மேலும் அறிய

Ranbir Kapoor: ரொம்ப கவலையா இருக்கு...மகளை நினைத்து கவலைப்பட்ட ரன்பீர் கபூர்..! என்னதான் ஆச்சு?

ரன்பீரிடம் தந்தையான பிறகு அவருக்கு என்ன மாற்றத்தை உணர்ந்தீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அப்போது 40 வயதாகும் தான் ஏன் இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டேன் என்று ஆச்சரியப்படுகிறேன் என கூறினார்.

சவூதி அரேபியாவில் நடைபெற்ற சர்வதேச ரெட் சீ திரைப்பட திருவிழாவில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் தனது வாழ்க்கையில் நிகழ்ந்த பல சம்பவங்கள் குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளார். 

பொதுவாக பிரபலங்கள் பலரும் இளம் வயதில் திருமணம் செய்துக் கொள்ளாமல், தங்களுடைய கேரியரில் வெற்றி அடைந்த பிறகு அல்லது கேரியரில் சரிவு ஏற்படும் போது அந்த முடிவை கையில் எடுக்கிறார்கள். இதில் ஆண், பெண் என்ற பேதமில்லாமல் இல்லை. இதனை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தாலும் வயதுக்கும் திருமண வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லை என்பதை ஒவ்வொருவரும் உணர்த்தவே செய்கிறார்கள். 

அந்த வகையில் 40 வயதான பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கும், 29 வயதான நடிகை ஆலியா பட்டுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி மும்பையில் பிரமாண்டமாக திருமணம் நடந்தது. பாலிவுட்டின் மிகவும் கியூட் ஜோடிகளாக வலம் வந்த இந்த தம்பதியினருக்கு இந்திய திரையுலகினர் பலரும் வாழ்த்துகளை தெரிவித்திருந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக ஆலியா பட் அறிவித்தார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Alia Bhatt 💛 (@aliaabhatt)

அதனைத் தொடர்ந்து நவம்பர் 6 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்ததாக இருவரும் தங்கள் சமூக வலைத்தளப்பக்கத்தில் அறிவித்தனர். இந்த குழந்தைக்கு ராஹா என பாட்டி நீது கபூர் பெயர் சூட்டினார். தூய்மையான வடிவத்தில் தெய்வீக பாதை என்பதே இப்பெயரின் பொருளாகும். இதனிடையே குழந்தை பிறந்த பிறகு எங்களின் வாழ்க்கையே முற்றிலுமாக மாறிவிட்டது என்றும், எனது பயணம் எப்படி செல்ல போகிறது என்பதை மிகவும் ஆர்வமாக எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என்றும் சமீபத்தில் ஒரு பேட்டியில் ஆலியா பட் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் சர்வதேச ரெட் சீ திரைப்பட திருவிழாவில் பேசிய ரன்பீர் கபூர், ராஹா குறித்த தனது கவலைகளை வெளிப்படுத்தியுள்ளார். அவரிடம் தந்தையான பிறகு அவருக்கு என்ன மாற்றத்தை உணர்ந்தீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அப்போது 40 வயதாகும் தான் ஏன் இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டேன் என்று ஆச்சரியப்படுகிறேன்.

எனது மிகப்பெரிய கவலை என்னவென்றால், குழந்தைக்கு 20 அல்லது 21 வயதாக இருக்கும்போது, ​​​​எனக்கு 60 வயது இருக்கும். நான் அவர்களுடன் கால்பந்து விளையாட முடியுமா? நான் அவர்களுடன் ஓட முடியுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் மனைவி ஆலியா பட் தன்னை விட அதிகமாக வேலை செய்வதாகவும் அவர் புகழ்ந்துள்ளார். ரன்பீர் கபூரின் இந்த கருத்து ரசிகர்களிடத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
5755
Active
5484
Recovered
59
Deaths
Last Updated: Sat 7 June, 2025 at 11:52 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
TNEA 2025: பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்ற நாளை கடைசி- அடுத்து என்ன?
TNEA 2025: பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்ற நாளை கடைசி- அடுத்து என்ன?
மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. ஊரடங்கு அமல்... இணைய சேவைகள் நிறுத்தம்! பதற்றத்தில் மக்கள்
மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. ஊரடங்கு அமல்... இணைய சேவைகள் நிறுத்தம்! பதற்றத்தில் மக்கள்
மீண்டும் மீண்டுமா? அரசுப்பள்ளி ஆசிரியர்களின் இந்த உரிமைகளையும் பறிப்பதா? அன்புமணி கேள்வி
மீண்டும் மீண்டுமா? அரசுப்பள்ளி ஆசிரியர்களின் இந்த உரிமைகளையும் பறிப்பதா? அன்புமணி கேள்வி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on VairamuthuTVK Vijay Alliance | தவெக யாருடன் கூட்டணி? விஜய் போட்ட ஸ்கெட்ச்! அறிவிப்பு எப்போது?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
TNEA 2025: பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்ற நாளை கடைசி- அடுத்து என்ன?
TNEA 2025: பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்ற நாளை கடைசி- அடுத்து என்ன?
மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. ஊரடங்கு அமல்... இணைய சேவைகள் நிறுத்தம்! பதற்றத்தில் மக்கள்
மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. ஊரடங்கு அமல்... இணைய சேவைகள் நிறுத்தம்! பதற்றத்தில் மக்கள்
மீண்டும் மீண்டுமா? அரசுப்பள்ளி ஆசிரியர்களின் இந்த உரிமைகளையும் பறிப்பதா? அன்புமணி கேள்வி
மீண்டும் மீண்டுமா? அரசுப்பள்ளி ஆசிரியர்களின் இந்த உரிமைகளையும் பறிப்பதா? அன்புமணி கேள்வி
Putin Vs Zelensky: “ரஷ்யா கள்ள ஆட்டம் ஆடுகிறது“ - கதறும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; அடித்து ஆடும் புதின்
“ரஷ்யா கள்ள ஆட்டம் ஆடுகிறது“ - கதறும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; அடித்து ஆடும் புதின்
Spl. Train to Tiruchendur: முருக பக்தர்களுக்கு நற்செய்தி; வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்-முழு விவரம்
முருக பக்தர்களுக்கு நற்செய்தி; வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்-முழு விவரம்
Maruti Suzuki Grand Vitara: மாருதி சுசுகி அசத்தல் சலுகை; கிராண்ட் விதாரா எஸ்யூவி-க்கு 1.93 லட்சம் வரை பலன்கள் அறிவிப்பு
மாருதி சுசுகி அசத்தல் சலுகை; கிராண்ட் விதாரா எஸ்யூவி-க்கு 1.93 லட்சம் வரை பலன்கள் அறிவிப்பு
Tamilnadu Roundup: மதுரையில் அமித் ஷா.. தைலாவரம் வர சொன்ன ராமதாஸ்- 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: மதுரையில் அமித் ஷா.. தைலாவரம் வர சொன்ன ராமதாஸ்- 10 மணி செய்திகள்
Embed widget