Tamil Nadu Election Results: உச்சகட்ட எதிர்பார்ப்பில் தமிழ்நாடு! இன்று வாக்கு எண்ணிக்கை! ஆட்சி யாருக்கு?
Tamil Nadu Election Results 2026: தமிழ்நாட்டில் ஆட்சிக் கட்டிலில் அமரப்போவது யார்? என்பதைத் தீர்மானிக்கும் வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது.

Tamil Nadu Election Results 2026: தமிழ்நாட்டில் தேர்தல் என்றாலே பொதுமக்கள் மத்தியில் எப்போதும் ஒரு ஆர்வமும், உற்சாகமும் இருக்கும். அந்த வகையில் தமிழ்நாட்டில் அடுத்து ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? என்பதற்கான வாக்கு எண்ணிக்கையிலும் அதே ஆர்வமும் இருக்கும்.
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை:
கடந்த ஏப்ரல் 23ம் தேதி ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் ஒரே கட்டமாக நடந்த இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது. 234 தொகுதிகளிலும் நடந்த வாக்குப்பதிவிற்கான வாக்கு எண்ணிக்கை இன்று மாநிலம் முழுவதும் உள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் நடக்கிறது.
மிகப்பெரிய எதிர்பார்ப்பு:
பலமிகுந்த கூட்டணியுடன் களமிறங்கிய திமுக, மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் களமிறங்கியுள்ள அதிமுக கூட்டணி, தனக்கென தனி வாக்கு வங்கியை வைத்துள்ள நாம் தமிழர், முதன்முறையாக அரசியல் களத்தில் களமிறங்கி தனித்துப் போட்டியிட்டுள்ள விஜய்யின் தவெக என இந்த நான்கு முனைப்போட்டியால் இந்த தேர்தல் முன் எப்போதும் இ்ல்லாத வகையில் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவுாக்கியுள்ளது.
காலை 8 மணிக்கு இந்த வாக்குப்பதிவு தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு பின்னர் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளது. தமிழ்நாட்டில் இந்த தேர்தலில் 85 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், ஒரு சில கருத்துக்கணிப்புகள் மீண்டும் திமுக ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்துள்ள நிலையில், சில கருத்துக்கணிப்புகள் அறிமுக கட்சியான தவெக ஆட்சியைக் கைப்பற்றும் என்று கணித்துள்ளது. சிலரது கருத்துக்கணிப்பில் அதிமுக ஆட்சியைக் கைப்பற்றும் என்று கணித்துள்ளது.
ஆட்சி யாருக்கு?
கணிக்கவே முடியாத தேர்தலாக இந்த தேர்தல் அமைந்துள்ள நிலையில், ஆட்சியைக் கைப்பற்றப்போவது யார்? என்ற ஆர்வத்தில் ஒட்டுமொத்த தமிழ்நாடுமே ஆர்வமாக உள்ளது. இந்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? என்பதை தீர்மானிப்பதில் தவெக முக்கிய பங்கு வகிக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரியவந்துள்ளது.
அவர்களது வாக்கு சதவீதம் எவ்வளவு இருக்கும்? அவர்கள் எத்தனை தொகுதிகளை கைப்பற்றுவார்கள்? என்ற பலத்த எதிர்பார்ப்பு இந்த முறை எழுந்துள்ளது. தவெக-வின் வருகையால் நாம் தமிழரின் வாக்கு வங்கி மிகப்பெரிய அளவில் சரியுமா? என்ற கேள்வியும் உருவாகியுள்ளது.
இந்த முறை தேர்தல் முடிவுகள் பல தொகுதிகளிலும் மிகவும் சவாலாகவே இருக்கும் என்றே கருதப்படுகிறது. இதனால், சில தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை மிகுந்த எதி்ர்பார்ப்பையும், பரபரப்பையும் உண்டாக்கும் என்றே கருதலாம். வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு பட்டாசுகள், பூக்கள், இனிப்புகள், பொன்னாடை விற்பனையும் நேற்று முதலே தீவிரமாக நடந்து வருகிறது. கோயில்களிலும் ஒவ்வொரு கட்சியினரும் காலை முதலே தீவிர பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
"QR கோட் இல்லையா? நோ என்ட்ரி!" – வாக்கு எண்ணும் மையங்களுக்கு தேர்தல் ஆணையம் போட்ட அதிரடி வேலி
ட்ரெண்டிங் செய்திகள்



















