மேலும் அறிய

A R Rahman on Ilayaraja: அவரிடம் துப்பாக்கி இருக்காது.. ஆனால் எல்லாரும் நடுங்குவார்கள்... இளையராஜாவிடம் பிடித்த விஷயம் இதுதான்.. ஏ.ஆர்.ரஹ்மான் பளிச்!

”இளையராஜாவிடம் இருந்த விஷயம் என்னை மிகவும் ஈர்த்தது. அதன்பின் நான் இசையமைப்பாளர் ஆனபோது, என்னுடைய சொந்த வழியில் அதை சூஃபியிசத்தில் கொண்டு சென்றேன். ஸ்டுடியோவில் எனக்கு அவ்வளவு மரியாதை கிடைத்தது”

இசையமைப்பாளர் இளையராஜாவிடமிருந்து தான் கற்றுக் கொண்டது என்ன என்பது குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மனம் திறந்துள்ளார்.

சமகால இசை ஜாம்பவான்கள்
 
தமிழ் சினிமாவில் கே.வி. மகாதேவன், எம்.எஸ் விஸ்வநாதன் போன்ற இசை ஜாம்பவான்களுக்குப் பிறகு தமிழ் திரையிசையின் இரு பெரும் தூண்களாகக் கருதப்படுபவர்கள் இளையராஜாவும் ஏ.ஆர்.ரஹ்மானும்.

இவர்களில் இளையராஜாவிடம் பணியாற்றி, அவரை தன் ஆசிரியர்களில் ஒருவராகக் கருதி இசைக் கற்று வளர்ந்து, இன்று அவருக்கு நிகராக கொண்டாடப்படும் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் உருவெடுத்துள்ளார். இளையராஜாவின் இசைக்குழுவில் தன் இசைப் பயணத்தைத் தொடங்கிய ஏ.ஆர்.ரஹ்மான், அவருடன் சுமார் 500 படங்களில் பணியாற்றியுள்ளதாகத் தகவலகள் தெரிவிக்கின்றன. 

இளையராஜாவிடம் கற்றுக்கொண்ட விஷயம்

அதன் பின் 1990களில் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர். ரஹ்மான், இளையராஜாவுக்கு நிகராக நாடு முழுவதும் போற்றப்படும் இசையமைப்பாளராக வளர்ந்து ஆஸ்கர் நாயகனாகவும் உருவெடுத்தார். 

இன்று இளையராஜாவா ஏ.ஆர்.ரஹ்மானா என இணையதளவாசிகள் பெரும்பாலான சமயங்களில் சண்டையிட்டுக் கொண்டாலும், இளையராஜாவும் சரி ஏ.ஆர்.ரஹ்மானும் சரி ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கும் மதிப்பையும் அன்பையும் தொடர்ந்து பொது தளங்களில் வெளிப்படுத்தியே வருகின்றனர்.


A R Rahman on Ilayaraja: அவரிடம் துப்பாக்கி இருக்காது.. ஆனால் எல்லாரும் நடுங்குவார்கள்... இளையராஜாவிடம் பிடித்த விஷயம் இதுதான்.. ஏ.ஆர்.ரஹ்மான் பளிச்!

அந்த வகையில் இளையராஜாவிடம் தான் கற்றுக்கொண்டது என்ன என்பது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் மனம் திறந்துள்ளார்.

’சாமியார் மாதிரி இருப்பார்...’

தனியார் ஊடகத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் முன்னதாக அளித்த நேர்காணலின்போது,  “இளையராஜாவிடம் நீங்கள் கற்றுக் கொண்ட விஷயம், வாழ்க்கையில் மிகவும் அது உபயோகமாக இன்று வரை உள்ளது என நீங்கள் நினைப்பது என்ன?” எனக் கேள்வி எழுப்பப்பட்டது. 

இதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான், ”ஒரு இசைக் கலைஞன் என்றால் தண்ணியடிப்பான், போதைப் பொருள்கள் எடுத்துக் கொள்வான், பெண்களோடு சுற்றுவான், அவனுக்கு சரியான கேரடர் இருக்காது என ஒரு குறிப்பிட்ட தலைமுறையினர் களங்கம் கற்பித்து ஒரு விஷயத்தினை உருவாக்கிவிட்டனர்.

இசைக் கலைஞன், பாடகர் என்றாலே அந்தப் பக்கம் போகாதே எனும் நிலை உருவாகிவிட்டது. இது மாதிரி சமயத்தில் இளையராஜா சாரிடம் தான் நான் இதனை முதன்முதலில் பார்த்தேன். இந்தக் களங்கத்தை உடைத்து ஒரு சாமியார் போல் அமர்ந்திருப்பார். தண்ணியடிக்க மாட்டார். தம்மடிக்க மாட்டார். வேறு கெட்ட பழக்கம் எதுவும் இருக்காது. இசை மட்டும்தான். அவரது இசைக்காக வந்த மரியாதை. அந்த விஷயம் என்னை இன்னும் பாதித்தது.

’எல்லாரும் நடுங்குவாங்க’

துப்பாக்கியெல்லாம் எதுவும் வைத்திருக்க மாட்டார். ஆனால், அவரைப் பார்த்து அனைவரும் நடுங்குவார்கள். அவரிடமிருந்த இந்த விஷயம் என்னை மிகவும் ஈர்த்தது. அதன் பின் நான் ஒரு இசையமைப்பாளராக வரும்போது, என்னுடைய சொந்த வழியில் அதை சூஃபியிசத்தில் கொண்டு சென்றேன். ஸ்டுடியோவில் அவ்வளவு மரியாதை எனக்கு கிடைத்தது.

நான் யாருக்கு ஃபோன் செய்தாலும் 3 மணி ஆகட்டும் தங்கள் வீட்டு பெண்களை ஸ்டுடியோவுக்கு ரெக்காடிங்குக்கு அனுப்புவார்கள். இதை ஒரு வரப்பிரசாதமாக நினைக்கிறேன். இதை நான் இளையராஜா போன்ற குருக்களிடமிருந்து கற்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.

“தமிழ் சினிமாவில் இளையராஜாவுக்கு மாற்றாக இயக்குநர் கே.பாலச்சந்தர் அறிமுகப்படுத்திய ஏ.ஆர்.ரஹ்மான், மரகதமணி இருவரும் ஆஸ்கர் வென்று விட்டார்கள்; ஆனால் இளையராஜாவால் பெற முடியவில்லை” என ஒரு தரப்பினர் இணையத்தில் கடந்த சில நாள்களாக கேலி செய்துவரும் நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த நேர்காணல் இவற்றுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Sabareesan: லண்டனில் அம்பேத்கர்–கலைஞர் ஆய்வுப் படிப்பு.! தமிழக மாணவர்களுக்கு அசத்தல் சான்ஸை ஏற்படுத்திய சபரீசன்
தமிழக மாணவர்களுக்கு வாரி வழங்கிய சபரீசன்.! லண்டனில் 3 மாதம் தங்கி படிக்க ஜாக்பாட்- அசத்தல் அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Sabareesan: லண்டனில் அம்பேத்கர்–கலைஞர் ஆய்வுப் படிப்பு.! தமிழக மாணவர்களுக்கு அசத்தல் சான்ஸை ஏற்படுத்திய சபரீசன்
தமிழக மாணவர்களுக்கு வாரி வழங்கிய சபரீசன்.! லண்டனில் 3 மாதம் தங்கி படிக்க ஜாக்பாட்- அசத்தல் அறிவிப்பு
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Free laptop: மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Embed widget