மேலும் அறிய

Yobi Babu: “நான் காமெடியன்தான்.. உருவக் கேலி எனக்கு கொஞ்சம் அதிகமாக நடந்திருக்கு” - யோகி பாபு

”நான் எல்லா மேடையிலும் காமெடியன், காமெடியன் என மீண்டும் மீண்டும் சொல்வதற்கு காரணம் அது தான் என் தொழில். அந்த ஒரு விஷயத்துக்காக தான் ரோடு ரோடாக நடந்திருக்கிறேன்” - யோகி பாபு

யோகி பாபு நடிப்பில் இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்சன்ஸ், யாழி பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம்  'பொம்மை நாயகி'. ஷான் இயக்கியுள்ள இப்படம் வரும் பிப்ரவரி 3ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள  நிலையில், நேற்று படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது படத்தின் கதாநாயகன் யோகி பாபு பேசியதாவது:

ரஞ்சித்துடன் இணைய காரணம்

”பொம்மை நாயகி படத்தில் ஷான் என்னை காமெடி பண்ண விடவில்லை. ஏனென்றால் கதை அதற்கு ஏதுவானது இல்லை. நீலம் ப்ரொடக்‌ஷனில் ரஞ்சித்தின் அட்டகத்தி படத்தில் முதலில் நடித்தேன். அப்போது எனக்கு 20 நாள்கள் கேட்டிருந்தார் ரஞ்சித். ஆனால் வேறு படங்களில் நடித்துக் கொண்டிருந்த என்னால் அப்போது நடித்து தர முடியவில்லை.

அதன் பிறகு நீண்ட நாள்கள் கழித்து ரஞ்சித் உடன் இணைவதற்கு காரணமாக இருந்துள்ள மாரி செல்வராஜூக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏனென்றால் மாரி செல்வராஜ் - ரஞ்சித் சார் இருவரும் தான் பரியேறும் பெருமாள் படத்தில் நான் அந்தக் கதாபாத்திரத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என முடிவெடுத்தனர். அது முதல் எங்கள் உறவு தொடர்கிறது. 

நான் காமெடி தான்!

எனக்கு பெண் குழந்தை பிறந்து 5 மாதங்கள் ஆகியுள்ளது. ஒரு அப்பாவுக்கு எவ்வளவு வலி இருக்கும் என்பது எனக்கு இப்போது தான் புரிகிறது.

இந்தப் படம் முழுவதும் என்னிடம் நான் ஒரு நல்ல உணர்வுப்பூர்வமான நடிகர் என்று கூறினார்கள். ஆனால் இவை அனைத்தும் ஒரு இயக்குநரின் கையில் தான் உள்ளது. படத்தின் இயக்குநர் ஷான் அவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார். 

நான் எல்லா மேடையிலும் காமெடியன், காமெடியன் என மீண்டும் மீண்டும் சொல்வதற்கு காரணம் அது தான் என் தொழில். அந்த ஒரு விஷயத்துக்காக தான் ரோடு ரோடாக நடந்திருக்கிறேன்” என்றார்.

உருவக்கேலி

பன்றிவாயன் என சொன்னவர்களுக்கு பலநூறு படங்கள் நடித்து பதிலடி  தந்தார் எனக்கூறி நிகழ்ச்சி தொகுப்பாளினியும் பத்திரிகையாளருமான கவிதா நடிகர் யோகி பாபுவை அறிமுகப்படுத்திய நிலையில், அது குறித்துப் பேசிய யோகி பாபு, “தொகுப்பாளர் சொன்னது போல் என்னை பலர் கிண்டல் செய்திருக்கிறார்கள். எல்லாருக்கும் நடப்பது எனக்கு கொஞ்சம் அதிகமாக நடந்திருக்கிறது. 

தமிழ் சினிமா என்று இல்லை எந்த சினிமா போனாலும் நான் காமெடியன் தான். மாரி சொன்னது போல் இந்த முகத்தில் ஏதோ ஒன்று இருக்கு இவரை கொண்டு போய் படம் பண்ணலாம் என நினைப்பவர்கள் வாருங்கள். தாராளமாக படம் பண்ணலாம்” எனப் பேசி முடித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
Embed widget