Suhasini : ”மகிழ்ச்சியை சொல்ல மொழியே இல்ல.. சித்தப்பாவை உலகமே கொண்டாடுது..” : சுஹாசினி பதிவிட்ட க்யூட் போஸ்ட்
குஷ்பூவை தொடர்ந்து நடிகை சுஹாசினியும் கமலை கட்டியணைத்து தனது அன்பை வெளிப்படுத்தியிருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
![Suhasini : ”மகிழ்ச்சியை சொல்ல மொழியே இல்ல.. சித்தப்பாவை உலகமே கொண்டாடுது..” : சுஹாசினி பதிவிட்ட க்யூட் போஸ்ட் actress suhasini tweet about kamal hassan vikram movie success Suhasini : ”மகிழ்ச்சியை சொல்ல மொழியே இல்ல.. சித்தப்பாவை உலகமே கொண்டாடுது..” : சுஹாசினி பதிவிட்ட க்யூட் போஸ்ட்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/19/a985a03ffcaf4d70661c8148e8632796_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடிகை சுஹாசினி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு சித்தப்பா கமலால் தான் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன்,விஜய் சேதுபதி, பஹத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள விக்ரம் படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே நேற்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்ற கேரக்டரில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இவரே விக்ரம் படத்தின் 3 ஆம் பாகத்திற்கு லீடாக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் படம் வசூலில் உலகளவில் ரூ.300 கோடியை எட்டியுள்ளதால் இதனை கமல் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
View this post on Instagram
படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் லோகேஷூக்கு காரும், துணை இயக்குநர்களுக்கு பைக்கும், நடிகர் சூர்யாவுக்கு தான் அணிந்திருந்த ரோலக்ஸ் வாட்சும் பரிசளித்து ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார் கமல்ஹாசன்.
இதனிடையே விக்ரம் படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் கடந்த ஜூன் 17 ஆம் தேதி சென்னையில் உள்ள மெட்ராஸ் கிளப்பில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், உதயநிதி ஸ்டாலின், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் படத்தின் விநியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய கமல், கடந்த 10 ஆண்டுகளில் எந்த பிரச்சனையும் இல்லாமல் ரிலீஸ் ஆன படம் விக்ரம் தான் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் புகைப்படங்களும், அங்கு அளிக்கப்பட்ட விருந்து உபசரிப்பு புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்நிலையில் விக்ரம் படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் நடிகை குஷ்பூ கமலை சந்தித்த புகைப்படத்தை வெளியிட்டு ’என் ஹீரோ...என் நண்பன்...என் விக்ரம்’ என தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து நடிகை சுஹாசினியும் கமலை கட்டியணைத்து தனது அன்பை வெளிப்படுத்தியிருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கமல் சுஹாசினிக்கு சித்தப்பா முறை என்பதால் அதனை குறிப்பிட்டு, “ மகிழ்ச்சிக்கு வார்த்தைகளோ மொழிகளோ தேவையில்லை.என் சித்தப்பாவால் மகிழ்கிறேன். உலகமே அவரை கொண்டாடுகிறது. நானும் என் அன்பை காட்டுகிறேன்” என தெரிவித்துள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)