ராட்சசன் வெற்றிக்குப் பின் கண்டுகொள்ளாத இயக்குநர் ராம்குமார்..விஷ்ணு விஷால் ஆதங்கம்
ராட்சசன் திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் இயக்குநர் ராம்குமாருடன் இணைந்து இன்னொரு படத்தில் பணியாற்றாதது குறித்து நடிகர் விஷ்ணு விஷால் பதிலளித்துள்ளார்

நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள கட்டா குஸ்தி 2 திரைப்படம் வரும் ஜூலை 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் ப்ரோமோஷன்களில் தனது திரை வாழ்க்கை குறித்து பல்வேறு தகவல்களை விஷ்ணு விஷால் பகிர்ந்துகொண்டு வருகிறார். விஷ்ணு விஷால் நடித்து சுப்பர் ஹிட் அடித்த ராட்சசன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் ராம்குமாருடன் இணைந்து பணியாற்றாததன் காரணம் குறித்து விஷ்ணு விஷால் பதிலளித்துள்ளார்
நடிகர் விஷ்ணு விஷால் சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிக் குழு திரைப்படத்தின் மூலம் நாயகராக அறிமுகமானார். இவர் நடிப்பில் வெளியான நீர்ப்பறவை , முண்டாசுபட்டி , இன்று நேற்று நாளை ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்ற படங்களாக அமைந்தன . தொடர் தோல்விகளை சந்தித்து வந்த விஷ்ணு விஷாலுக்கு ராம்குமார் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளியான ராட்ச்சசன் திரைப்படம் மிகப்பெரிய கம்பேக் திரைப்படமாக அமைந்தது. ஆனால் இதனைத் தொடர்ந்து அவருக்கு நல்ல கதைகள் வந்து சேரவில்லை.
ராட்சசன் வெற்றிக்குப் பின் ராம்குமாருடன் இணையாதது ஏன்?
ராட்சசன் திரைப்படத்திற்கு பின் கிட்டதட்ட 8 ஆண்டுகளுக்குப் பின் இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் இரண்டு வானம் திரைப்படத்தில் நடித்துள்ளார் விஷ்ணு விஷால். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது போஸ்ட் ப்ரோடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. ராட்சசன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றப் பின்னும் இந்த கூட்டணி மறுபடியும் இணையாதது குறித்து பேட்டி ஒன்றில் விஷ்ணு விஷால் பதிலளித்துள்ளார்
கண்டுகொள்ளாத ராம்குமார்
ராட்சசன் படத்திற்காக நான் 24 'டபுள் கால்ஷீட்' மற்றும் 7 'டிரிபிள் கால்ஷீட்' ஒதுக்கினேன் . 15 நாட்கள் கேரவனிலேயே தங்கினேன். ராட்சசன் படத்தின் வெற்றிக்குப் பிறகும் இயக்குனர் ராம்குமார் என்னுடன் இணைந்து பணியாற்றாதது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது . ராட்சசனுக்குப் பிறகு அவர் வேறு சில படங்களை இயக்க முயன்றார், ஆனால் அவை எதுவும் கைகூடவில்லை. அதன்பிறகு, நானே அவரை அழைத்து ஏன் படங்கள் எதையும் இயக்கவில்லை என்று கேட்டேன் . அப்போதுதான் ராம்குமார் இரண்டுவானம் படத்தின் கதையை என்னிடம் கூறினார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்ததால், அப்படம் குறித்த பணிகளைத் தொடங்கினோம்." என விஷ்ணு விஷால் கூறினர்.
Before You Go
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















