மேலும் அறிய

Big Fish: பொய்யான சாகசக் கதைகளை சொல்லும் தந்தைகள்... தந்தை-மகன் உறவை ஆராயும் 'பிக் ஃபிஷ்' திரைப்படம்!

பிக் ஃபிஷ் திரைப்படத்தை ஏன் நாம் தந்தையர் தினத்தன்று நினைவுகூற வேண்டும். அதிலும் குறிப்பாக மகன்கள் ஏன் தங்களது அப்பாக்களைப் புரிந்துகொள்ள பிக்ஃபிஷ் படத்தைப் பார்க்கவேண்டும்

ஆண்கள் சின்ன வயதில் சூப்பர் ஹீரோக்களாகப் பார்க்கும் தங்களது அப்பாவை ஏன் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் வில்லனாக பார்க்கத் தொடங்கி விடுகிறார்கள்? ஒரே வீட்டில் இரு முதிர்ந்த ஆண்கள் இருக்க நேர்ந்தால், அது ஏன் பஞ்சாரத்தில் அடைக்கப்பட்ட இரு ஆண் யானைகள் போல் மோதல்களால் நிறைந்த சூழலாய் இருக்கிறது?

அப்பா தனது மகன் தன்னைப்போல் ஒரு நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று விரும்புவதும், தனது அப்பாவைப்போல் மட்டும் ஆகிவிடக் கூடாது என்று மகன் நினைப்பதும் ஏன்? வாழ்க்கையில் தோல்வியடைந்த அப்பாக்கள் மேல் மகன்களுக்கு எல்லா காலமும் கோபம் அடங்காமல் இருப்பது ஏன்? ஒருவேளை தானும் அவரைப்போல் வாழ்க்கையுடன் சமரசம் செய்துகொண்டு ஒரே இடத்தில் தேங்கிவிடுவோம் என்கிற அச்சத்தின் காரணமாகவா?

பொய்யான சாகசக் கதைகள்!

1998ஆம் ஆண்டு டிம் பர்டன் இயக்கிய திரைப்படம் பிக் ஃபிஷ். புற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணப்படுகையில் இருக்கும் தனது தந்தை எட்வர்டை பார்க்க வருகிறார் அவரது கோபக்கார மகன் வில்.

எதற்காக இந்தக் கோபம் தெரியுமா? தனது இளமைக் காலத்தில் தான் செய்த சாகசக் கதைகளை தனது மகனிற்கு சொல்லி வந்திருக்கிறார். தான் பயணம் சென்றது, மர்மமான ஒரு நகரத்தைப் பார்த்தது, தனது திருமண மோதிரத்தை பணையமாக வைத்து மிகப்பெரிய மீன் ஒன்றைப் பிடித்த கதை என்று அவர் சொன்ன கதைகள் ஏராளம்!

சிறுவனாக இருந்தபோது இதையெல்லாம் விரும்பிக் கேட்ட வில், ஒரு கட்டத்திற்குமேல் இந்தக் கதைகளால் சலிப்படைகிறான். தனது அப்பா சொல்வது அனைத்தும் பொய் என்று நம்பத் தொடங்குகிறான் வில். உண்மையில் தனது அப்பா சொல்லிக்கொல்லும்படி எதுவும் செய்ததில்லை, அதனால் தான் அவர் இப்படியான பொய்க் கதைகளை உருவாக்குகிறார் என்றும் அவன் நினைக்கிறான்.

கதைகளால் வளரும் உறவு

இன்று தான் வளர்ந்து நிற்கும் ஒரு மனிதனாக, எதார்த்த வாழ்க்கையில் எத்தனையோ சவால்களை எதிர்கொள்கிறான். அவற்றை எப்படிக் கையாள்வது எனத் தெரியாமல் தவிக்கிறான். அப்படியான நேரங்களில் எல்லாம் தனது அப்பாவிடம் தான் கற்றுகொள்ள எதுவுமே இல்லை என்கிற கோபம் அவன் மனதில் எழுகிறது.

இன்று மரணப்படுக்கையில் இருக்கும்போதுகூட அவர் அதே பழைய கதைகளை பிதற்றிக்கொண்டிருப்பதைப் பார்த்து எரிச்சலடையும் வில், அவர் இறந்துவிட வேண்டும் என்று விரும்புகிறான். ஒவ்வொரு முறையும் படுக்கையின் அருகில் தனது மகனைப் பார்க்கும் எட்வர்ட், ஒரு கதையைச் சொல்கிறார். அதை நாம் காட்சியாக பார்க்கிறோம்.

மகன்களின் ஹீரோக்கள்

ஒரு கட்டத்தில் பேசமுடியாத நிலைக்குப் போகும் எட்வர்ட், தான் சொன்ன கதைகளை தனது மகனை சொல்லச் சொல்லி கேட்கிறார். தனது தந்தையின் இறுதி ஆசையை நிறைவேற்றும் எண்ணத்தில் வேறு வழியில்லாமல் அந்தக் கதைகளை அவருக்கு ஏற்ற வகையில் சொல்கிறார் வில்.

எட்வர்ட் மரணமடைகிறார். அவரது இறுதிச் சடங்கிற்கு ஒரு பெரிய கூட்டம் வருகிறது. அவர்கள் அனைவரும் தனது அப்பா சொன்ன கதைகளில் வந்த மனிதர்கள். அதே மாதிரியாக இல்லாமல் சில வித்தியாசங்களுடன்... தனது அப்பா சொன்ன கதைகளை தனது மகனிற்கு சொல்கிறார் வில். படம் நிறைவடைகிறது.

தனது அப்பா சொன்ன கதைகள் அனைத்தும் நிஜமாக இல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் அவற்றில் இருந்து எடுத்துக்கொள்ள வேண்டிய எத்தனையோ வாழ்க்கைப் பாடங்களை, அந்தக் கற்பனைக் கதைகளில் வில் கற்பதே நெகிழ்ச்சியான நிறைவு.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget