Puducherry Exit Poll: 2021-ல் சரியாகக் கணித்த எக்ஸிட் போல்.. ரங்கசாமியின் வெற்றியை உறுதி செய்த தரவுகள்! 2026-ல் எப்படி?
Puducherry Election Exit Poll: 2021-ல் புதுச்சேரியில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் மொத்தமுள்ள 30 இடங்களில் 16 முதல் 24 இடங்களை ஏ.ஐ.என்.ஆர்.சி வெல்லும் என கணிக்கப்பட்டது

மேற்கு வங்கத்தில் நாளை (ஏப்ரல் 29) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முடிந்தவுடன், சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நான்கு மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி( யூனியன் பிரதேசம்) பொறுத்தவரை, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் என்ன கணிக்கின்றன என்பதே அனைவரின் கவனமாக உள்ளது.
புதுச்சேரி தேர்தல்:
யூனியன் பிரதேசமாக இருக்கும் புதுச்சேரிக்கும் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி தேர்தல் நடந்து தற்போது அங்கு ஆளுங்கட்சியாக என். ஆர் காங்கிரஸ் உள்ளது. இந்த முறை தேர்தலில் பாஜக, லஜக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ரங்கசாமி தலைமையில் தேர்தலை சந்தித்து. அதே போல் காங்கிரஸ் தலைமையில் திமுக கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்க்கொண்டது.
இத்தேர்தலில் புதுவரவாக வந்தது நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் நேயம் மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்து முதல் முறையாக தேர்தலை சந்தித்தது. ஆரம்பத்தில் என்.ஆர் காங்கிரஸ் மற்றும் தவெக கூட்டணி அமைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அப்படி எதுவும் நடைப்பெறவில்லை.
ஒரே கட்டமாக ஏப்ரல் 9 ஆம் தேதி நடைப்பெற்ற இந்த தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர், இதனால் இம்முறை புதுச்சேரியில் புதிய சாதனையாக 91.23% வாக்குகள் பதிவானது.
2021-ல் நடந்தது என்ன?
இதனால் மக்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளுக்காக காத்துக்கிடக்கின்றனர். கடந்து தேர்தலுக்கு பிந்தையை கருத்துக்கணிப்பு என்.ஆர் காங்கிரஸ்-பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று கணித்தன, கணித்துள்ளன; அதன்படி, மொத்தமுள்ள 30 இடங்களில் 16 முதல் 24 இடங்களை ஏ.ஐ.என்.ஆர்.சி வெல்லும் என கணிக்கப்பட்டது
ஆக்சிஸ் மை இந்தியா, என்டிஏ கூட்டணிக்கு 20 முதல் 24 இடங்களும், யுபிஏ கூட்டணிக்கு 6 முதல் 10 இடங்களும் கிடைக்கும் என கணித்துள்ளது. சி-வோட்டர், என்டிஏ கூட்டணிக்கு 19 முதல் 23 இடங்களும், யுபிஏ கூட்டணிக்கு 6 முதல் 10 இடங்களும் கிடைக்கும் என கணித்திருந்தன. தேர்தல் முடிவில், என்டிஏ 16 இடங்களுடன் அரசாங்கத்தை அமைத்தது.
இந்த முறை அங்கு மும்முனை போட்டியாக தேர்தல் நடைப்பெற்றது, நாளை வெளியாகும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளும் தேர்தல் முடிவுகளும் எந்த அளவுக்கு ஒத்துப்போகிற்து என்பதை மே 4 ஆம் தேதி வரை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்




















