மேலும் அறிய

விஜய் அழைத்தாலும் கட்சியில் சேரமாட்டேன் - பிரபல நடிகர் ஓபன் டாக்

ஆளும் கட்சியை விமர்சித்தால்தான் அடுத்த இடத்துக்கு வர முடியும். எம்ஜிஆர், கருணாநிதி அதைத்தான் செய்தனர் - நடிகர் பார்த்திபன்

புதுச்சேரி: புதுச்சேரியில் படப்பிடிப்பு நடத்துவது தொடர்பாக இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் புதுச்சேரி சட்ட பேரவையில் சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனை நேரில் சந்தித்து பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறுகையில், “நான் புதிதாக ‘54-வது பக்கத்தில் ஒரு மயிலிறகு’ எனும் திரைப்படத்தை தயாரிக்க உள்ளேன். இதன் படப்பிடிப்பு 99 சதவீதம் புதுச்சேரியில் நடைபெறவுள்ளதால் அரசின் ஒத்துழைப்பை கோரி சுற்றுலாத்துறை அமைச்சரைச் சந்தித்தேன். அவர் கனிவோடு ஏற்றுக்கொண்டு புதுச்சேரி அரசு மூலம் என்ன செய்து தர முடியுமோ, அதனை செய்து தருவதாக தெரிவித்துள்ளார். என்னுடைய படத்தில் எப்போதும் கதாநாயகன் நான்தான். இது காதலை மையமாக கொண்ட திரைப்படம்” என்றார்.

நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து செய்தியாளர்கள் கேள்வி?

அதற்கு பார்த்திபன், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். கட்சி தொடங்கலாம். யார் வேண்டுமானாலும் முதல்வராக ஆசைப்படலாம். அதில் ஒன்றும் தவறு இல்லை. ஆனால், அரசியல் கட்சியைத் தொடங்கி நடத்தும்போது பல தடைகள் நிச்சயம் இருக்கும்.

அரசியலில் ஆட்சியை பிடிப்பது என்பது பெரிய விஷயம்

ஜல்லிக்கட்டில் பல தடைகளை தாண்டி தான் மாடு பிடிக்க வேண்டும் என்று இருக்கும் போது, அரசியலில் ஆட்சியை பிடிப்பது என்பது பெரிய விஷயம். ஆகவே நடிகர் விஜய் அவருக்கு ஏற்படும் தடைகளை தாண்டினால் தான் உண்மையான தலைவருக்கு அழகு என்பது தெரியும்.

ஆளும் கட்சியை விமர்சித்தால் தான் அடுத்த இடத்துக்கு வர முடியும். எம்ஜிஆர், கருணாநிதி அதைத்தான் செய்தனர். ஆளும் கட்சியை எதிர்த்துதான் வர வேண்டும். நடுநிலையோடு வரமுடியாது.

விஜய் அழைத்தாலும் அவரது கட்சியில் சேரமாட்டேன்

இவற்றையெல்லாம் நான் பொதுவாக ரசிக்கின்றேன். நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் இல்லை. விஜய் அழைத்தாலும் அவரது கட்சியில் சேரமாட்டேன். என்னுடைய அரசியல் நோக்கு என்பது ஏற்கெனவே இருப்பது இல்லாமல் வேறொரு மாற்றம் ஏற்பட வேண்டும். அதுதான் அரசியலின் நல்ல விஷயம். அது என்னால் செய்ய முடியுமா என்றால், இப்போது எனக்கு இருக்கும் கவனம் முழுவதும் சினிமா மீது மட்டும்தான்.

நடிகர் விஜய் இரு மேடைகளில்தான் பேசியுள்ளார். அதில் அவர் கொஞ்சம் கூட தவறில்லாமல் பேசியது எல்லோருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நம்முடைய நாடு பேசியே முன்னுக்கு வந்த நாடு. அரசியல் என்றாலே பேச்சு. அதற்கு விஜய் தகுதியாக இருக்கிறார். அவருக்கு கூடும் கூட்டம் அவரது கட்சிக்கு வாக்களிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பெரியார் நம்முடைய பாரம்பரியம், சமூகத்தில் ஒதுக்கவோ நீக்கவோ முடியாத ஒருவர்

பெரியார் நம்முடைய பாரம்பரியம், சமூகத்தில் ஒதுக்கவோ நீக்கவோ முடியாத ஒருவர். அவரை எதிர்ப்பதற்கு பின்னால் வேறு அரசியல் இருக்கலாம். யாரோ ஒருவர் சொல்வதை வைத்து பதில் சொல்ல முடியாது. பெரியார் என்பவர் நமக்கு எப்போதுமே பெரியார் தான். அதில் சிறிய கருத்து வேறுபாடு கூட கிடையாது. சீமான் அரசியல் கட்சி தொடங்கி, தற்போது பெரியாரை விமர்சித்து வருகிறார். அவர் அரசியல் நடத்துவதற்குக் கூட பெரியார்தான் தேவைப்படுகிறார். அந்தளவுக்கு பெரியார் தாக்கம் உள்ளது என தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold and silver rate today : சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: ”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
Karunanidhi: ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டாரா கருணாநிதி.? உண்மையான காரணம் என்ன.? பிளாஷ் பேக் இதோ..
ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டாரா கருணாநிதி.? உண்மையான காரணம் என்ன.? பிளாஷ் பேக் இதோ..
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
TATA Cars Price Hike: இன்ஜின் டூ EV SUV - மொத்த கார் மாடல்களுக்கும் விலையை ஏற்றியா டாடா - எவ்வளவு தெரியுமா?
இன்ஜின் டூ EV SUV - மொத்த கார் மாடல்களுக்கும் விலையை ஏற்றியா டாடா - எவ்வளவு தெரியுமா?
Embed widget