Actor Vijay : 10 வருஷமா ஏன் மீடியாவ சந்திக்கல.. பகீர் கேள்விக்கு கூலாக பதிலளித்த விஜய்..
நேர்காணலில் நடிகர் விஜயை பீஸ்ட் படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கேள்வி கேட்கிறார்.

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. இந்தப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிலையில் இந்தப்படத்தை ப்ரோமோட் செய்யும் விதமாக, நடிகர் விஜய், சன் டிவிக்கு நேர்காணல் தந்திருக்கிறார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு விஜய், தொலைக்காட்சிக்கு நேர்காணல் கொடுத்துள்ளார். இந்த நேர்காணலில் நடிகர் விஜயை பீஸ்ட் படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கேள்வி கேட்கிறார்.
ஏற்கனவே, இதுதொடர்பான முதல் ப்ரோமோ வெளியாகி மிகப்பெரிய வைரலான நிலையில், தற்போது மீண்டும் ஒரு ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.அதில் கடந்த 10ஆண்டுகளாக மீடியாவை சந்திக்காதது ஏன்? ஏதேனும் குறிப்பிடும்படியான காரணங்கள் உண்டா நெல்சன் கேள்வி எழுப்புகிறார். அதற்கு ஒரு சம்பவம் காரணம் என விஜய் கூறுகிறார்.
View this post on Instagram
அதேபோல ரசிகர்களுக்கு ஏதாவது அறிவுரை சொல்ல வேண்டுமென்றால் என்ன சொல்வீர்கள் என்ற கேள்விக்கு, அட்வைஸ் பன்ற அளவுக்கு பெரிய ஆள் நான் இல்லை என எஸ்கேப் ஆக விரும்பவில்லை. என தனது பதிலை தொடர்கிறார். முக்கியமான இரு கேள்விகளுடன் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ப்ரோமாவாக இது உள்ளது.வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.
இதற்கிடையே பீஸ்ட் படத்திற்கு குவைத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பீஸ்ட் டிரெய்லரில், வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதால் இப்படத்திற்கு அந்நாட்டில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, துல்கர் சல்மான் நடித்த குரூப், விஷ்னு விஷால் நடித்த எஃப்.ஐ.ஆர் படங்களும் இதே காரணத்திற்காக தடை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Before You Go
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















