மேலும் அறிய

Suriya Jyothika: ஊர் கண்ணே படுது! ஜோவுடன் ஜோடியாக தேசிய விருதுவாங்கிய நடிகர் சூர்யா!

தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் ஜோவுடன் ஜோடியாக நடிகர் சூர்யா தேசிய விருது வாங்கியுள்ளார்.

பிரபலமான தமிழ் திரையுலக தம்பதியினர் நடிகர் சூர்யா மற்றும்  நடிகை ஜோதிகா.  இருவரும் முதன் முதலில் இணைந்து நடித்த படம், பூவெல்லாம் கேட்டுபார்.  1999ல் இயக்குநர் வசந்த் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் இருவரும் ஜோடியாக இணைந்து நடித்தனர். இந்த திரைப்படத்தில் இருவரும் நடிக்க ஒப்புக்கொள்ளும் போது இவர் தான் நமது வாழ்க்கைத் துணை  என  இருவருமே யோசித்திருப்பார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அதன் பின்னர் இருவரும் அடுத்தடுத்து ”உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, ஜூன் ஆர், ஜில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அதில் , 2005ல் வெளியான மாயாவி திரைப்படத்திற்குப் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தமிழ் சினிமாவில் இருந்து வரும் ஒரு எழுதப்படாத விதியாக இருப்பது, திருமணம் ஆன கதாநாயகிகளை சினிமாவில் சேர்க்க தயாரிப்புக் குழு சம்மதிப்பதில்லை. அது ஒரு வியாபார யுக்தியாக உள்ளது. அதே நேரத்தில், பெண்கள் வீட்டில் இருந்து குடும்பத்தை கவனிக்க வேண்டும் என்ற பொதுப் புத்தியும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. 

பத்து ரூபாய்க்கு நடிக்கச் சொன்னால், நூறு ரூபாய்க்கு நடிப்பவர் என்ற பெயர் பெற்றவர் நடிகை ஜோதிகா. இவரும் திருமணத்திற்குப் பிறகு நடிக்க மாட்டார் என எல்லோரும் பேசிய நிலையில், அவரும் அப்படித்தான் இருந்தும் வந்தார். நடிகர்கள் கம்பேக் கொடுப்பதைப் போல், நடிகைகள் கம்பேக் கொடுப்பார்களா என்ற கேள்வி எல்லாம் தமிழ் சினிமா உலகில் இருந்ததே கிடையாது. அதனை மாற்றி அமைத்தவர், நடிகை ஜோதிகா என்று தான் சொல்ல வேண்டும். அவருக்குள் அப்படியான நம்பிக்கையை அளித்தவர் மலையாள திரையுலகின் நாயகி மஞ்சு வாரியர். மஞ்சு வாரியர் நடிப்பில் மலையாளத்தில் உருவாகி வெளியான படம் ”ஹவ் ஓல்ட் ஆர் யூ”. இந்த படத்தின் தமிழ் வெர்ஷனில் மீண்டும் தனது அசாத்திய நடிப்புடன் திரையில் தோன்றிய ஜோ அனைவரையும் மிரள வைத்தார். 

ஆனால் அதை தொடர்ந்து அனைவரும் எதிர் பார்த்ததைப் போல், ஜோவும் நடிப்பதை தொடர்ந்தார். திருமணத்திற்கு முன்னரும் அதன் பின்னரும் இவர் நடித்த பல படங்களுக்கு இவருக்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அது இன்று வரை சாத்தியப்படவில்லை. கனவாகவே நீடித்து வந்த நிலையில், இன்றைக்கு ஜோதிகா மற்றும் சூர்யா ஆகியோரின் தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டைமெண்ட் நிறுவனம் தயாரித்து ஓடிடி தளத்தில் வெளியாகி 2020ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல், சிறந்த பின்னணி இசை, சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை எனும் ஐந்து விருதுகளை வாங்கி குவித்துள்ளது. சிறந்த நடிகருக்கான விருதினை சூர்யா பெற்றுக்கொள்ளும் போது, நடிகையும் சூர்யாவின் காதல் மனைவியான ஜோதிகா தனது மொபைலில், வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தார். அதேபோல், சிறந்த திரைப்படத்திற்கான விருதினை தயாரிப்பாளர் ஜோதிகா பெற்றுக்கொள்ளும் போது அதனை நடிகர் சூர்யாவும் ஜோதிகாவின் காதல் கணவருமான சூர்யா தனது மொபைலில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தார். இதனை பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமான காதல் காட்சியாக இருந்தது என இவர்களின் ரசிகர்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget