மேலும் அறிய

"வெற்றியும் தோல்வியும் அரசியலில் ஒரு பகுதி" கடைசி அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மோடி!

பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்பு கடைசி அமைச்சரவை கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "வெற்றியும் தோல்வியும் அரசியலில் ஒரு பகுதி" என தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் முடிவுகள், சில கட்சிகளுக்கு ஆச்சரியத்தையும் சில கட்சிகளுக்கு அதிர்ச்சியையும் தந்துள்ளன. கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கும் விதமாக நேற்று அறிவிக்கப்பட்ட முடிவுகள் அமைந்திருக்கின்றன. 370 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகளில் சொல்லப்பட்டது.

தேர்தல் முடிவுகள் 2024: ஆனால், பாஜகவுக்கு தற்போது தனிப்பெரும்பான்மை கூட கிடைக்கவில்லை. 240 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது. மத்தியில் ஆட்சி அமைக்க 272 எம்பிக்களின் ஆதரவு தேவை என்பதால் கூட்டணி கட்சிகளை நம்பியுள்ளது.

தேசிய அளவில் இந்தியா கூட்டணி 234 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. பரபரப்பான அரசியல் சூழலில் ஆட்சி அமைக்க பாஜக முயன்று வருகிறது. ஆனால், பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோரிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

புதிய ஆட்சி அமைக்கும் நோக்கில் பிரதமர் பதவியை மோடி ராஜினானா செய்துள்ளார். அதை குடியரசு தலைவர் திரௌபதி முர்முவும் ஏற்று கொண்டுள்ளார். பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்பு நடந்த கடைசி அமைச்சரவை கூட்டத்தில் சக அமைச்சர்கள் முன்னிலையில் பேசிய மோடி, "வெற்றியும் தோல்வியும் அரசியலில் ஒரு பகுதி. எண்ணிக்கை விளையாட்டு தொடர்ந்து கொண்டு இருக்கிறது" என்றார்.

அமைச்சரவை கூட்டத்தில் நடந்தது என்ன? தொடர்ந்து பேசிய அவர், "கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் நல்ல பணிகளை செய்துள்ளோம். அதைத் தொடர்ந்து செய்வோம். கிடைத்துள்ள தேர்தல் முடிவுகள், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் வெற்றியை முடிவுகள் காட்டுகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த முறையில் பணியாற்றிய மத்திய அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நீங்கள் அனைவரும் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறீர்கள்" என்றார். நடப்பு நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் வரும் 16ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

நடந்து முடிந்த தேர்தலில் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்குவங்கம் போன்ற பெரிய மாநிலங்களில் இந்தியா கூட்டணி மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்தது. குறிப்பாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் பாஜக, அதிமுகவை தோற்கடித்து இந்தியா கூட்டணி சாதனை படைத்துள்ளது.

இந்தியா கூட்டணியை பொறுத்தவரையில், 99 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் சமாஜ்வாதி  கட்சி 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக 29 இடங்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் 22 இடங்களை திமுகவும் கைப்பற்றியுள்ளது. 

இதையும் படிக்க: Lok Sabha Election 2024: “நிதிஷ், சந்திரபாபு நாயுடுவிடம் இதுவரை பேசவில்லை” - இந்தியா கூட்டணி முடிவு பற்றி சரத்பவார் விளக்கம்!

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
Premalatha vs Vijay : தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
Nagercoil Sabarivarman :நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
Vanathi Srinivasan: விசாரணை கைதி மரணம்.. காவல் நிலையம் சித்ரவதைக்கூடமா? .. விஜயை விளாசிய வானதி சீனிவாசன்!
Vanathi Srinivasan: விசாரணை கைதி மரணம்.. காவல் நிலையம் சித்ரவதைக்கூடமா? .. விஜயை விளாசிய வானதி சீனிவாசன்!
Embed widget