மேலும் அறிய

Anna Muthuvel : சகுனம் பார்த்தே கனவை கலைத்த சரத்குமார்... மனவருத்தத்தில் பேசிய இணை இயக்குநர்

Anna Muthuvel : நடிகர் சரத்குமார் சகுனம், நேரம் காலம் பார்த்து தன்னுடைய கனவை கலைத்தார் என்பது குறித்து மனவருத்தத்தில் பேசிய இணை இயக்குனர் அண்ணா முத்துவேல்.  

தமிழ் சினிமாவில் மறைந்த இயக்குநர் குரு தனபால், ராஜ் சிற்பி மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்டோரிடம் இணை இயக்குநராக பணிபுரிந்தவர் அண்ணா முத்துவேல். சமீபத்தில் அவர் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட போது சினிமாவில் ராசி, ஜோதிடம், சகுனம் பார்த்து எப்படி பின்னடைவு அடைந்தார் என்பது பற்றி மனம் திறந்து பேசி இருந்தார்.

இணை இயக்குநராக பணிபுரிந்து ஒரு அனுபவம் பெற்று ஒரு படத்தை இயக்க வேண்டும் என வித்தியாசமான ஸ்கிரிப்ட் ஒன்றை தயார் செய்தேன். பெற்ற பிள்ளையையே தகப்பன் தூக்கில் போடுவது போன்ற ஒரு ஸ்கிரிப்ட். இதை ஒரு நடிகர் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என முடிவு செய்தேன். இந்த ஸ்கிரிப்டை என்னுடைய நண்பரான கேமரா மேன் ஒருவரிடம் சென்று சொன்ன போது அவரும் இந்த ஸ்கிரிப்ட் நன்றாக இருக்கிறது. எனக்கு சரத்குமார் சாரை நன்றாக தெரியும். அவர்கிட்ட நான் உன்னை அழைத்து செல்கிறேன் என சொல்லி இருந்தார்.

பெரும்பாடு பட்டு நடிகர் சரத்குமாரை ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டில் சென்று நானும் என்னுடைய நண்பரும் சென்று சந்தித்தோம். விஷயத்தை சொன்னதும் இன்று செவ்வாய்க்கிழமை அதனால் இன்னைக்கு கதை கேட்க வேண்டாம். ஃபாலோ அப்பில் இருங்க என சொல்லி அவருடைய பி ஏ நம்பரை கொடுத்தார். தொடர்ந்து ஆறு மாதங்கள் ஃபாலோ அப்பில் இருந்து கொண்டே இருந்தோம்.

Anna Muthuvel : சகுனம் பார்த்தே கனவை கலைத்த சரத்குமார்... மனவருத்தத்தில் பேசிய இணை இயக்குநர்

ஒரு நாள் 'ஏய்' பட ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று சரத்குமாரை  சந்தித்தோம். ஒரு ஷாட் இருக்கு நான் முடித்துவிட்டு வந்துவிடுகிறேன். என்ன விஷயம் என கேட்டார். இது மாதிரி ஒரு கதை என லைன் மட்டும் சொன்னதும் அவருக்கு ரொம்ப பிடித்து போனது. ஆனா முழு கதையை இன்னைக்கு கேட்க முடியாது. இன்னைக்கு சந்திராஷ்டமம் என மீண்டும் தள்ளி போட்டார்.

ஒரு நாள் பி ஏ மூலமா சரத்குமார் கும்பகோணம் ஷூட்டிங்ல இருக்கிறார் என தெரிய வந்தது. அதனால நானும் என்னுடைய நண்பரும் அங்கே போனோம். அங்க போன அவர் அங்க இல்ல உடையார்பாளையம் அப்படிங்கிற இடத்தில் ஷூட்டிங் போய் இருக்கிறதா தகவல் கிடைத்தது. எங்களை பார்த்து ஷாக்கான சரத்குமார் இங்க எப்படி வந்தீங்க? இங்க கதை கேட்க முடியாது. நான் கும்பகோணத்தில்தானே இருக்கேன் அங்கேயே நாளைக்கு வாங்கன்னு சொன்னார்.

அடுத்த நாள் கும்பகோணத்தில் போய் காத்திருந்தோம் ஆனா அவர் அந்த சமயத்தில் எம்.பியா இருந்ததால தீ விபத்து நடந்த இடத்துக்கு போய்விட்டார் என சொன்னார்கள். அவர் திரும்பும் வரை காத்திருந்தோம். அடுத்த நாள் வர சொல்லி சொன்னார். அப்போது கதையை ஒருவழியாக சொல்லி முடித்தேன். கதையை கேட்டு என் கையை பிடித்து குலுக்கி நாம நிச்சயம் செய்வோம் என்றார். ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது.

பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவே இல்லை. அதில் இருந்து அவருக்கு இந்த படத்தில் நடிக்க விருப்பம் இல்லை என்பது புரிந்தது. அத்தோடு அந்த கதையும் அப்படியே கனவாகவே போனது என்றார் இணை இயக்குநர் அண்ணா முத்துவேல். 

தலைப்பு செய்திகள்

மேரேஜ் ஸ்டோரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
மேரேஜ் ஸ்டோரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
அசினின் இடத்தை நிரப்ப வருகிறாரா மமிதா பைஜூ? ரெண்டு பேருக்கும் இவ்வளவு ஒற்றுமை இருக்கே!
அசினின் இடத்தை நிரப்ப வருகிறாரா மமிதா பைஜூ? ரெண்டு பேருக்கும் இவ்வளவு ஒற்றுமை இருக்கே!
இயக்குநர் ஷங்கர் மகன் அர்ஜித் நடிக்கும் பட பூஜை...சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ஜேசன் சஞ்சய்
இயக்குநர் ஷங்கர் மகன் அர்ஜித் நடிக்கும் பட பூஜை...சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ஜேசன் சஞ்சய்
மேடையில் நடிக்க வாய்ப்பு கேட்ட சமந்தா...இவருக்கே இந்த நிலமையா என ரசிகர்கள் ஷாக்
மேடையில் நடிக்க வாய்ப்பு கேட்ட சமந்தா...இவருக்கே இந்த நிலமையா என ரசிகர்கள் ஷாக்

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly LIVE Today: சட்டமன்றத்தில் ரவுண்டு கட்ட தயாராகும் உதயநிதி, எடப்பாடி.? சமாளிப்பாரா சிஎம் விஜய் - நேரலை இதோ..
சட்டமன்றத்தில் ரவுண்டு கட்ட தயாராகும் உதயநிதி, எடப்பாடி.? சமாளிப்பாரா சிஎம் விஜய் - நேரலை இதோ..
EPS vs SPV: பிடிவாதத்தில் இபிஎஸ்.! முகத்தை கூட பார்க்காத எஸ்.பி.வேலுமணி டீம்- சட்டசபையில் நடந்தது என்ன.?
பிடிவாதத்தில் இபிஎஸ்.! முகத்தை கூட பார்க்காத எஸ்.பி.வேலுமணி டீம்- சட்டசபையில் நடந்தது என்ன.?
TN Govt: தமிழ்நாடு அரசின் முடிவு தவறு, கோர்ட்டில் நிற்காது..! அலட்சியமா? தனியார் நிறுவனம் ஆவேசம்
தமிழ்நாடு அரசின் முடிவு தவறு, கோர்ட்டில் நிற்காது..! அலட்சியமா? தனியார் நிறுவனம் ஆவேசம்
TN Weather Update: இன்றும் சென்னையில் மழை வெளுக்குமா? 27 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - தமிழக வானிலை
இன்றும் சென்னையில் மழை வெளுக்குமா? 27 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - தமிழக வானிலை
EPS vs Vijay: 9-5 Desk Job பார்க்கும் முதல்வர் விஜய்.! இந்த நேரத்திலாவது சட்டம் ஒழுங்கை பாதுகாப்பாரா.? விளாசும் இபிஎஸ்
9-5 Desk Job பார்க்கும் முதல்வர் விஜய்.! இந்த நேரத்திலாவது சட்டம் ஒழுங்கை பாதுகாப்பாரா.? விளாசும் இபிஎஸ்
Tata 7 Seater EV: டாடாவின் முதல் 7 சீட்டர் மின்சார SUV - மஹிந்த்ராவின் XEV 9S-ஐ சமாளிக்குமா? ரேஞ்ச், விலை விவரங்கள்
டாடாவின் முதல் 7 சீட்டர் மின்சார SUV - மஹிந்த்ராவின் XEV 9S-ஐ சமாளிக்குமா? ரேஞ்ச், விலை விவரங்கள்
EPF Intrest: EPF வட்டி விகிதத்தை அறிவித்த மத்திய அரசு - கூடியதா? குறைந்ததா? எப்போது வரவு வைக்கப்படும்?
EPF வட்டி விகிதத்தை அறிவித்த மத்திய அரசு - கூடியதா? குறைந்ததா? எப்போது வரவு வைக்கப்படும்?
C Mahendran CPI: தவெகவில் இணைந்தது ஏன்.? இ.கம்யூனிஸ்ட் சி.மகேந்திரன் சொன்ன முக்கிய காரணம்
தவெகவில் இணைந்தது ஏன்.? இ.கம்யூனிஸ்ட் சி.மகேந்திரன் சொன்ன முக்கிய காரணம்
Embed widget