மேலும் அறிய

‛90களுக்குப் பின் வந்த படங்களால் தான் குற்றங்கள் அதிகரித்துள்ளது’ -போட்டுத் தாக்கிய இயக்குனர் முத்தையா!

‛சிட்டி கதையை எடுக்க நிறைய பேர் இருக்காங்க. மண் சார்ந்து, மரபு சார்ந்த படங்கள் மிக குறைவாக வருகிறது’

விருமன் இசை வெளியீட்டு விழாவில், இயக்குனர் முத்தையா பேசும் போது, பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்தார். இதோ அவை...


‛90களுக்குப் பின் வந்த படங்களால் தான் குற்றங்கள் அதிகரித்துள்ளது’ -போட்டுத் தாக்கிய இயக்குனர் முத்தையா!

‛‛எனக்கு மேடையில் பேச வாராது. இந்த ஆடியோ ரீலீஸ் எனக்கு ரொம்ப முக்கியமானது. என்னோட குட்டிப்புலி, கொம்பன், மருது, தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி எதுக்குமே ஆடியோ ரிலீஸ் நடக்கல. ப்ரஸ் மீட் தான் நடந்தது. என்னடா, இத்தனை படம் பண்ணிருக்கோம், ஒரு ஆடியோ நிகழ்ச்சிக்கு அம்மா, அப்பா கூட்டிட்டு போய், அவங்களுக்கு நாம கவுரவம்  கொடுக்கலையேனு எனக்கு ஒரு கவலை இருந்துச்சு. 

அது இன்று தீர்ந்துவிட்டது. நான் சார்ந்த மண்ணில், என் மக்கள் முன், நான் படித்த ஊரில், நான் பிறந்த மண்ணில் இந்த நிகழ்ச்சி நடப்பது மகிழ்ச்சியா இருக்கு. என்னோட ஏகலைவன் பாரதிராஜா சார் தான். என் மண்ணையும், மக்களையும் சினிமாவுக்கு பயன்படுத்தலாம் என எனக்கு தூண்டுதலாக இருந்தவர் அவர். அவர் முன்னிலையில், சங்கர் சார் முன்னிலையில் எனது பட ஆடியோ வெளியீடு நடப்பது பெரிய விசயம். 

சந்தோசத்தில் எனக்கு பேச்சு வரவில்லை. எல்லோரும் கடமை பட்டிருக்கேன். இந்த மேடை சிறப்பா இருக்க காரணம், யுவன் சார். இந்த படத்தில் நிறைய ப்ளஸ் எனக்கு இருக்கு .அதிதி அறிமுகம் ஆனது ஒரு ஸ்பெஷல். கார்த்தி சார், இரண்டாவது படம் நாம பண்ணுவோம்ய்யா என சொன்னார். அது ரொம்ப சந்தோசம். அவரது குருநாதர் மணிரத்தினம் சார் கூட தான் 3 படம் பண்ணிருக்காரு. அதுக்கு அப்புறம், இரண்டு படம் என் கூட தான் பண்ணிருக்காரு. ரொம்ப நன்றி கார்த்தி சார். 

டீ கடை வெச்சு தான் எங்கப்பா எங்களை வளர்த்தார். எங்கம்மா பழனி, ரொம்ப வெள்ளந்தி. 20 வயதிலும், 12 வயதிலும் திருமணம் ஆனவர்கள். ஸ்ரீவில்லிபுத்தூரில் எங்களை சிரமப்பட்டு வளர்த்தார்கள். சாப்பிட்டு நாங்கள் தூங்கிய பிறகு, எங்கள் வயிற்றை தடவி பார்த்து, காலியா இருக்கா என்று பார்க்கும் ஒரு வெள்ளந்தி தாய். அப்படி ஒரு சூழலில் கூட்டுக்குடும்பத்தில் வாழ்ந்ததால், அது மாதிரியான படத்தை எடுக்கிறேன். 


‛90களுக்குப் பின் வந்த படங்களால் தான் குற்றங்கள் அதிகரித்துள்ளது’ -போட்டுத் தாக்கிய இயக்குனர் முத்தையா!

சிட்டி கதையை எடுக்க நிறைய பேர் இருக்காங்க. மண் சார்ந்து, மரபு சார்ந்த படங்கள் மிக குறைவாக வருகிறது. 90களுக்கு முன் படங்கள் அப்படி தான் இருந்தது. அதனால் தான், குற்றங்கள் குறைவாக நடந்தது. அதன் பின் நகர வாழ்க்கை படங்கள் வரத் தொடங்கிவிட்டது. உறவுகளை பற்றி சொல்ல இயக்குனர்கள் முன் வரவேண்டும். 

