மேலும் அறிய

AR Rahman concert: ஏ.ஆர். ரஹ்மான் நிகழ்ச்சியில் குளறுபடி - ஏ.சி.டி.சி. நிறுவனத்தின் 3 பேர் மீது வழக்குப்பதிவு

மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சிக்கு 20,000 பேருக்கு அனுமதி பெற்று விட்டு 45 ஆயிரம் பேருக்கு டிக்கெட் விற்பனை செய்ததால் சம்பவ இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

AR Rahman concert: ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சியை நடத்திய ஏசிடிசி நிறுவனம் தாங்கள் சொன்னதை விட அதிகமாக 45,000 டிக்கெட்டுகளை விற்றதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாக கூறி  இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மறக்குமா நெஞ்சம்:

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இசை வாழ்க்கையை சிறப்பிக்கும் விதமாக மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 10ம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை நேரில் பார்க்க ஏராளமானோர் முன்பதிவு செய்துள்ளனர். ஆனால், அவர்களை சரியாக கையாள நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் தவறிவிட்டனர். நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பெரும்பலான ரசிகர்கள் குவிந்ததால் குளறுபடி ஏற்பட்டது. சில்வர், கோல்டு, பிளாட்டினம் என டிக்கெட்டுகள் முன்பதிவு செய்தவர்கள் நுழைவு வாயிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். 

இதனால் அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டது. இசை நிகழ்ச்சியை பார்க்க முயன்றவர்களில் சிலருக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. நிகழ்ச்சியில் நடந்த அசம்பாவிதங்கள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பரவியதுடன் சிலர் ஏ.ஆர். ரஹ்மானை விமர்சித்தனர். நிகழ்ச்சியை சரியாக நடத்த ஏற்பாடு செய்யவில்லை என குற்றம்சாட்டப்பட்டது. 

3 பேர் மீது வழக்குப்பதிவு:

இதற்கிடையே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடன் போலீசார் விசாரணை திரும்பியது. இதற்கிடையே நடந்த சம்பவத்துக்கு தானே பலியாவதாக கூறிய ஏர்.ஆர். ரஹ்மான் முன்பதிவு செய்துவிட்டு நிகழ்ச்சியை காண முடியாதவர்களுக்கு பணம் திருப்பி தரப்படும் என அறிவித்தார். அதன்படி ஒவ்வொருவரின் வங்கி கணக்கிற்கு அவர்கள் முன்பதிவு செய்த பணம் திருப்பி அனுப்பப்பட்டது. 

இந்த நிலையில் மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனத்தின் ஹேமந்த் ராஜா மற்றும் மேலும் இருவர் மீது 188 மற்றும் 406 என்ற இரண்டு பிரிவுகளின் கீழ் தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக  கூறப்பட்டுள்ளது. மேலும், 20,000 பேருக்கு அனுமதி பெற்று விட்டு 45000 பேருக்கு டிக்கெட் விற்பனை செய்ததால் சம்பவ இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும், அவர்கள் கணக்கு காட்டியவர்களின் தேவைக்கு ஏற்ப போலீசார் பாதுகாப்புக்கு அனுப்பப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
Embed widget