மேலும் அறிய

Mari Selvaraj: என்னுடைய படங்களில் திருமாவளவனின் பங்கு.. உண்மையை போட்டுடைத்த மாரி செல்வராஜ்!

எழுச்சித்தமிழர் இலக்கிய விருதுகள் விழா நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர் மாரி செல்வராஜூக்கு மாமன்னன் படத்துக்காக  எழுச்சித்தமிழர் இலக்கிய விருது வழங்கப்பட்டது.

விசிக தலைவர் திருமாவளவன் பேச்சில் ஆவேசத்தை விட எப்போதும் ஒரு நிதானம் இருக்கும் என இயக்குர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார். 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விடுதலை கலை இலக்கியப் பேரவை நடத்தும் இளவந்திகை திருவிழாவின் ஒரு பகுதியாக எழுச்சித்தமிழர் இலக்கிய விருதுகள் விழா நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர் மாரி செல்வராஜூக்கு மாமன்னன் படத்துக்காக  எழுச்சித்தமிழர் இலக்கிய விருது வழங்கப்பட்டது. இதனை விசிக தலைவர் தொல் திருமாவளவன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மாரி செல்வராஜ், “நான் ரொம்ப உணர்ச்சிகரமான நபர். அதிகமாக பேசினால் எந்த ரூட்டில் செல்வேன் என எனக்கே தெரியாது.  ஒவ்வொரு படம் எடுக்கும்போது, அப்படம் மற்ற இயக்குநர்களுக்கு இருக்குமா என தெரியவில்லை. நான் ஒரு திரைக்கதை எழுதும்போது நான் எந்தெந்த காட்சியில் ஆத்திரப்படுகிறேன், எதில் அந்த உணர்வு அதிகமாக இருக்கிறது, உணர்ச்சிவசப்படுகிறேன் என்பது எழுதும்போது எனக்கே தெரியும். இதை எப்படி படமாக்குவது என்ற கேள்வி எழும். மற்றவர்கள் மனம் போகும் போக்கில் எழுதிய திரைக்கதையை நான் ஒருநாளும் அப்படி எழுதியது கிடையாது. அதை எழுதுவதற்கான சாத்தியக்கூறுகள் தமிழ் சினிமாவிலேயோ, சமூகத்திலேயோ இல்லை. ஏனென்றால், எதிரிகளை மனதில் வைத்து தான் ஒவ்வொரு திரைக்கதையையும் உருவாக்குவோம். 

பரியேறும் பெருமாளில் அப்பா ஓடிவர காட்சி, கர்ணனில் பஸ் உடைக்கும் காட்சி, மாமன்னனில் இடைவேளை காட்சி ஆகியவை எழுதிவிட்டு படமாக்குவதற்கு முந்தைய நாள் இந்த காட்சியை நம்மால் படமாக்க முடியுமா? என்ற கேள்வி எழும். இல்லை இந்த காட்சியை சென்சார் அனுமதிக்குமா?, இதைப் பார்த்து  ரசிகர்கள் என்னை என்ன மாதிரி பார்ப்பார்கள். அந்த நேரத்தில் நான் திருமாவளவனின் வீடியோக்களை தான் பார்ப்பேன். அவரின் பேச்சில் என்னிடம் இருக்கும் கோபத்தை விட அதிக கோபம் இருக்கும். ஆவேசம், பாய்ச்சல் ஆகியவற்றை விட ஒரு நிதானம் அடுத்த தலைமுறைக்கு கடத்துவதற்கு இருக்கும். 

நான் அதைப் பார்த்து நிறைய நாள் ஆச்சரியப்பட்டு இருக்கிறேன். ஒன்றரை மணி நேரம் பேசினாலும் நிதானம் தவறாது. அதனை கற்றுக்கொள்வதற்கு முயற்சி செய்துக் கொண்டிருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.  


மேலும் படிக்க: Mari Selvaraj: வாழ்க்கையின் மிகச்சிறந்த விருது.. திருமாவளவன் செய்த செயலால் நெகிழ்ந்த மாரி செல்வராஜ் 

தலைப்பு செய்திகள்

“உனக்கு ஹீரோயினை எங்கிருந்து தேடுவது?” – நடிகராக ரகுவரனுக்கு தடையாக அமைந்தது எது தெரியுமா?
“உனக்கு ஹீரோயினை எங்கிருந்து தேடுவது?” – நடிகராக ரகுவரனுக்கு தடையாக அமைந்தது எது தெரியுமா?
ரூ.4000 கோடி பட்ஜெட் சர்ச்சைக்கு யாஷ் கொடுத்த விளக்கம்!
ரூ.4000 கோடி பட்ஜெட் சர்ச்சைக்கு யாஷ் கொடுத்த விளக்கம்!
Actress Aishwarya: கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன்.. சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஐஸ்வர்யா!
Actress Aishwarya: கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன்.. சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஐஸ்வர்யா!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
Embed widget