மேலும் அறிய

Actor Ilavarasu : இவ்ளோ பெரிய ஹிட் ஆகும்னு எதிர்பார்க்கல...ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் குறித்து நடிகர் இளவரசு

ஜிகர்தண்டா படத்தில் கார்மேக கதாபாத்திரத்தில் கார்மேகம் கதாபாத்திரம் குறித்து நடிகர் இளவரசு பேசியுள்ளார்

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த நவம்பர் 10 ஆம் தேதி வெளியானத் திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். ராகவா லாரண்ஸ்.  எஸ் ஜே சூர்யா , நிமிஷா சஜயன், இளவரசு, சஞ்சனா நடராஜன், நவீன் சந்திரா, ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கார்த்திக் சுப்பராஜின் ஸ்டைலில் ஒரு நல்ல கமர்ஷியல் படமாக மட்டும் இல்லாமல் சமூக பிரச்சனையை பேசும் படமாகவும் உருவாகி இருக்கிறது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.

 பாராட்டுக்களைப் பெறும் நடிகர்கள்

ஜிகர்தண்டா படத்திற்காக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் திரையுலகினரால் பாராட்டப்பட்டு வருகிறார். மேலும் அவர் இதுவரை  இயக்கிய படங்களில் சிறந்த படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்று ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். அடுத்ததாக நடிகர் ராகவா லாரன்ஸ் இந்தப் படத்தின் மூலமாக ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். படத்தில் அவர் நடித்திருக்கும் அல்லியஸ் சீசர் கதாபாத்திரத்தில் வேறு யாரையும் கற்பனை செய்து பார்க்கமுடியாத அளவிற்கு சிறப்பாக நடித்துள்ளார். எப்போதும்போல் ரசிகர்களால் நடிப்பு அரக்கன் என்று அழைக்கப்படும் எஸ் ஜே சூர்யா இந்தப் படத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார். வில்லனாக  நடித்த நவீன் சந்திராவும் மக்களால் பாராட்டப்படுகிறார்.

ஃபார் மை பாய் (FOR MY BOY)

இவர்களைத் தவிர்த்து இளவரசு நடித்திருக்கும் கார்மேகம் கதாபாத்திரம் மக்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அல்லியஸ் சீஸர் மற்றும் கார்மேகம் ஆகிய இருவருக்கும் இடையில் மிக அழகான ஒரு உறவை கட்டமைத்திருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ்.

அதிலும் குறிப்பாக கார்மேகம் அல்லீயஸ் சீசரை ’மை பாய்’ என்று அழைப்பது க்ளைமேக்ஸ் காட்சியில் ஃபார் மை பாய் என்று அவர் சொல்லும் காட்சி ரசிகர்களை கவர்ந்துள்ளது. கார்மேக கதாபாத்திரத்திற்கு மக்களிடம் கிடைத்திருக்கும் வரவேற்பு குறித்து  நடிகர் இளவரசு இப்படி கூறியிருக்கிறார்.

’ஃபார்  மை பாய் “ என்று படத்தில் வரும் வசனம் அல்லீயஸ் சீசர் மற்றும் கார்மேகத்திற்கும் இடையில் இருக்கும் உறவை நமக்கு விளக்குகிறது. இந்த வசனத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இந்த வசனத்தை இப்படிதான் பேச வேண்டும் என்று இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் எதுவும் சொல்லவில்லை. என்னுடைய இயல்பில் இருந்தே இந்த வசனத்தை என்னை பேச அனுமதித்தார். அதுதான் என்னைப் போன்ற ஒரு நடிகருக்கு கிடைக்கும் சுதந்திரம். அதற்கு அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். நான் நடிக்கும் ஒவ்வொரு படமும் வெற்றிபெற வேண்டும் என்பது தான் என்னுடைய எண்ணமாக இருக்கும். ஜிகர்தண்டா படத்திற்கு இந்த வசனத்திற்கு இவ்வளவுப் பெரிய வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது”  என்று நடிகர் இளவரசு கூறியிருக்கிறார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.