மேலும் அறிய

Ponniyin Selvan 2: பொன்னியின் செல்வன் 2-இல் இடம்பெறும் முக்கியமான விஷயம் என்ன தெரியுமா?

பொன்னியில் செல்வன் 2-ஆம் பாகத்தில்  இடம்பெறும் ஒரு முக்கியமான விஷயத்தை பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குநர் மணிரத்னம் தெரிவித்துள்ளார். 

பொன்னியில் செல்வன் 2 ஆம் பாகத்தில்  இடம்பெறும் ஒரு முக்கியமான விஷயத்தை பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குநர் மணிரத்னம் தெரிவித்துள்ளார். 

பொன்னியின் செல்வன் படத்தின் 2 ஆம் பாகம் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், பார்த்திபன், த்ரிஷா, சரத்குமார், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு, பிரபு, லால்,ஜெயசித்ரா,நாசர், ரகுமான், கிஷோர் என பலரும் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

இதனிடையே பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர்  வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் கடந்த மார்ச் 29-ஆம் தேதி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். மேலும் அமைச்சர் துரைமுருகன், நடிகர் சிலம்பரசன், இயக்குநர் இமயம் பாரதிராஜா ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த நிலையில், படக்குழு தீவிர ப்ரோமோஷனில் களமிறங்கியுள்ளது. அந்த வகையில் சென்னையில் நேற்று பொன்னியின் செல்வன் 2 குழுவினரின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் இயக்குநர் மணி ரத்னம், நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, நடிகைகள் த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா துலிபாலா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இரண்டாம் பாகத்திலும் கமல்ஹாசன்

அப்போது இயக்குநர் மணிரத்னத்திடம், பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தில் நடிகர் கமல்ஹாசனின் பின்னணி குரலில் தான் படம் தொடங்கும். இரண்டாம் பாகத்திலும் அதனை எதிர்பார்க்கலாமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்” என மணிரத்னம் பதிலளித்தார். 

தொடர்ந்து முதல் பாகம் ரிலீசான போது எழுந்த ராஜராஜசோழன் இந்து மன்னனாக காட்டி, தமிழர்களின் அடையாளம் பறிக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “எதுக்கு இதுல்ல மதம் சம்பந்தமாக எல்லாம் கொண்டு வருகிறீர்கள். பொன்னியின் செல்வன் படம் வரலாற்றுப் புனைவாகும். ராஜராஜசோழன் செய்த செயல்களுக்கும், சாதனைகளுக்கும் நாம் பெருமை கொள்ள வேண்டும். எனவே இதுபோன்ற  கருத்துகள் தேவையில்லாதவை என மணிரத்னம் தெரிவித்தார்.  

பொன்னியின் செல்வன் 

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் அதே பெயரில் இரண்டு பாகங்களாக படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதன் முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, நாவல் படித்தவர்களையும் சரி, படிக்காதவர்களையும் சரி இப்படம் வெகுவாக கவர்ந்தது. வசூலிலும் ரூ.500 கோடிக்கு மேல் சாதனை படைத்த பொன்னியின் செல்வன் படத்தின் 2 ஆம் பாகத்திற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

உச்சத்துக்கு போயிருப்பான்.. என்னால இப்ப அந்த நடிகர் உயிரோட இல்ல.. நடிகர் வையாபுரி உருக்கம்!
உச்சத்துக்கு போயிருப்பான்.. என்னால இப்ப அந்த நடிகர் உயிரோட இல்ல.. நடிகர் வையாபுரி உருக்கம்!
கவின் நயன்தாரா நடித்துள்ள ஹாய் திரைப்பட விமர்சனம்
கவின் நயன்தாரா நடித்துள்ள ஹாய் திரைப்பட விமர்சனம்
ஒன்ஸ் மோர் – திரை விமர்சனம்
ஒன்ஸ் மோர் – திரை விமர்சனம்
சிவராஜ்குமார் - அபிஷன் ஜீவிந்த் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
சிவராஜ்குமார் - அபிஷன் ஜீவிந்த் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: விஜய்க்கு வயிற்றெரிச்சல், பொறாமை இல்லை.. ஆனால் எதிர் கும்பலுக்கு... வெளுத்து வாங்கிய திருமாவளவன்!
Thirumavalavan: விஜய்க்கு வயிற்றெரிச்சல், பொறாமை இல்லை.. ஆனால் எதிர் கும்பலுக்கு... வெளுத்து வாங்கிய திருமாவளவன்!
Nepal Flood: பெருவெள்ளம்..! ஒற்றை ஆளாய் 1,643 குழந்தைகளை காப்பாற்றிய ஆசிரியர் - மரணத்தின் அருகே நடந்தது என்ன?
பெருவெள்ளம்..! ஒற்றை ஆளாய் 1,643 குழந்தைகளை காப்பாற்றிய ஆசிரியர் - மரணத்தின் அருகே நடந்தது என்ன?
FSSAI: தரமற்ற பெருங்காயம் விற்பனை.. எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனங்களுக்கு தடை.. கேள்விக்குறியாகும் மக்களின் ஆரோக்கியம்!
FSSAI: தரமற்ற பெருங்காயம் விற்பனை.. எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனங்களுக்கு தடை.. கேள்விக்குறியாகும் மக்களின் ஆரோக்கியம்!
Minister Nirmalkumar: ஒரே ஃபைல், ஓடிப்போன உதயநிதியின் நண்பர்..! ஒருத்தரையும் விடமாட்டோம் - நிர்மல் குமார் வார்னிங்
ஒரே ஃபைல், ஓடிப்போன உதயநிதியின் நண்பர்..! ஒருத்தரையும் விடமாட்டோம் - நிர்மல் குமார் வார்னிங்
Tasmac Digital Stock Order : டோட்டலா மாறும் டாஸ்மாக்.! செப்டம்பர் 1-ம் தேதி முதல் மதுப்பிரியர்களுக்கு குஷி தான்- செம பிளான்
டோட்டலா மாறும் டாஸ்மாக்.! செப்டம்பர் 1-ம் தேதி முதல் மதுப்பிரியர்களுக்கு குஷி தான்- செம பிளான்
September Holidays : செப்டம்பரில் கொத்தாக வரும் 13 நாள் விடுமுறை.! மாணவர்களுக்கு ஜாலியோ ஜாலி - வெளியான அறிவிப்பு
செப்டம்பரில் கொத்தாக வரும் 13 நாள் விடுமுறை.! மாணவர்களுக்கு ஜாலியோ ஜாலி - வெளியான அறிவிப்பு
பேருந்தில் இருந்து குதித்து, 500 படிகள் ஏறி..! நேபாள வெள்ளத்தில் உயிர் பிழைத்த இந்தியர்களின் திக் திக் நிமிடங்கள்
பேருந்தில் இருந்து குதித்து, 500 படிகள் ஏறி..! நேபாள வெள்ளத்தில் உயிர் பிழைத்த இந்தியர்களின் திக் திக் நிமிடங்கள்
தீவிரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? தவெக MLA-விற்கு எதிராக சீறிய நயினார்
தீவிரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? தவெக MLA-விற்கு எதிராக சீறிய நயினார்
Embed widget