மேலும் அறிய

Baakiyalakshmi Serial: ராதிகாவுக்கு தெரியாமல் கோபியுடன் இணைந்து புது திட்டம் போடும் சந்துரு!

கோபியை கல்யாணம் செய்ய சொல்லி ராதிகாவிடம் அண்ணன் சந்துரு சொல்ல, அவர் கோபி மேல இப்ப இருக்குறது பரிதாபம் மட்டும் தான் என கூறி அந்த யோசனையை நிராகரிக்கிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவை கோபிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யும் காட்சிகள் இன்று ஒளிபரப்பாகவுள்ளது. 

விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.

இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது முதலே இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் செல்கிறது.கடந்த வாரங்களில் கோபிக்கு பாக்யா விவாகரத்து கொடுத்தது, கோபி வீட்டை விட்டு வெளியேறிய காட்சிகள் இடம் பெற்றது.  இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என பார்க்கலாம். 

கோபியைச் சந்திக்கும் சந்துரு

கோபியை கல்யாணம் செய்ய சொல்லி ராதிகாவிடம் அண்ணன் சந்துரு சொல்ல, அவர் கோபி மேல இப்ப இருக்குறது பரிதாபம் மட்டும் தான் என கூறி அந்த யோசனையை நிராகரிக்கிறார். இதனைத் தொடர்ந்து சந்துருவிடம் பேசும் அவரது அம்மா,இதுக்கு மேலேயும் ராதிகாவை இப்படியே விட்டு வைக்க முடியாது. நீ பேசாமல் கோபியை பார்த்து பேசு என கூறுகிறார். அவரது பேச்சைக் கேட்டு கோபியை சந்திக்க செல்கிறார். 

ஒரு ஹோட்டலில் இருவரும் சந்திக்கிறார்கள். அப்போது ஏன் கோபி இப்படி தனியா வந்து கஷ்டப்படுறீங்க என சந்துரு கேட்க, அவர் சிரிக்கிறார். பின்னர் என்னோட வாழ்க்கையில என்னவெல்லாம் நடந்துச்சுன்னு உங்களுக்கு தெரியும். அப்படி இருந்தும் இப்படி நீங்க கேட்குறீங்க. இதெல்லாம் நான் பண்ணது ராதிகாவுக்காக தான் என சொல்கிறார். உடனே சந்துரு நீங்க ராதிகாவை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா என கேட்கிறார். கோபி, ராதிகா  சம்மதிச்சா நாளைக்கே அவளை கல்யாணம் பண்ணிக்கிறேன். ஆனால் அவதான் பிடிவாதமா இரு முடிவு எடுக்காம இருக்காளே என தெரிவிக்கிறார். 

அதற்கு சந்துரு, நானும் அம்மாவும்  கல்யாண விஷயத்துல ராதிகாகிட்ட இதுக்குமேலேயும் பேச விரும்பல. அவ ரூட்ல போனாலும் வேலைக்கே ஆகாது. அதனால தான் உங்களை கேட்க வந்தேன். நீங்க இப்ப இருக்குற நிலைமையில ஒத்துக்க மாட்டீங்கன்னு நினைச்சேன். ஆனால் நீங்க ரெடின்னு சொல்றீங்க..இது போதும் எனக்கு..மத்தத நான் பாத்துக்குறேன்னு சொல்லி அங்கிருந்து கிளம்புகிறார். 

இனியாவால் டென்ஷனாகும் எழில்

எழில் இரவு லேட்டாக வீட்டுக்கு வரும் நிலையில் அவரிடம் பட வேலைகள் குறித்து பாக்யா கேட்கிறார். எழில், தயாரிப்பாளருடன் நடந்த பிரச்சனை குறித்து தெரிவிக்க பாக்யா ஆறுதல் சொல்கிறார். பின்னர் ஈஸ்வரி, மூர்த்தியிடம் சென்று மாத்திரை சாப்பிட்டீர்களா என கேட்க, மூர்த்தி மட்டுமே பதிலளிக்கிறார். ஈஸ்வரி பேச மறுக்கிறார். அதேபோல் இனியா தூங்காமல் போன் உபயோகிப்பதை கண்டிக்கிறார். பின்னர் தனது ரூமுக்கு செல்லும் பாக்யா அங்கு கோபி இல்லாததை எண்ணி வருத்தப்படுகிறார். 

காலையில் இனியா ஸ்கூலுக்கு கிளம்ப அவரை சாப்பிட சொல்லி பாக்யா கூறுகிறார். ஆனால் தனக்கு ஸ்கூல் பஸ் வர டைம் ஆகிடுச்சி என சொல்லி இனியா சாப்பிட மறுக்கிறார். உடனே பாக்யா உனக்கு பிடிச்ச சாப்பாடு தான் மதியம் செஞ்சிருக்கேன் என சொல்ல, இனியா கடுப்பாகி உனக்கு சமையல் மட்டும் தான் தெரியும் என சொல்லி அவரிடம் வாக்குவாதம் செய்கிறார்.இதைக் கேட்டு மூர்த்தி இனியாவை திட்டுகிறார். இனியா முன்னாடி எல்லாம் நான் காலைல கார்ல தான் ஸ்கூல் போவேன். இப்ப பஸ்ல போனா என் ப்ரண்ட்ஸ் என்ன நினைப்பாங்க என சொல்லி வருத்தப்படுகிறார். 

அந்நேரம் அங்கு வரும் எழில் இனியாவை சமாதானப்படுத்த முயல, பாக்யா பஸ்ல போனா ஒன்னும் தப்பாகாது என தெரிவித்து இனியாவை மேலும் ஆத்திரமூட்டுகிறார்.எழிலும் பாக்யாவுடன் சேர்ந்து இனியாவை சத்தம் போட, ஈஸ்வரி இனியாவுக்கு சப்போர்ட் எழிலை சரமாரியாக திட்டுவதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Embed widget