மேலும் அறிய

Red Card for Actors: சம்பளம் வேணும்; கால்ஷீட் தரமாட்டீங்களா? வசமாக சிக்கும் டாப் லிஸ்ட் நடிகர்கள்: தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி முடிவு!

சம்பளம் பெற்றும் கால்ஷீட் வழங்காத நடிகர்களுக்கு இனி ஒத்துழைப்பு வழங்க போவதில்லை என்றும், அவர்களுக்கு ரெட் கார்டு வழங்கப்போவதாகவும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளனர்.  

சம்பளம் பெற்றும் கால்ஷீட் வழங்காத நடிகர்களுக்கு இனி ஒத்துழைப்பு வழங்க போவதில்லை என்றும்,   அவர்களுக்கு ரெட் கார்டு வழங்கப்போவதாகவும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்  முடிவெடுத்துள்ளனர்.  

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்களிடம் பல விஷயங்களுக்கு ஒப்புதல் பெற்றனர். அதில் ஒன்று தான் சம்பளம் பெற்றும் கால்ஷீட் வழங்காத நடிகர்களுக்கு இனி தயாரிப்பாளர்கள் சங்கம் ஒத்துழைப்பு வழங்க போவதில்லை என்ற முடிவை எடுத்து அவர்களுக்கு ரெட் கார்டு வழங்கப்போவதாக  கூறப்படுகிறது.

 

Red Card for Actors: சம்பளம் வேணும்; கால்ஷீட் தரமாட்டீங்களா? வசமாக சிக்கும் டாப் லிஸ்ட் நடிகர்கள்: தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி முடிவு!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சிம்பு, விஷால், அதர்வா, யோகி பாபு, எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் ஒத்துழைப்பு கொடுக்காத சர்ச்சை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். ஐந்து நடிகர்களும்  தயாரிப்பாளர்களிடம்  இருந்து சம்பளம் பெற்று கொண்ட பிறகும் கால்ஷீட் சரிவர கொடுக்காமல் அவர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தியுள்ளனர் என்பதால் அவர்களுக்கு இனி தயாரிப்பாளர்கள் ஒத்துழைப்பு வழங்க போவதில்லை என்று முடிவு செய்துள்ளனர். அதற்காக நடிகர்கள் சங்கத்திடம் விளக்கம் கேட்கப்பட உள்ளது. நடிகர் சங்கத்தின் விளக்கத்தை கேட்ட பிறகு அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

ஐசரி கணேஷ் நிறுவனத்திடம் அட்வான்ஸ் பெற்று கொண்டு சரியாக கால்ஷீட் வழங்காத காரணத்திற்காக சிம்புவுக்கும், லைகா புரொடக்ஷன் நிறுவனத்திடம் இருந்து பெற்ற கடன் தொகையை செலுத்தாததால் விஷால் மீதும், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திடம் இருந்து சம்பளம் பெற்று கொண்டு கால்ஷீட் தராததால் எஸ்.ஜே. சூர்யா மீதும் அதே காரணங்களால் யோகி பாபு மற்றும் அதர்வா மீதும் தயாரிப்பாளர்கள் சங்கம் புகார் அளித்துள்ளனர். மேலும் அவர்களின் புகாரில் படப்பிடிப்புக்கு மட்டுமின்றி டப்பிங் பேசவும் சரியாக தேதிகளை கொடுக்கவில்லை என்றும் அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்த சர்ச்சை குறித்து திருப்திகரமான விளக்கம் கொடுக்கவில்லை அல்லது ஒத்துழைப்பு தரவில்லை என்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்களுக்கு ரெட் கார்டு கொடுத்து விட தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்த சர்ச்சை திரையுலகத்தினர் மத்தியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

ஊடக துறைக்கு வேண்டுகோள் :

அதே போல தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் ஊடக துறைக்கு ஒரு வேண்டுகோள் வைத்தனர். போன பொதுக்குழுவில் பேசிய அதே வேண்டுகோளை மீண்டும் வலியுறுத்தி உள்ளனர். ஒரு திரைப்படம் வெளியான உடனே படம் குறித்த விமர்சனங்களை யூடியூபர்கள் வெளியிடுவதால் பெரிய அளவில் பாதிக்கப்படுவது தயாரிப்பாளர்கள் தான். அதனால் ஒரு மூன்று நாட்களுக்கு பிறகு படம் குறித்த விமர்சனங்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டனர். மக்கள் அந்த மூன்று நாட்களுக்கு திரையரங்கம் சென்று படங்களை பார்க்கட்டும் என வேண்டுகோள் வைத்தனர்.

இன்றைய காலகட்டத்தில் பெரிய அளவு பட்ஜெட்டில் தான் படங்கள் எடுக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் தயாரிப்பாளர்கள் வெளியில் பணம் ஏற்பாடு செய்து தான் படத்தை எடுக்கிறார்கள். அதனால் படம் சரியாக போகாவிட்டால் பெரிய அளவில் நஷ்டப்படுவது தயாரிப்பாளர்கள் தான் என தனது  கோரிக்கையை தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் தேனாண்டாள் முரளி முன்வைத்து இருந்தார் .    

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Job Fair: கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Embed widget