக குறைவாக வருகிறது. 90களுக்கு முன் படங்கள் அப்படி தான் இருந்தது. அதனால் தான், குற்றங்கள் குறைவாக நடந்தது. அதன் பின் நகர வாழ்க்கை படங்கள் வரத் தொடங்கிவிட்டது. உறவுகளை பற்றி சொல்ல இயக்குனர்கள் முன் வரவேண்டும். 

உலகில் எல்லா தவறுகள் நடப்பதும் உறவுகளுக்காக தான். ஒருவன் லஞ்சம் வாங்கி பணம் சேர்ப்பது, அவன் குடும்பத்திற்காக தான். கொஞ்சமா வாங்கினால் பரவாயில்லை; கோடான கோடியை வாங்கி சேர்க்கிறார்கள். அரசியல் பேசுகிறேன் என நினைக்கிறேன்... அது வேண்டாம் நமக்கு. 

சினிமாவிற்கு நான் போகும் போது ,‛அது லட்சத்துல கோடில ஒருத்தன் ஜெயிக்கிறதுடா..’ என என் தந்தை கூறினார். ஆனால், என் மக்கள் மீதான நம்பிக்கையில் போய், ஜெயித்திருக்கிறேன். என் அப்பா, அம்மாவிற்கு ஒரு நம்பிக்கை கொடுக்க எனக்கு இத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கிறது. 

பாரதிராஜா சாரை நம்பி பஸ் ஏறிய மாதிரி, இசைக்கு இளையராஜாவை நம்பி தான் பஸ் ஏறினேன். 90களில் உதவி இயக்குனர் ஆவது அவ்வளவு எளிதல்ல. அப்படி தான், இங்கு வந்து சேர்ந்தேன். அப்போது யுவன் அறிமுகமாகி, எங்கு பார்த்தாலும் அவர் பாடல் தான் கேட்டது. அப்புறம் ,அவருடன் படம் செய்ய வேண்டும் என எண்ணினேன். குட்டிப்புலியில் அவரை தான் அணுகினோம். கொம்பனில் அவரை அணுகினோம். அப்போது அவர் பிஸியாக இருந்தார். இப்படி தள்ளிக் கொண்டே போனது. 

விருமன் முடிவானதும், கார்த்தி சாரிடம் கேட்டேன், ‛சார்... யுவன் சார் வேணும்,’ என்று, ‛விடுய்யா... போட்ரலாம்...’ என கார்த்தி சார் உறுதியளித்தார். ரொம்ப நன்றி கார்த்தி சார். நல்ல தரமான பாடல்களை யுவன் சார் போட்டுத் தந்துள்ளார். யுவன் சாருடன் பணியாற்றும் கனவு நிறைவேறியுள்ளது. 

அதிதி மரியாதையான பொண்ணு, சங்கர் சாரும் அவரது மனைவியும் ரொம்ப அழகா பெண்ணை வளர்த்திருக்காங்க,’’ என்று அந்த மேடையில் முத்தையா பேசினார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: சாமுண்டீஸ்வரிக்கு தீரா சந்தேகம்! மருமகனுக்கு புது மனைவி தேடும் மாமியார்!
Karthigai Deepam: சாமுண்டீஸ்வரிக்கு தீரா சந்தேகம்! மருமகனுக்கு புது மனைவி தேடும் மாமியார்!
இந்த படங்களை மட்டுமே திரையரங்கில் வெளியிடுவேன்..திருப்பூர் சுப்ரமணியம் அதிரடி அறிவிப்பு
இந்த படங்களை மட்டுமே திரையரங்கில் வெளியிடுவேன்..திருப்பூர் சுப்ரமணியம் அதிரடி அறிவிப்பு
ரெஸார்ட் சீரிஸ் எரும சாணி விஜய் மீதான குற்றச்சாட்டு எல்லாமே பப்ளிசிட்டி விளையாட்டா ?
ரெஸார்ட் சீரிஸ் எரும சாணி விஜய் மீதான குற்றச்சாட்டு எல்லாமே பப்ளிசிட்டி விளையாட்டா ?
காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Exit Polls 2026: 5 மாநிலங்களில் ஆட்சியமைப்பது யார்? - நாளை வெளியாகும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு!
Exit Polls 2026: 5 மாநிலங்களில் ஆட்சியமைப்பது யார்? - நாளை வெளியாகும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு!
TVK VIJAY : ‘இந்து நம்பிக்கையை பின்பற்றுவதாக உறுதியளித்தாரா விஜய்?’ போர்க்கொடித் தூக்கும் அமைப்புகள்..!
இந்து நம்பிக்கையை பின்பற்றுவதாக எழுதிக்கொடுத்தாரா விஜய்?
MK STALIN : இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி.! தெற்காசியாவில் முதன்மை மாநிலமாக உயரும்- அடித்து சொன்ன ஸ்டாலின்
இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி.! தெற்காசியாவில் முதன்மை மாநிலமாக தமிழகம் உயரும்- அடித்து சொன்ன ஸ்டாலின்
Virat Kohli: விராட் கோலி இன்னும் எவ்ளோ நாள் IPL ஆடுவார்? உண்மையை உடைத்த தினேஷ் கார்த்திக்
Virat Kohli: விராட் கோலி இன்னும் எவ்ளோ நாள் IPL ஆடுவார்? உண்மையை உடைத்த தினேஷ் கார்த்திக்
Chitra Pournami Girivalam: சித்ரா பெளர்ணமியில் கிரிவலம் போறீங்களா? இதுதான் கரெக்ட் டைம் பக்தர்களே!
Chitra Pournami Girivalam: சித்ரா பெளர்ணமியில் கிரிவலம் போறீங்களா? இதுதான் கரெக்ட் டைம் பக்தர்களே!
TNCC President : ‘தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறாரா செல்வப்பெருந்தகை’ காங்கிரஸ் கட்சியில் நடப்பது என்ன..? பரபரப்பு தகவல்கள்..!
‘செல்வப்பெருந்தகை ராஜினாமா?’ காங்கிரஸ் கட்சியில் நடப்பது என்ன..?
சிக்கன் சமைக்கமாட்டியா நீ? ஓவரா பேசி மிரட்டிய கணவன், கடுப்பாகி அரிவாளால் வெட்டிக் கொன்ற மனைவி
சிக்கன் சமைக்கமாட்டியா நீ? ஓவரா பேசி மிரட்டிய கணவன், கடுப்பாகி அரிவாளால் வெட்டிக் கொன்ற மனைவி
Tasmac shop closed : 2 நாள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.! மதுப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த புதிய அறிவிப்பு
2 நாள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.! மதுப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த புதிய அறிவிப்பு
Embed widget