உலகில் எல்லா தவறுகள் நடப்பதும் உறவுகளுக்காக தான். ஒருவன் லஞ்சம் வாங்கி பணம் சேர்ப்பது, அவன் குடும்பத்திற்காக தான். கொஞ்சமா வாங்கினால் பரவாயில்லை; கோடான கோடியை வாங்கி சேர்க்கிறார்கள். அரசியல் பேசுகிறேன் என நினைக்கிறேன்... அது வேண்டாம் நமக்கு. 

சினிமாவிற்கு நான் போகும் போது ,‛அது லட்சத்துல கோடில ஒருத்தன் ஜெயிக்கிறதுடா..’ என என் தந்தை கூறினார். ஆனால், என் மக்கள் மீதான நம்பிக்கையில் போய், ஜெயித்திருக்கிறேன். என் அப்பா, அம்மாவிற்கு ஒரு நம்பிக்கை கொடுக்க எனக்கு இத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கிறது. 

பாரதிராஜா சாரை நம்பி பஸ் ஏறிய மாதிரி, இசைக்கு இளையராஜாவை நம்பி தான் பஸ் ஏறினேன். 90களில் உதவி இயக்குனர் ஆவது அவ்வளவு எளிதல்ல. அப்படி தான், இங்கு வந்து சேர்ந்தேன். அப்போது யுவன் அறிமுகமாகி, எங்கு பார்த்தாலும் அவர் பாடல் தான் கேட்டது. அப்புறம் ,அவருடன் படம் செய்ய வேண்டும் என எண்ணினேன். குட்டிப்புலியில் அவரை தான் அணுகினோம். கொம்பனில் அவரை அணுகினோம். அப்போது அவர் பிஸியாக இருந்தார். இப்படி தள்ளிக் கொண்டே போனது. 

விருமன் முடிவானதும், கார்த்தி சாரிடம் கேட்டேன், ‛சார்... யுவன் சார் வேணும்,’ என்று, ‛விடுய்யா... போட்ரலாம்...’ என கார்த்தி சார் உறுதியளித்தார். ரொம்ப நன்றி கார்த்தி சார். நல்ல தரமான பாடல்களை யுவன் சார் போட்டுத் தந்துள்ளார். யுவன் சாருடன் பணியாற்றும் கனவு நிறைவேறியுள்ளது. 

அதிதி மரியாதையான பொண்ணு, சங்கர் சாரும் அவரது மனைவியும் ரொம்ப அழகா பெண்ணை வளர்த்திருக்காங்க,’’ என்று அந்த மேடையில் முத்தையா பேசினார். 

தலைப்பு செய்திகள்

சத்தமே இல்லாமல் தொடங்கிய ரஜினிகாந்த் பட ஷுட்டிங்! தலைவர் 173 ஆட்டம் ஆரம்பம்!
சத்தமே இல்லாமல் தொடங்கிய ரஜினிகாந்த் பட ஷுட்டிங்! தலைவர் 173 ஆட்டம் ஆரம்பம்!
முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த மறைந்த இயக்குநர் பாரதிராஜா மகள்!
முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த மறைந்த இயக்குநர் பாரதிராஜா மகள்!
குடை பிடிக்கும் நபர் பாவம்..அரசியல் பேசுனா மட்டும் போதுமா..வைரல் வீடியோவால் சர்ச்சையில் எச் வினோத்
குடை பிடிக்கும் நபர் பாவம்..அரசியல் பேசுனா மட்டும் போதுமா..வைரல் வீடியோவால் சர்ச்சையில் எச் வினோத்
JIO Teaser: சைடு கேப்பில் முதல்வர் விஜயை வம்பிழுத்த ஜீவா.. ஜியோ படத்தின் டீசர் இதோ!
JIO Teaser: சைடு கேப்பில் முதல்வர் விஜயை வம்பிழுத்த ஜீவா.. ஜியோ படத்தின் டீசர் இதோ!

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
ஒரே சார்ஜில் 156 கி.மீட்டர் மைலேஜ்! Numeros Diplos இ ஸ்கூட்டர் விலை, தரம் - எப்படி?
ஒரே சார்ஜில் 156 கி.மீட்டர் மைலேஜ்! Numeros Diplos இ ஸ்கூட்டர் விலை, தரம் - எப்படி?
என்னதான் நடக்குது? அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்!
என்னதான் நடக்குது? அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்!
மேகதாது அணையில் புது நடுவர் மன்றம் கூடாது; ஏன்? காரணங்களை அடுக்கிய அன்புமணி!
மேகதாது அணையில் புது நடுவர் மன்றம் கூடாது; ஏன்? காரணங்களை அடுக்கிய அன்புமணி!
Embed widget