மேலும் அறிய

வந்துட்டே இருக்கேன்...வந்துட்டே இருக்கேன்...விசாரணை அலைச்சலில் கடுப்பான சூரி

தனது நிலப்பிரச்சனை தொடர்பான வழக்கில் தான் அடிக்கடி காவல்துறை விசாரணைக்கு அலைந்து வருவதாக நடிகர் சூரி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்

நடிகர் சூரியின் நிலப்பிரச்சனை வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக இன்று சென்னை வெப்பேரி காவல் நிலையத்தில் விசாரணைக்கு அவர் ஆஜரான . செய்தியாளர்களையும் பேசிய சூரி இதுவரை 4 ஆவது முறையாக தான் விசாரணைக்கு வந்துபோவதாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். 

அதிருப்தியை வெளிக்காட்டிய சூரி 

சூரி பேசியபோது " நிலப்பிரச்சனை தொடர்பான விசாரணைக்காக வந்தேன். அதற்காக தான் முன்பு ஒரு முறை வந்தேன். மறுபடியும் வந்திருக்கேன். இப்படியே வந்துகொண்டேதான் இருக்கிறேன். முன்பெல்லாம் வீட்டை விட்டு வெளியே போனால் எங்கப்பா ஷூட்டிங் என்று கேட்பார்கள். ஆனால் இப்போது எங்கப்பா போலீஸ் ஸ்டேஷனுக்கானு கேட்கிறார்கள். வேப்பேரி ஸ்டேஷன் தான் கனவுல வருது. கடவுள் இருக்கிறார். நியாயம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் தான் இருக்கிறேன். முடிவு எனக்கு சாதகமாக வரக்கூடாது நியாயமாக இருக்கனும் என்று நினைக்கிறேன். நான் சட்டத்தை நம்பியிருக்கிறேன். கடவுளை நம்பியிருக்கிறேன். " என்று பேசினார். 

சூரி நிலப்பிரச்சனை பின்னணி 

சூரி தொடர்பான இந்த நில விவகாரம் கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கியது. சென்னை சிறுசேரி பகுதியில் சுமார் 1.82 ஏக்கர் நிலத்தை ரூ.5.75 கோடிக்கு அவர் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலத்தை வாங்குவதற்கு முன்னாள் காவல்துறை அதிகாரியும் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையுமான ரமேஷ் குடவாலா மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் அன்பு வேல்ராஜன் ஆகியோர் அறிமுகப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், நிலத்தை வாங்கிய பிறகே அதன் உண்மையான மதிப்பை விட அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும், நிலத்திற்கு உரிய அணுகுமுறை சாலை உள்ளிட்ட பல சட்டரீதியான சிக்கல்கள் இருப்பதாகவும் சூரிக்கு தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, தன்னை திட்டமிட்டு ஏமாற்றியதாக குற்றம்சாட்டி அவர் காவல்துறையில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் மோசடி, போலி ஆவணங்கள் மற்றும் நில அபகரிப்பு தொடர்பான பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. பல ஆண்டுகளாக இந்த வழக்கு காவல்துறை விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து வரும் நிலையில், அவ்வப்போது சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வழக்கின் தொடர்ச்சியாகவே இன்று நடிகர் சூரி சென்னை வெப்பேரி காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார். விசாரணை முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்த விவகாரம் தொடர்பாக தனது தரப்பு கருத்துகளை பதிவு செய்தார்.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

Vinodhini Vaidyanathan: அவமானமா போச்சு.. ரவிமோகன் பட விழாவில் நேர்ந்த கொடுமை.. வேதனையை பகிர்ந்த வினோதினி!
Vinodhini Vaidyanathan: அவமானமா போச்சு.. ரவிமோகன் பட விழாவில் நேர்ந்த கொடுமை.. வேதனையை பகிர்ந்த வினோதினி!
Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Embed widget