![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
TN Urban LocalBody Election 2022 | திருவண்ணாமலை : மறு வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளரை வீழ்த்தி சுயேச்சை வேட்பாளர் வெற்றி..
திருவண்ணாமலை நகராட்சியில் மறுவாக்கு எண்ணிக்கையில் நடைபெற்ற 25-வது வார்டில் திமுக வேட்பாளரை வீழ்த்தி சுயேச்சை வேட்பாளர் வெற்றி
![TN Urban LocalBody Election 2022 | திருவண்ணாமலை : மறு வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளரை வீழ்த்தி சுயேச்சை வேட்பாளர் வெற்றி.. TN Urban Local Body Election 2022 Results Independent candidate defeats DMK by 137 votes in 25th ward recounting in Thiruvannamalai TN Urban LocalBody Election 2022 | திருவண்ணாமலை : மறு வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளரை வீழ்த்தி சுயேச்சை வேட்பாளர் வெற்றி..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/22/7dda8f01a8955263345bd2e31a999593_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருவண்ணாமலை நகராட்சியில் கடந்த 19 தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் நகராட்சியில் உள்ள சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 25-வது வார்டில் பெரும்பாக்கம் சாலை, ஏரிக்கரை பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் பழனி இவர், தனது மனைவி ஸ்ரீ தேவிக்கு, திமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 25 வது வார்டில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால் அவருக்கு திமுக சார்பில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், அவர் 25-வது வார்டில் சுயேச்சையாக அவருடைய மனைவி ஸ்ரீதேவியை களம் இறக்கினார். இதனால் தேர்தல் பிரச்சாரத்தில் திமுக வேட்பாளருக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளார்.
இந்த நிலையில்தான் சண்முகா தொழிற்சாலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 19-ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில், சுயேட்சை வேட்பாளர் ஸ்ரீ தேவிக்கு சாதகமான சூழல் நிலவியதாக கூறப்படுகிறது. இதனால் திட்டமிட்ட திமுகவினர் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெறகூடது என்பதால் திமுகவினர் சுயேட்சை வேட்பாளர் வெளிநபர்கள் மூலம் கள்ளவாக்கு போடப்பட்டுள்ளார் என கூறி,அவர்களுடன் அதிமுக , பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சியனரையும் தம்பக்கம் இழுத்த திமுகவினர் மறு வாக்குப்பதிவு நடத்த வலியுறுத்தி திமுக, அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, 25 வது வார்டில் மறு வாக்குப்பதிவு நடத்த தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, (பிப் 21) தேதி மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. 25-வது வார்டில் மொத்தம் 1,590 வாக்குகளில் 1,193 வாக்குகள் மற்றும் 73.05 சதவீதம் வாக்கு பதிவானது.
அதனைத்தொடர்ந்து இன்று திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் சுயேச்சையாக போட்டியிட்ட ஸ்ரீதேவி, 648 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் முனியம்மாள் 511 வாக்குகளையும் அதிமுக வேட்பாளர் மண்மேகலை 8 வாக்குகளும், பாஜக வேட்பாளர் சுகந்தி 21 வாக்குகளும் மட்டும் பெற்ற நிலையில், திமுக வேட்பாளரை விட137 வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்ரீ தேவி வெற்றி பெற்றார்.
வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர் ஸ்ரீதேவிக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரான பார்த்தசாரதி வழங்கினார்.இதனிடையே, 25-வது வார்டில் போட்டியிட்ட அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)