மேலும் அறிய

A R Rahman: ஆஸ்கர் நாயகன் ரஹ்மானுக்கு இப்படி ஒரு அவமானமா? புனே போலீசாருக்கு நெட்டிசன்கள் கண்டனம்!

ஹாஷ்டேக் பகிர்ந்து இணையவாசிகள் மகாராஷ்டிரா காவல் துறையினருக்கு கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

மகாராஷ்டிர மாநிலம், புனேவில் நடைபெற்ற இசையமைப்பாளர் ஏ,ஆர்,ரஹ்மானின் இசை நிகழ்ச்சி அம்மாநில காவல் துறையினரால் நிறுத்தப்பட்ட நிலையில், சமூக வலைதளங்களில் இச்சம்பவத்துக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இசைப்புயலாகக் கோலோச்சி வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஆஸ்கர் வென்று ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பெருமை சேர்த்து மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். 

படங்களுக்கு இசையமைப்பது தாண்டி, தொடர்ந்து உலகம் முழுவதும் பல்வேறு இடங்களிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். முன்னதாக சென்னையில் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்திய சூஃபி இசை நிகழ்ச்சிக்குக் கூட மாபெரும் ரசிகர் பட்டாளம் திரண்டு சென்று நிகழ்ச்சியைக் கண்டுகளித்தது.

அந்த வரிசையில் நேற்று முன் தினம் (ஏப்.30) புனேவில்  நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் இசைநிகழ்ச்சியை காவல் துறையினர் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் ராஜ்பகதூர் மில்ஸ் அருகே உள்ள மைதானத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்திய நிலையில், இந்நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

 தனது இசையில் வெளியான பல சூப்பர் ஹிட் பாடல்களை ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் அவரது இசைக்குழுவினர் பாடிய நிலையில், 2 மணி நேரத்திற்கும் மேலாக இந்த இசை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

ஞாயிறன்று இரவு 10 மணியைக் கடந்து நிகழ்ச்சி தொடர்ந்த நிகழ்ச்சியில், ஏ.ஆர். ரஹ்மான் நிகழ்ச்சியின் இறுதிப்பாடலை பாடிக்கொண்டிருந்தபோது மேடையேறிய காவல் அலுவலர், “அனுமதி அளிக்கப்பட்ட நேரம் முடிவடைந்தது, உடனடியாக நிகழ்ச்சியை நிறுத்துங்கள்” எனக் கூறியுள்ளார்.

மேலும் உடனடியாக நிகழ்ச்சியை முடித்துக்கொள்ளாவிட்டால்  சட்டநடவடிக்கை பாயும் எனவும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் காவலர் கூறிய நிலையில், நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது.  

 

ஆனால் அங்கு வந்த பார்வையாளர்களும் பலரும் காவல் துறையினரின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டு பின் கலைந்து சென்றனர். இச்சம்பவம் குறித்து முன்னதாக புனே காவல் அதிகாரி ஸ்மார்தனா பாட்டீல் பேசுகையில், “இரவு 10 மணிக்கு மேல் இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்ததால், ஏ.ஆர்.ரஹ்மானை பாடவிடாமல் புனே காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். ரஹ்மான் தனது கடைசிப் பாடலைப் பாடிக்கொண்டிருந்தார்.

பாடும் போது இரவு 10 மணியைத் தாண்டிவிட்டதை அவர் உணரவில்லை, எனவே அந்த இடத்தில் இருந்த எங்கள் காவல்துறை அதிகாரி சென்று அவருக்கு உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி பின்பற்ற வேண்டிய காலக்கெடுவைத் தெரிவித்தார். அதன் பிறகு ஏ.ஆர். ரஹ்மான் பாடுவதை நிறுத்தினார்” எனத் தெரிவித்துள்ளார்.

காவல் துறையினர் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தும் இந்த வீடியோ இணையத்தில் நேற்று தொடங்கி ட்ரெண்டான நிலையில், தற்போது ஹாஷ்டேக் பகிர்ந்து இணையவாசிகள் மகாராஷ்டிரா காவல் துறையினருக்கு கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

#DisRespectOfARRahman எனும் ஹாஷ்டேகைப் பகிர்ந்து புனே காவல் துறையினரின் இந்த செயல் மிகவும் மோசமானது என்றும், ஆஸ்கர் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த ஒரு இந்தியரை புனே காவல் துறை அவமதித்துள்ளது, இப்படிப்பட்ட  பணிவான மனிதரை அவமதித்தது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் நெட்டிசன்கள் இணையத்தில் பதிவிட்டு அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்
Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்
Rasipalan: மகரத்துக்கு நம்பிக்கை..கும்பத்துக்கு கவனம்: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: மகரத்துக்கு நம்பிக்கை..கும்பத்துக்கு கவனம்: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Today Movies in TV, June 26: ஏழுமலை, வில்லு, வெந்து தணிந்தது காடு.. டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன?
Today Movies in TV, June 26: ஏழுமலை, வில்லு, வெந்து தணிந்தது காடு.. டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன?
Kottukkaali : சிறப்பு விருது பெற்ற சூரியின் கொட்டுக்காளி...உணர்ச்சிவசப்பட்ட நடிகை அனா பென்
Kottukkaali : சிறப்பு விருது பெற்ற சூரியின் கொட்டுக்காளி...உணர்ச்சிவசப்பட்ட நடிகை அனா பென்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Subramanian swamy slams Modi :  ”பொய் சொல்லும் மோடி”விளாசும் சுப்ரமணியன் சுவாமி”நீங்க என்ன பண்ணீங்க”DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்
Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்
Rasipalan: மகரத்துக்கு நம்பிக்கை..கும்பத்துக்கு கவனம்: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: மகரத்துக்கு நம்பிக்கை..கும்பத்துக்கு கவனம்: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Today Movies in TV, June 26: ஏழுமலை, வில்லு, வெந்து தணிந்தது காடு.. டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன?
Today Movies in TV, June 26: ஏழுமலை, வில்லு, வெந்து தணிந்தது காடு.. டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன?
Kottukkaali : சிறப்பு விருது பெற்ற சூரியின் கொட்டுக்காளி...உணர்ச்சிவசப்பட்ட நடிகை அனா பென்
Kottukkaali : சிறப்பு விருது பெற்ற சூரியின் கொட்டுக்காளி...உணர்ச்சிவசப்பட்ட நடிகை அனா பென்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
Indian 2:
Indian 2: "நான்கு நாட்கள் கயிற்றில் தொங்கிய கமல்" பிரமித்த இயக்குனர் ஷங்கர்!
Embed widget