மேலும் அறிய

AR Rahman concert: ஏ.ஆர். ரஹ்மான் நிகழ்ச்சியில் குளறுபடி - ஏ.சி.டி.சி. நிறுவனத்தின் 3 பேர் மீது வழக்குப்பதிவு

மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சிக்கு 20,000 பேருக்கு அனுமதி பெற்று விட்டு 45 ஆயிரம் பேருக்கு டிக்கெட் விற்பனை செய்ததால் சம்பவ இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

AR Rahman concert: ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சியை நடத்திய ஏசிடிசி நிறுவனம் தாங்கள் சொன்னதை விட அதிகமாக 45,000 டிக்கெட்டுகளை விற்றதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாக கூறி  இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மறக்குமா நெஞ்சம்:

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இசை வாழ்க்கையை சிறப்பிக்கும் விதமாக மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 10ம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை நேரில் பார்க்க ஏராளமானோர் முன்பதிவு செய்துள்ளனர். ஆனால், அவர்களை சரியாக கையாள நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் தவறிவிட்டனர். நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பெரும்பலான ரசிகர்கள் குவிந்ததால் குளறுபடி ஏற்பட்டது. சில்வர், கோல்டு, பிளாட்டினம் என டிக்கெட்டுகள் முன்பதிவு செய்தவர்கள் நுழைவு வாயிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். 

இதனால் அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டது. இசை நிகழ்ச்சியை பார்க்க முயன்றவர்களில் சிலருக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. நிகழ்ச்சியில் நடந்த அசம்பாவிதங்கள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பரவியதுடன் சிலர் ஏ.ஆர். ரஹ்மானை விமர்சித்தனர். நிகழ்ச்சியை சரியாக நடத்த ஏற்பாடு செய்யவில்லை என குற்றம்சாட்டப்பட்டது. 

3 பேர் மீது வழக்குப்பதிவு:

இதற்கிடையே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடன் போலீசார் விசாரணை திரும்பியது. இதற்கிடையே நடந்த சம்பவத்துக்கு தானே பலியாவதாக கூறிய ஏர்.ஆர். ரஹ்மான் முன்பதிவு செய்துவிட்டு நிகழ்ச்சியை காண முடியாதவர்களுக்கு பணம் திருப்பி தரப்படும் என அறிவித்தார். அதன்படி ஒவ்வொருவரின் வங்கி கணக்கிற்கு அவர்கள் முன்பதிவு செய்த பணம் திருப்பி அனுப்பப்பட்டது. 

இந்த நிலையில் மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனத்தின் ஹேமந்த் ராஜா மற்றும் மேலும் இருவர் மீது 188 மற்றும் 406 என்ற இரண்டு பிரிவுகளின் கீழ் தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக  கூறப்பட்டுள்ளது. மேலும், 20,000 பேருக்கு அனுமதி பெற்று விட்டு 45000 பேருக்கு டிக்கெட் விற்பனை செய்ததால் சம்பவ இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும், அவர்கள் கணக்கு காட்டியவர்களின் தேவைக்கு ஏற்ப போலீசார் பாதுகாப்புக்கு அனுப்பப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
"யூடியூப்பில் இருந்து இயக்குநராக வருவது எளிதல்ல"... பாரி இளவழகனை பாராட்டிய பரிதாபங்கள் கோபி!
"இந்தப் படத்தில் இருந்து விலகுங்கள்" என்ற ஆலோசனை... அதை மீறி வெற்றி கண்ட 'அன்பே டயானா'!
Dhanush : இதக்கூடவா காப்பி அடிப்பீங்க..மகனை வைத்து தனுஷ் சொன்ன குட்டி கதை இங்கிருந்து சுட்டதா!
Dhanush : இதக்கூடவா காப்பி அடிப்பீங்க..மகனை வைத்து தனுஷ் சொன்ன குட்டி கதை இங்கிருந்து சுட்டதா!

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
RB Udhayakumar: ”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
அடி தூள்.! மகளீருக்கு கொட்டப்போகுது பணம்.! 7,000 கோடியை கடன் உதவியாக அள்ளிக்கொடுக்கும் சிஎம் விஜய்
அடி தூள்.! மகளீருக்கு கொட்டப்போகுது பணம்.! 7,000 கோடியை கடன் உதவியாக அள்ளிக்கொடுக்கும் சிஎம் விஜய்
Indian Billionaires: ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
Gold and silver rate today : சவரனுக்கு 1,720 ரூபாய் சரிந்தது.! 2 நாளில் அதிரடி மாற்றம் - இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ
சவரனுக்கு 1,720 ரூபாய் சரிந்தது.! 2 நாளில் அதிரடி மாற்றம் - இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
TN Weather News: சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Embed widget