Madurai corporation election 2022 | பாட்டிக்காக ஓட்டு கேட்டு சென்ற பேத்திகள் - உற்சாகப்படுத்திய வாக்காளர்கள்
சின்னமான நாற்காலியை ஆட்டோவில் பிளாஸ்டிக் நாற்காலி கட்டி கையிலும் சின்ன சின்னபிளாஸ்டிக் நாற்காலிகளை தூக்கிக் கொண்டு பிரச்சாரம் செய்தது அனைவரையும் கவர்ந்தது

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிப்ரவரி 19 ஆம் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் பிரச்சாரம் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. இதனையொட்டி தேர்தல் களம் காணும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். காலை, மாலை என இருவேளைகளிலும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் பல்வேறு உத்திகளை கையாண்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.
#Abpnadu மதுரை 42வது வார்டில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் 65 வயதான மூதாட்டி சுசிலாவுக்கு ஆதரவாக அவரது 5 வயது மற்றும் 7 வயது பேத்தி மற்றும் குடும்பத்தினர் பங்கஜம் காலனி பகுதியில் வாக்குகள் சேகரித்தனர். அவரது சின்னமான நாற்காலியை வைத்து பிரச்சாரம் செய்தனர். @reportervignesh . . pic.twitter.com/t3tbtu6ZLz
— Arunchinna (@iamarunchinna) February 15, 2022






















