மேலும் அறிய

‛இசை எப்படி வருகிறது என்ற கேள்வி எனக்குள் இருந்தது... இன்று என் மகன் இசையமைப்பாளர்’ - அனிருத் தந்தை ரவி ராகவேந்திரா பெருமித பேட்டி!

Ravi Ragavendra : "நான் எல்லாம் இசையில் அவருக்கு அறிவுறை கூற முடியாது. இசை என்பது அவர்களுக்குள்ளாக இருந்து வரக்கூடியது."

தென்னிந்திய சினிமாவில் இளம் இசையமைப்பாளராக அறியப்படுபவர் அனிருத். இளம் வயதிலேயே இசையை கெரியராக தேர்வு செய்து கலக்கி வருகிறார். முதன் முதலாக 3 திரைப்படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத் , அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். வணக்கம் சென்னை ஆல்பம் பாடல் இன்றளவும் பட்டையை கிளப்பி வருகிறது. அந்த பாடல் வெளியான சமயத்தில் அனிருத்தின் தந்தையும் , பிரபல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகருமான ரவி ராகவேந்திரா அனிருத் குறித்த சில சுவாரஸ்யங்களை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.  அதில் “ என் மகன் அனிருத்த நினைத்து ஏதாவது ஒரு தருணத்தில் எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அவன் வெற்றி ஒரு நல்ல வெற்றிதான். இப்போதான் கெரியரை ஆரமித்திருக்கிறான். இளைஞர்களுடன் நல்ல ஒரு கணெக்ட் இருப்பதாக நினைக்கிறேன்.  எனக்கு அவன் இசை மிகவும் பிடிக்கும். அவன் பாட்டு எல்லாமே ரொம்ப வித்தியாசமாக , புதுமையாக இருக்கிறது.அதனாலதான் இளைஞர்களின் பல்ஸை அவனால் பிடிக்க முடிந்திருக்கிறது.


‛இசை எப்படி வருகிறது என்ற கேள்வி எனக்குள் இருந்தது... இன்று என் மகன் இசையமைப்பாளர்’ - அனிருத் தந்தை ரவி ராகவேந்திரா பெருமித பேட்டி!

நான் எல்லாம் இசையில் அவருக்கு அறிவுறை கூற முடியாது. இசை என்பது அவர்களுக்குள்ளாக இருந்து வரக்கூடியது. எனக்கு இசையமைப்பாளர்கள் எப்படி இசையமைக்கிறார்கள் என்ற கேள்வி இருந்திருக்கிறது. ஒருமுறை எம்.எஸ்.விஸ்வநாதன் சாரிடம் இந்த கேள்வியை கேட்டேன். எப்படி சார் இதற்கு அடுத்து புல்லாங்குழல் , இதற்கு அடுத்து வயலின் என கேட்டேன்.. அதெல்லாம் அவர்களின் படைப்பு திறமை. இசையமைப்பாளராக மாறுவது கடவுள் கொடுத்த வரம் . ஒவ்வொரு முறையும் மிகப்பெரிய இசை ஜாம்பவான்கள் இருந்திருக்கிறார்கள்.  ஒவ்வொரு 15 -20 வருடங்களுக்கும் தமிழ் சினிமா மிகப்பெரிய மாற்றங்களை கண்டிருக்கிறது. அது நடிப்பாக இருந்தாலும் இசையாக இருந்தாலும் காமெடியாக இருந்தாலும். அதற்கு காரணம் தலைமுறைகள் மாறுவதுதான். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இந்த தலைமுறைக்கு அனிருத்தின் இசை பிடித்திருக்கிறது. இசையை பொருத்தவரை நான் எதுவும் அனிருத்திற்கு சொல்ல முடியாது. இருந்தாலும் இசைக்கு ஸ்கோப் இருக்கும் படங்களை தேர்வு செய்து வருங்காலங்களில் பணியாற்ற வேண்டும் , அதுதான் அவன் திறமையை முழுமையாக வெளியே கொண்டுவரும்  .” என்னும் அனிருத் தந்தை சிறுவயதில் இருந்தே அனிருத்திற்கு இசை மீது ஆர்வம் இருந்தாக தெரிவிக்கிறார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anirudh (@anirudhofficial)

” நான்கு வயதில் இருந்தே கீ-போர்டு வாசித்து வருகிறார் அனிருத். கர்நாடக சங்கீதமெல்லாம் அனிருத் கற்றுக்கொள்ளவில்லை. பள்ளி - கல்லூரிகளில் இவருக்கென தனி பேண்ட் இருந்தது. அதன் தலைவர் அனிருத்தான். எல்லா போட்டிகளிலும் பரிசுகளை பெறுவார்கள். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்திய அளவிலான இசை போட்டியில் பங்கேற்ற அனிருத் , ஏ.ஆர்.ரஹ்மான் கையில் இருந்து கீ-போர்ட் ஒன்றினை பரிசாக வாங்கினார் . கடவுள் மற்றும் இசைப்பிரியர்களின் ஆசிர்வாதத்தால் அவர் நல்ல நிலைக்கு வர வாழ்த்துகிறேன் “ என பெருமிதமாக தெரிவித்துள்ளார் ரவி ராகவேந்திரா.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Embed widget